நிழலாய் நீ...



யாரையும் மனம் நோக 
பேசியறியாத எனக்கு, மறைவாக
நீ  நடத்தும் யுத்தத்தை 
எதிர்கொள்ள எவ்வாறு இயலும்?


உன் கோபம் முன் என் கூக்குரல்
எடுபடாமலே போய்விட்டது...
'கடைசிவரை மறவேன்'  
என்ற வாக்குறுதி இன்று 
காணாமல் ஓடியது எங்கனம்?


நான் எங்கே, யாரிடம் பேசினாலும்
அங்கே நிழலாய் நீ தெரிவதை
எப்படி புரிய வைப்பேன்..?!
சக்தி அற்று, என் சுயம் 
தேடி கொண்டே இருக்கிறேன்....


நீயே நான் என்றே, நான் எண்ண
நீ உன்னில் இருந்து என்னை 
பிரித்தது ஏன்....இந்த பிரிவு
உனக்கு இன்பம் என்றால் 
துன்பமும் வரமே எனக்கு...

வார்த்தையால்  என் இதயம் 
கிழிக்காதே, உனக்கு வலிக்கும் 
என்றே அஞ்சுகிறேன்...


13 comments:

உங்கள் பதிவுகளை மேம்படுத்தப்பட்ட தமிழர்ஸ் இணையத்தில் இணைக்க விரும்பினால் இந்த சுட்டியை சொடுக்கவும்.

தமிழர்ஸ்

 

நீ நடத்தும் யுத்தத்தை
எதிர்கொள்ள எவ்வாறு இயலும்?
அவர்களுக்கு ஒன்னும் தெரியவில்லை என்று நீங்கள் யுத்தம் செய்கிறீர்கள் தெரிந்து விட்டது இனி யுத்தம் வேண்டாம்...

வாக்குறுதி இன்று
காணாமல் ஓடியது எங்கனம்?
வாக்குறுதி தந்து விட்டு இப்படி ஏமாற்றினால் எப்படி

உனக்கு இன்பம் என்றால்
துன்பமும் வரமே எனக்கு//
ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு ..

 

//வார்த்தையால் என் இதயம்
கிழிக்காதே, உனக்கு வலிக்கும்
என்றே அஞ்சுகிறேன்...//


:))))

 

//'கடைசிவரை மறவேன்'
என்ற வாக்குறுதி இன்று
காணாமல் ஓடியது எங்கனம்?//

பொறுமையாக தேடி பாருங்கள்
சத்தியம் உள் இருக்கும்..
இன்னொரு முறை தேடிப் பாருங்கள்

//வார்த்தையால் என் இதயம்
கிழிக்காதே, உனக்கு வலிக்கும்
என்றே அஞ்சுகிறேன்...//
புரிதல் ... வாழ்த்துக்கள்

 

romba nalla iruku kavithai kousalya

- sowmya

 

//யாரையும் மனம் நோக
பேசியறியாத எனக்கு, மறைவாக
நீ நடத்தும் யுத்தத்தை
எதிர்கொள்ள எவ்வாறு இயலும்?//

கேள்விக்கு பின் இருக்கும் காதல் அப்பட்டமாய் தெரிகிறது..... நச்!

//நான் எங்கே, யாரிடம் பேசினாலும்
அங்கே நிழலாய் நீ தெரிவதை
எப்படி புரிய வைப்பேன்..?!
சக்தி அற்று, என் சுயம்
தேடி கொண்டே இருக்கிறேன்//

நிழலாய் தொடர்வதுதான் தானே காதலின் சக்தி...என்று விளக்கும் வரிகள்!


//நான் என்றே, நான் எண்ண
நீ உன்னில் இருந்து என்னை
பிரித்தது ஏன்....இந்த பிரிவு
உனக்கு இன்பம் என்றால்
துன்பமும் வரமே எனக்கு...//

உண்மையான காதல் துன்பத்தை....வரமாக்கும்....மீண்டும் நச்!

over all..simply............SUPERB!

 

தமிழர்ஸ்...

நன்றி.

 

சௌந்தர்...

//அவர்களுக்கு ஒன்னும் தெரியவில்லை என்று நீங்கள் யுத்தம் செய்கிறீர்கள் தெரிந்து விட்டது இனி யுத்தம் வேண்டாம்...//

ஆமாம் வேண்டாம் ...!!

//வாக்குறுதி தந்து விட்டு இப்படி ஏமாற்றினால் எப்படி//

அதானே..!!

//ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு .//

சௌந்தருக்கு தெரியுது...ம்.....

 

கோவை குமரன்...

//இன்னொரு முறை தேடிப் பாருங்கள்//

சரி....!!

//புரிதல் ... வாழ்த்துக்கள்//

நன்றி.

 

திவ்யாம்மா...

//romba nalla iruku kavithai kousalya //

கவிதை என்று ஒத்து கொண்டதுக்கு நன்றி தோழி....!!

 

dheva...

//கேள்விக்கு பின் இருக்கும் காதல் அப்பட்டமாய் தெரிகிறது..... நச்!//

சரியான கண்டு பிடிப்புதான்.....!!

//over all..simply............SUPERB!//

இதை நீங்கதான் சொல்றீங்களா...? உங்கள் கவிதைகளை விடவா?

 

LK...

//:))))//

ரொம்ப யோசித்து கமெண்ட் எழுதியதுக்கு மகிழ்கிறேன்.

:)

 

//யாரையும் மனம் நோக
பேசியறியாத எனக்க//

உங்கள் கவிதைவரிகளில் உங்களின் நல்லமனது புரிகிறது .