கவிதை நீ






கவிதைகளால் நீ செய்யும்
தவறுகளுக்கு,
எனக்கு நான் தரும்
தண்டனை, அதை
படிக்காமல்
இருப்பதுதான்...!

***************************************************

பதிவு எழுதலாம் என்று
எண்ணி அமர்ந்தாலும்
என் பேனா கவிதையே
எழுதுகிறது, சொன்னாலும்
கேட்கவில்லை மனதும்,
இந்த பேனாவும் ! நீ
கொஞ்சம் மனதைவிட்டு
வெளியே செல்லேன்...
தாம்பத்தியம் பதிவை
தொடரவேண்டும் நான்.
அங்கே 'மனதோடு மட்டும்', வெறும்
மரத்தோடு மட்டும் நிற்கிறது...!!??


(இதையும் கவிதைன்னு நினைச்சி படிங்க, வேற என்ன சொல்ல...உங்க தலைஎழுத்து...!! )



-- 

6 comments:

//கவிதைகளால் நீ செய்யும்
தவறுகளுக்கு,
எனக்கு நான் தரும்
தண்டனை, அதை
படிக்காமல்
இருப்பதுதான்...!//

அட.... நல்லா இருக்கே.....

//நீ
கொஞ்சம் மனதைவிட்டு
வெளியே செல்லேன்//

வெளியே போச்சா, இல்லையா!!?

//(இதையும் கவிதைன்னு நினைச்சி படிங்க, வேற என்னை சொல்ல...உங்க தலைஎழுத்து...!! )//

இப்படி சொல்ற மாதிரி இல்லையே கவிதை... நல்லாவே தானே இருக்கு.....

 

//என் பேனா கவிதையே
எழுதுகிறது, சொன்னாலும்
கேட்கவில்லை மனதும்,
இந்த பேனாவு//

arumai

 

அட... கவிதை...

நல்லா இருக்கு.

 

R.Gopi...


//நீ
கொஞ்சம் மனதைவிட்டு
வெளியே செல்லேன்//

//வெளியே போச்சா, இல்லையா!!?//

இல்லைங்க ரொம்ப ஸ்ட்ராங்கா உட்கார்ந்தாச்சு....!

இப்படி ஒரே நாளில் அதிரடியா புயல் மாதிரி பல பதிவிற்கும் வந்து பின்னூட்டம் கொடுத்ததிற்கு நன்றி என்று மட்டும் எப்படி சொல்ல......? தெரியவில்லை....! தொடர்ந்து வாருங்கள்....

வாழ்த்துக்கள் நண்பரே.....

 

சே.குமார்...

நன்றிங்க :))