சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
சண்டையிட்டு அத்தனையிலும்
தோல்வி பிடிக்காத நான்
தோற்று, நீ வெல்வதை ரசித்து !
இதழ்கள் வலிக்கும் வரை
பேசிய பின்னும்
இன்னும் மிச்சம் இருக்கிறதே
வார்த்தைகள்.....!?
உன்னிடம் இருந்து திரும்பி
வர அடம் பிடிக்கும்
குழந்தையாய் நான் !
பிடிவாதமாய் செல்ல மறுத்து
என்னிடமிருக்கும் நீ....!
இவை இணையும் புள்ளியில்
நான், நீ மறைந்து
நாம் என்ற ஒன்றாக !?
அதுவரை தொடரட்டும்
இந்த அடமும் பிடிவாதமும் !!?
17 comments:
ரெம்ப நல்லா இருக்கு அக்கா...
கவிதை அருமை
//அதுவரை தொடரட்டும்
இந்த அடமும் பிடிவாதமும் !!?
//
தொடரட்டும்
சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
சண்டையிட்டு அத்தனையிலும்
தோல்வி பிடிக்காத நான்
தோற்று, நீ வெல்வதை ரசித்து /////
நீங்க சண்டை போடுறதை கூட ரசிகிறாங்க
அதுவரை தொடரட்டும்
இந்த அடமும் பிடிவாதமும்////
ரெண்டு பேரும் தொடருங்கள் உங்கள் பிடிவாதத்தை
//இதழ்கள் வலிக்கும் வரை
பேசிய பின்னும்
இன்னும் மிச்சம் இருக்கிறதே
வார்த்தைகள்.....!?
//
உணர்வை இழுத்துப் பிடித்து வார்த்தைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் விதம் அருமை...!
ganesh...
நன்றி கணேஷ்
LK...
//தொடரட்டும்//
:))
சௌந்தர்...
//நீங்க சண்டை போடுறதை கூட ரசிகிறாங்க//
வேற வழி...?!
நன்றி சகோ.
:)
dheva...
//உணர்வை இழுத்துப் பிடித்து வார்த்தைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் விதம் அருமை...!//
சரியான புரிதலுக்கு நன்றி தேவா...
//இதழ்கள் வலிக்கும் வரை
பேசிய பின்னும்
இன்னும் மிச்சம் இருக்கிறதே
வார்த்தைகள்.....!?//
கிளாஸ் :)
Balaji saravana...
///கிளாஸ் :)///
எந்த கிளாஸ் என்று சொல்லலையே....?
1st ஆ 2nd ஆ.....?!!!!
:)))))
நன்றி.
nice
நல்லா இருக்கு..............
உங்க கவிதை...............
நான் சொன்ன கிளாஸ், டாப் கிளாஸ் :)
அப்ப மாடில இருக்கிற கிளாஸான்னு கேக்காதீங்க ;)
பிரியமுடன் பிரபு...
வருகைக்கு ரொம்ப நன்றி..
வேங்கை...
இந்த வாசலுக்கு வந்த உங்களுக்கு என் நன்றி..
Balaji saravana சொன்னது…
//நான் சொன்ன கிளாஸ், டாப் கிளாஸ் :)
அப்ப மாடில இருக்கிற கிளாஸான்னு கேக்காதீங்க ;)//
டாப் கிளாஸ் என்று சொன்னதுக்கு ரொம்ப நன்றி...
நல்லவேளை சொல்லிடீங்க இல்லேன்னா மறுபடி கேள்வி கேட்டு இருப்பேன்...
:))
Post a Comment