தவம்...!

                                                   
     தவம் கிடக்கிறோம்
     நானும்  தொலை பேசியும் !         
     சிணுங்கும் 
     ஒவ்வொரு முறையும்
     உன் குரலை எதிர்பார்த்து 
     சலித்த மனது !   
     என்றோ வரும் 
     அழைப்புக்காய்
     ஒவ்வொரு நொடியும்
     காத்திருக்கிறது
     தொலை பேசியும்
     தொலைந்த மனதும் !
     தொல்லையடா உன்னுடன்
     இன்றாவது
     பேசித்தொலை தொலைபேசி !!







 நலம் விசாரிப்பு
 ஊடல் 
 கோபம்
 தவிப்பு
 கண்ணீர்
 கெஞ்சல்
 கொஞ்சல்
 கூடல்
 சிரிப்பு
 அனைத்தும் 
 நிகழ்ந்துவிடுகிறது
 தொலைபேசியில்...
 நான் தனித்தில்லை
 இவ்வாறு  
 வாழ்ந்து கொண்டிருக்கிறேன்  
 உன்னுடன் !!






25 comments:

தொலைபேசித்தவம் என்றுமே இனிமையானது

 

நல்ல கவிதை.
எல்லையிலா ஆனந்தம் எப்ப வரும்?
தொல்லையிலா-தொடர்பு துண்டிக்கா
இணைப்பு கிடைத்தால், இன்பம் வரும்,
கவிதை வரும், கனவு வரும், காதலும் வரும்.
( புலியை பார்த்து இந்த பூனை சூடு போட்டுகொண்டதோ! )

 

நல்ல கவிதை...
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

 

//தொல்லையடா உன்னுடன்
இன்றாவது
பேசித்தொலை தொலைபேசி !!//

என்ன கௌசல்யா சார் ஊருக்கு
போய் இருக்காரா?
கவிதை அருமை.............

 

அலெக்சாண்டர் ஹிரகாம் பெல்லுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேணும்!

 

பிரிந்து வாழும் காதல் ஜோடிகளுக்கு பொருத்தமான கவிதை..

 

ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறது
தொலை பேசியும்
தொலைந்த மனதும் !
தொல்லையடா உன்னுடன்////

ரொம்ப தொல்லையா...?

உங்கள் தவம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...



இவ்வாறு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடன் !!///

நீங்க ரொம்ப நல்லவங்க....

 

கௌசி...காதலோடு காத்திருப்பு சுகம் உங்கள் கவிதைகள்போல !

 

அருமை
வாசித்து
வாக்களித்தேன்

 

காதலில் காத்திருத்தல் சுகம்

 

Avoid using cellphone :)
anyway superb poem.

 

தொலைபேசி கைக்கிளையா !!!

வாழ்த்துக்கள்

விஜய்

 

பில்லு எகிரட்டும்...

 

தொலைவிலிருந்து தொலைபேசியால் தொட்டுட்டீர்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

 

அருமை .வாழ்த்துக்கள்.

 

// பேசித்தொலை தொலைபேசி//

ada!

 

//இன்றாவது பேசித்தொலை தொலைபேசி//

கலக்கல்...

//அனைத்தும்
நிகழ்ந்துவிடுகிறது
தொலைபேசியில்...
நான் தனித்தில்லை
இவ்வாறு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடன் !!//

பிரிவுத்துயர் நீக்கும் சமாதானமா அக்கா?

அருமை.. வாழ்த்துக்கள்..

 

Hi, good work! Excellent blog. I am an educator and I am constantly gathering information, I invite you to visit the mine on philosophy, literature and film. If you want to know, the address is:

http://alvarogomezcastro.over-blog.es

Greetings from Santa Marta, Colombia.

 

கவிதை மனதில் தைக்கிறது....

 

//என்றோ வரும்
அழைப்புக்காய்
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறது
தொலை பேசியும்
தொலைந்த மனதும் !//

...ஹ்ம்ம்.. ரொம்ப அழகா இருக்குங்க.
எதிர்பார்ப்பதிலும், காத்திருத்தலிலும் கூட ஒரு வலி கலந்த சுகமும் உண்டு.. :-))

 

// அனைத்தும்
நிகழ்ந்துவிடுகிறது
தொலைபேசியில்...//

ஓஹோ..

 

தவம் கிடக்கிறோம்
நானும் என் கணினியும் !
காற்றில் மின் விசிறி சுற்றும்
ஒவ்வொரு முறையும்
மின் சாரம் வந்துவிட்டது என்று எதிர்பார்த்து
சலித்த மனது !
என்றோ வரும்
மின்சாரத்துக்காக
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறது
என் கணினி & தொழில்
தொலைந்த மனதும் !
தொல்லையடா உன்னுடன்
இன்றாவது
வரும்ம ஒழுங்கான மின்சாரம் !!

 

ஹி ..ஹி ..இன்னைக்கு புல் பவர் கட் அந்த வயிற்று எரிச்சலில் ...உங்கள் கவிதை மாறிவிட்டது

 

நல்ல கவிதை, அழகாய் இருக்கிறது!