இயற்கை....!

   
   
   பல அடிகள் வரை ஆழமாய் 
   தோண்டி.....
   தூண்களை எழுப்பி வெகு
   உறுதியாய் கட்டுமானம்
   வீடு எழும்பிற்று !
   கட்டியவனின் பெருமிதம் ,
   பலமான அஸ்திபாரம்
   எந்த புயல் மழைக்கும்
   என் வீடு தாங்கும்...??
   என்னே... 
   அவனின் அறியாமை
   வியந்தது இயற்கை....!
   பூமி பந்தே எந்த பிடிப்பும்
   இல்லாமல் அந்தரத்தில் !!?   



2 comments:

இயற்கைக்கு நியதி அவனுக்கு நம்பிக்கை

 

அறியாமைதான் மனிதனை அகந்தைக்கு காரணம்