என் உயிரே...!

                                               

                                                நீ பயணிக்கும் பாதைகளில்
                                                என் நேசம் பின் தொடருவதை
                                                நீ அறியாய் !

                                                உன் பெயரை கையெழுத்திட்டு கிழித்த
                                                என் காசோலைகளின் எண்ணிக்கை
                                                நீ அறியாய் !

                                                நீ எழுதி கொடுத்த காகித பிரதியை
                                                அலங்கரித்து தினம் பூஜிப்பதை
                                                நீ அறியாய் !
                                                
                                                ஆக்ரோசமாய்
                                                உன்னை விரும்பும் 
                                                உலகின் கடைசி உயிர் 
                                                நான் மட்டுமே
                                                நீ அறியாய் !!?

                                    *****************************************

                                                நீ பேசுவது ஒன்றும் செவி 
                                                சென்று சேருவதில்லை
                                                அதற்கு முன்  
                                                என் இதயம் 
                                                வாங்கிவிடுவதால் !!

                                    *****************************************

                                                என் ஒரே நம்பிக்கை
                                                பந்தயத்தில் 
                                                முன்னால் பலர் சென்றாலும்
                                                முடிவில் 
                                                 நீதான் வருவாய் முதலில் !! 
                                               




24 comments:

நீ பேசுவது ஒன்றும் செவி
சென்று சேருவதில்லை
அதற்கு முன்
என் இதயம்
வாங்கிவிடுவதால் !!///

அப்போ எவ்வளவு நேரம் பேசினாலும் வேலைக்கு ஆகாது

 

என் ஒரே நம்பிக்கை
பந்தயத்தில்
முன்னால் பலர் சென்றாலும்
முடிவில்
நீதான் வருவாய் முதலில் !!///

பந்தயம் ணா எந்த பந்தயம் சொல்லுங்க

 

சௌந்தர் கூறியது...


//பந்தயம் ணா எந்த பந்தயம் சொல்லுங்க//

ம்... எந்த பந்தயம்னாலும் என் ஆள்தான் முதலில் வருவார் அப்படின்னு அர்த்தம் !! :)))

 

ரொம்ப நல்ல இருக்குதுங்க!

குறிஞ்சி குடில்

 

ரொம்ப வெறித்தனமான லவ்வா இருக்குமோ?.

 

//ஆக்ரோசமாய்
உன்னை விரும்பும்
உலகின் கடைசி உயிர்
நான் மட்டுமே
நீ அறியாய் !!?//

மொரட்டு நேசமா இருக்கும்போல...

நல்லாருக்குங்க....சூப்பர்

 

காதல் வந்தால் இப்படித்தானோ

கவிதை சூப்பர்

 

paaraaddukal.
http://kaatruveli-ithazh.blogspot.com/

 

// நீ பேசுவது ஒன்றும் செவி
சென்று சேருவதில்லை //

ஸ்பீக்கர் அவுட்டா...

 

//நீ பேசுவது ஒன்றும் செவி சென்று சேருவதில்லை அதற்கு முன் என் இதயம் வாங்கிவிடுவதால் //

ஓ! டேக் டைவர்சன் ஆயிடுதோ?! #டவுட்டு ;)

//உன் பெயரை கையெழுத்திட்டு கிழித்த என் காசோலைகளின் எண்ணிக்கை நீ அறியாய் //
அந்தக் கையெழுத்த அவரோட காசோலைல போட்டிருக்கலாமே! ஜஸ்ட் மிஸ் ;)

//நீதான் வருவாய் முதலில் !! //
:))

 

அடடே அழகா இருக்கே கவிதை.. :)

 

//ஆக்ரோசமாய்
உன்னை விரும்பும்
உலகின் கடைசி உயிர்
நான் மட்டுமே
நீ அறியாய் !!?//



என்னமா யோசிக்கிறீங்க..

 

நீ பேசுவது ஒன்றும் செவி
சென்று சேருவதில்லை
அதற்கு முன்
என் இதயம்
வாங்கிவிடுவதால் !!////////////

அருமையான வரிகள்...

 

ஒவ்வொரு வரிகளுமே அருமை

 

காதல் கவிதைக்கான என் கைத்தட்டுகள்.

 

@@ சௌந்தர் கூறியது...

//அப்போ எவ்வளவு நேரம் பேசினாலும் வேலைக்கு ஆகாது//

சரியாய் படி இன்னொரு முறை...

:))


@@ Kurinji கூறியது...

நன்றி தோழி.


@@ இனியவன் கூறியது...

//ரொம்ப வெறித்தனமான லவ்வா இருக்குமோ?.//

ஒரு விதத்தில அப்படிதான்... :))


@@ மாணவன் கூறியது...


//மொரட்டு நேசமா இருக்கும்போல...//

மிரட்டும் நேசமும் கூட...! :))



@@ dineshkumar கூறியது...

//காதல் வந்தால் இப்படித்தானோ//

அப்படினா என்னனு தெரியாத மாதிரி இது என்ன கேள்வி ?? :))))


@@ முல்லை அமுதன்...

முதல் வருகைக்கு நன்றி



@@ Philosophy Prabhakaran கூறியது...


//ஸ்பீக்கர் அவுட்டா.//


பேசினதை கேட்டு கேட்டு ஒரு வேளை specker அவுட் தான் போல...

:))

 

Balaji saravana கூறியது...

//நீ பேசுவது ஒன்றும் செவி சென்று சேருவதில்லை அதற்கு முன் என் இதயம் வாங்கிவிடுவதால் //

//ஓ! டேக் டைவர்சன் ஆயிடுதோ?! #டவுட்டு ;)//

அதே தான் !! :))

//அந்தக் கையெழுத்த அவரோட காசோலைல போட்டிருக்கலாமே! ஜஸ்ட் மிஸ் ;)//

உள்ள போக யோசனை சொல்றது மாதிரி இருக்கு பாலா !? :)))

 

@@ பால் [Paul] கூறியது...

//அடடே அழகா இருக்கே கவிதை.. :)//

ஆச்சரிய குறி காணும்...?!

நன்றி :)))

 

@@ சே.குமார்...

நன்றி சகோ.


@@ இந்திரா கூறியது...

//என்னமா யோசிக்கிறீங்க.//

என் காதல் மேல் உள்ள நம்பிக்கை இப்படி சொல்லுது இந்திரா. :))

 

@@ ஜெ.ஜெ...

நன்றிங்க.


@@ தமிழ்த்தோட்டம்...

வருகைக்கு நன்றி

 

@@ சி. கருணாகரசு கூறியது...

//காதல் கவிதைக்கான என் கைத்தட்டுகள்.//

ரொம்ப நன்றிங்க...ஆனா எனக்கு கேட்கிற மாதிரி தட்ட கூடாதா...??!!

:))

 

@@ தோழி பிரஷா...

ரசனைக்கு நன்றி பிரஷா.



@@ தமிழ் உலகம்...

நன்றிங்க ...இணைகிறேன்