மனிதனாய்.....!

               
               இஸ்ரேலில் நடந்தாலும்
               இலங்கையில் நடந்தாலும்
               இழப்புகள் இழப்புகள் தான்....
               இறப்பவர்கள் யாராக இருப்பினும் 
               ஒரு தாயின் பிள்ளைகள் அன்றோ ?!
               நிறுத்தப்படுமா மனித அழிப்புகள் ?
               போர்களும், குண்டுகளும் யாருக்காக...?
               எதற்காக....? ஏன்.....? 
               தனிப்பட்ட விருப்பு வெறுப்பா ?
               விரோதமா....? 
               தன் வீடு மட்டும் பாதுகாப்பில்
               என்ற சுயநலமா ?
               நாளை பீரங்கி திரும்பும்
               உன் வீட்டையும் நோக்கி !?
               குண்டுகள் பாயும் உன் மீதும் ! 
               செத்து தானே ஆக வேண்டும்
               கத்தி எடுத்தவன் கத்தியால்...!!?
               எதை பெற இந்த போராட்டம்
               எல்லாம் இழந்தும்....!?
                ..............
                ...............
               அறுபது ஆண்டுகள் தான்
               சராசரி  ஆயுள்.....
               வாழ்ந்து விடுவோம்
               சாவதற்கு முன் கொஞ்சம்
               மனிதனாய்,  மனித நேயத்துடன்  !!



19 comments:

இது ஏதோ உள்குத்து இருக்கே யாரை சண்டை போட வேண்டாம் சொல்றிங்க

 

போர்களும், குண்டுகளும் யாருக்காக...?
எதற்காக....? ஏன்..//

பதில் தெரியாத கேள்விகள்..

//சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!//
இதை கண்டிப்பாய் முயற்சி செய்கிறேன் சகோ :)

 

கடைசி வரிகள் அருமை

 

பட்டாலும் திருந்தாத ஒரு இனம் மனித இனம் தான்.

 

//அறுபது ஆண்டுகள் தான்
சராசரி ஆயுள்.....வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம் மனிதனாய்,மனித நேயத்துடன்!!//

பின்பற்ற வேண்டிய வாக்கியம்

 

//வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!//

சூப்பர் சகோ ..நல்லா இருக்கு

 

very nice kousalya.especially the last two lines

 

என்ன சொல்லி என்ன... ஒரு இடத்தில் ஒரு இனத்தையே அழித்து விட்டனரே...

 

// சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!

i like this statement. very nice. vazhthukkal.

 

மனிதநேயம் !

 

//வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய்//

ரசித்தேன்

 

வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!


...rightly said!

 

எதை பெற இந்த போராட்டம்
எல்லாம் இழந்தும்

நல்ல கேள்வி

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

 

//அறுபது ஆண்டுகள் தான்
சராசரி ஆயுள்.....
வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!//thamizheezham amaikka padu paduvom
polurdhayanithi

 

சண்டை வேண்டவே வேண்டாம்..

சமாதானமே சிறந்தது என்று நாம் சொன்னால் யார் கேட்க தயாராய் இருக்கிறார்கள்?

//அறுபது ஆண்டுகள் தான் சராசரி ஆயுள்..... வாழ்ந்து விடுவோம் சாவதற்கு முன் கொஞ்சம் மனிதனாய், மனித நேயத்துடன் !!//

இதை அனைவரும் உணரும் படி செய்வோம்...

 

//வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!//

correct....

nalla kavithai...

 

http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,பெற்று கொள்ளவும்.

 

பாதுகாப்பு படை என்று பெயர்வைத்துக்கொண்டு மற்றவர்களை சாகடிப்பது மனிதரில் மட்டும்தான் உண்டு. நல்ல கவிதை.