காதல் துளிகள்...!

         
         உனக்கான என் கவிதைகளின் 
         ஊடாய் நீ விட்டு செல்லும்
         மௌனங்கள் !
         என்னிடம்  சொல்லி விட்டன 
         உன் காதலை !


         இப்போதெல்லாம் 
         வடி கட்டிய பின்னே 
         என் சுவாசம் 
         வெளி செல்கிறது ! 
         உள்ளே உன் 
         நினைவுகளின் மிச்சங்கள் !!


         என் விடாபிடியான 
         பிடிவாத அன்பில்
         சண்டை, சமாதானம் 
         வந்தது, போனது 
         எல்லாமே காதல் தான் !!

          
          என்னை தனியாக 
          இருக்கவிடுவதில்லை
          துணையாக பக்கத்தில் 
          உன் நினைவுகள் !!

          
          உன் நினைவு மட்டும் 
          போதும் என்று 
          விலகியே  இருக்கிறாய்          
          என் பேராசை புரியாமல் !!?




********************************************************************

         
          


                        HAPPY NEW YEAR TO YOU ALL  


         

49 comments:

உன் நினைவு மட்டும்
போதும் என்று
விலகியே இருக்கிறாய்
என் பேராசை புரியாமல் !!?///

அட டா பேராசையா...அது என்ன..?

 

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

என்னை தனியாக
இருக்கவிடுவதில்லை
துணையாக பக்கத்தில்
உன் நினைவுகள் !!////

ஓஹ நினைவே இருக்கவிடுவது இல்லையா அது சரி

 

காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு...

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

 

//இப்போதெல்லாம்
வடி கட்டிய பின்னே
என் சுவாசம்
வெளி செல்கிறது ! //

:)

 

உங்க படைப்பு மிக அருமையா இருக்குங்க....
இப்படி காதல் கவிதயில கலக்குற நீங்க உங்க தலைப்பை கொஞ்சம் தமிழ்ல “வாசல்”ன்னு வச்சா ரொம்ம்ப நல்லாயிருக்குமுங்க..... கவிதைக்கு பாராட்டுக்கள்.

 

//என்னை தனியாக
இருக்கவிடுவதில்லை
துணையாக பக்கத்தில்
உன் நினைவுகள் !!//

அழகான காதல் வரிகள்...

 

//இப்போதெல்லாம்
வடி கட்டிய பின்னே
என் சுவாசம்
வெளி செல்கிறது ! //

ஏன் அவ்வளவு டஸ்டா என்ன???

 

/ என்னை தனியாக
இருக்கவிடுவதில்லை
துணையாக பக்கத்தில்
உன் நினைவுகள் !! /

:) உண்மைதான்...

 

என்னை தனியாக
இருக்கவிடுவதில்லை
துணையாக பக்கத்தில்
உன் நினைவுகள் !!
அருமையான உணர்வுள்ள உண்மையான வரிகள்

 

சி. கருணாகரசு கூறியது...

//உங்க தலைப்பை கொஞ்சம் தமிழ்ல “வாசல்”ன்னு வச்சா ரொம்ம்ப நல்லாயிருக்குமுங்க.....//

எனக்கு ஏன் இது இப்ப வரை தோணவே இல்லை...? இப்ப மாத்திட்டேன்...நன்றிங்க.

 

Kousalya கூறியது...
சி. கருணாகரசு கூறியது...

//உங்க தலைப்பை கொஞ்சம் தமிழ்ல “வாசல்”ன்னு வச்சா ரொம்ம்ப நல்லாயிருக்குமுங்க.....//

எனக்கு ஏன் இது இப்ப வரை தோணவே இல்லை...? இப்ப மாத்திட்டேன்...நன்றிங்க.

December 28, 2010 7:14 PM//

ரொம்ப பெருமையா இருக்குங்க....

இப்ப பாருங்க உங்க வலை கூடுதல் கம்பீரத்தோட இருப்பதை....

மிக்க நன்றிங்க....
நன்றி நன்றி நன்றி.

 

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்

 

சிலசமயங்களில் நினைவே போதும் கௌசி....அவ்வளவு சுகமும் சந்தோஷமும்.இனிய புதுவருட வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் !

 

கவிதை நன்று... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

 

கவிதை அழகாக இருக்கிறது..
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள...

 

//என்னை தனியாக
இருக்கவிடுவதில்லை
துணையாக பக்கத்தில்
உன் நினைவுகள் !!//
அருமையான வரிகள்

 

கலக்கல் கவிதை . ஹேப்பி நியூ இயர் .

சொல்ல மறந்துட்டேன் ஸ்டில்லும் சூப்பர்

 

உன்னை அழைக்க உதடு வரை வந்த உன்பெயரை சொல்லாமல் விழுங்குகிறேன்
உன் பெயர் கூட என்னை விட்டு விலகாமலிருக்க!

காதல் மேகத்தின் கடைசி சொட்டு வரை தேன் தான்!
அந்தப் படத்தைப் போல காதல் என்றதும் உங்களுக்கும் பெரிய சிறகுகள் முளைத்துவிடுகிறதே சகோ, கவிதை வானில் சிறகடிக்க :)
மனமகிழ்ச்சியுடன் புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள்! :)

 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்/கவிதை அருமை.

 

// உன் நினைவு மட்டும்
போதும் என்று
விலகியே இருக்கிறாய்
என் பேராசை புரியாமல் !!?//

வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனையுடன் கவிதை அருமை

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

 

//இப்போதெல்லாம்
வடி கட்டிய பின்னே
என் சுவாசம்
வெளி செல்கிறது ! //

சொல்ல வார்த்தை இல்லை.
அருமையான கவிதை.

 

//இப்போதெல்லாம்
வடி கட்டிய பின்னே
என் சுவாசம்
வெளி செல்கிறது !
உள்ளே உன்
நினைவுகளின் மிச்சங்கள் !!//

//உன் நினைவு மட்டும்
போதும் என்று
விலகியே இருக்கிறாய்
என் பேராசை புரியாமல் !!?//

அட அட அட.. காதல் காதல்.. :) ரசித்து படித்தேன்..!! குறிப்பாக மேலிருக்கும் வரிகளை..! :) அழகான கவிதை..!!

 

ஆஹா... அருமை..அற்புதம்.. கலக்கிடிங்க... வரிகளில் காதல் சொட்டுது. கவிதையின் காதல் மனம் பதிவுலம் முழுவதும் வீசுது. எல்லாம் சொல்லிட்டனா? ஏதாவது சொல்ல மறந்து இருந்தா சொல்லி விடுங்க. அடுத்த கவிதைல மறக்காம சொல்லிடறேன்... :)

 

சௌந்தர்...

உனக்கும் வாழ்த்துக்கள்.

//ஓஹ நினைவே இருக்கவிடுவது இல்லையா அது சரி//

நினைவே இம்சை தான்...!!

 

sakthistudycentre.blogspot.com கூறியது...


//என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...//

follow பண்ணிடலாம்... உங்களின் முதல் வருகைக்கும், ரசனைக்கும் நன்றி.

 

@@நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

:)))

நன்றி


@@சங்கவி...

நன்றி சகோ


@@அன்பரசன் கூறியது...

//ஏன் அவ்வளவு டஸ்டா என்ன?//

நினைவுகள் தூசிகள் போல் சுவாசத்தில் பரவி இருக்கின்றன என்று சொல்றீங்களா...? சரிதான்... :))))))

 

@@வினோ கூறியது...

//:) உண்மைதான்...//

அப்படியா சரிதான்...நடக்கட்டும் சகோ.

:))

 

dineshkumar கூறியது...


//அருமையான உணர்வுள்ள உண்மையான வரிகள்//

உங்களுக்கும் அப்படித்தானா..? சரிதான் பலரும் இந்த நிலைமையில் தான் இருக்குறாங்க போல...?!

:))

 

@@சி.கருணாகரசு...

//இப்ப பாருங்க உங்க வலை கூடுதல் கம்பீரத்தோட இருப்பதை..//

ஓ...அப்படியா...? மகிழ்கிறேன். அதற்கு ஏன் இத்தனை நன்றிங்க??

:))

 

@@இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்//

வாழ்த்துகள் சொல்ல வந்ததுக்கு நன்றி பாபு...

கவிதை இன்னைக்கு புரிஞ்சுதா??

:))

 

@@ஹேமா கூறியது...

//சிலசமயங்களில் நினைவே போதும் கௌசி....அவ்வளவு சுகமும் சந்தோஷமும்.இனிய புதுவருட வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் !//

உண்மைதான் ஹேமா.

அந்த நினைவுகளின் தாலாட்டுதான் ஒவ்வொரு இரவிலும் என்னை உறங்க வைக்கிறது...!

புது வருடம் சந்தோசங்களை கட்டி இழுத்து வந்து உங்களிடம் சேர்க்கட்டும் என்று பிராத்திக்கிறேன்.

பிரியங்களுடன் உங்கள் தோழி.

 

@@philosophy prabhakaran கூறியது...

//கவிதை நன்று... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..//

நன்றி பிரபாகர்.

:))

 

வெறும்பய கூறியது...

//கவிதை அழகாக இருக்கிறது..
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள...//

ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெயந்த்


@@Meena...

தொடர் வருகைக்கு நன்றி தோழி. உங்கள் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

:))

 

சி.பி.செந்தில்குமார் கூறியது...

//கலக்கல் கவிதை . ஹேப்பி நியூ இயர் .சொல்ல மறந்துட்டேன் ஸ்டில்லும் சூப்பர்//

ரொம்ப சந்தோசம் உங்க வாழ்த்திற்கு...அந்த ஸ்டில் பெண்ணை எனக்கும் ரொம்ப பிடிக்கும்...

:))

 

@@Balaji Saravana ...

///உன்னை அழைக்க உதடு வரை வந்த உன்பெயரை சொல்லாமல் விழுங்குகிறேன்
உன் பெயர் கூட என்னை விட்டு விலகாமலிருக்க!///

வாவ் சூப்பர்... கவிதைக்கு கமெண்ட் மற்றொரு கவிதை !! ரொம்ப நல்லா இருக்கு பாலா.

அந்த படத்தையும் விட்டு வைக்கல போல...நல்ல ரசனை உங்களுக்கு...

:))

 

@@asiya omar கூறியது...

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

நன்றி தோழி.


@@மாணவன்...

உங்கள் வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் இந்த புத்தாண்டு இனிமையாக இருக்க என் வாழ்த்துக்கள்.

 

பால் [Paul]...

ரொம்ப ரசிருக்கீங்கனு உங்க அட சொல்கிறது...

தொடர் வருகைக்கு நன்றி

 

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//ஆஹா... அருமை..அற்புதம்.. கலக்கிடிங்க...//

ரசனைக்கு ரொம்ப நன்றிங்க !! :)

//வரிகளில் காதல் சொட்டுது.//

அட அப்படியா ?? :)

//கவிதையின் காதல் மனம் பதிவுலம் முழுவதும் வீசுது.//

கண்டிப்பா இந்த இடத்தில நான் மகிழ்கிறேன் சொல்லியே ஆகணும். என்ன அழகா சொல்லி இருக்கீங்க...ரொம்ப மகிழ்கிறேன்.

//எல்லாம் சொல்லிட்டேனா//

நான் பதில் சரியாய் சொல்லிட்டேனா ?

//ஏதாவது சொல்ல மறந்து இருந்தா சொல்லி விடுங்க. அடுத்த கவிதைல மறக்காம சொல்லிடறேன்... :)//

அது நிறைய இருக்கு...மெயில் பண்றேன்...!!!! ஒ.கே

நன்றி மீண்டும் வருக

 

VELU.G ...

நன்றிங்க...புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

அருமையான கவிதை படைத்து இருக்கின்றீர்கள்.

 

kathalunarvukalin velipadu..

Arumai.

 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

புதுவருட வாழ்த்துக்கள் தோழி...

 

beautiful.Belated wishes for the happy and properous new year 2011

 

காதலில் உரு[க்]கும் கவிதை..

 

உங்கள் கவிதைகள் அனைத்தும் அழகாக இருக்கிறது