Posted by
Kousalya Raj
comments (15)
ஆசையோடு எனக்கும் ஊட்டிய அன்பே !
தமிழோடு உறவாடி காதல் மணம்
புரிந்து கவிக்குழந்தை பெற்ற தாயே !
என் விரல் பிடித்து கவிநடை
பயில கற்றுத் தந்த எந்தையே !
என் மனச்சுமை குறைக்க சாய்ந்து
கொள்ள தோள் தரும் தோழனே !
உனதன்பை நினைத்து உவகை கொண்ட
என்னுள்ளம் துள்ளி எழுதும் கவிதையே!
உன் பேச்சில் சிதறிடும் முத்துக்கள்
சேர்த்து அள்ளி நெஞ்சம் நிறைப்பேனே !
பரம்பொருளை பாடி பணிவதுபோல் மனதினுள்
மலர்தூவி அர்ச்சித்து மகிழ்வேன் கண்ணனே !
மனதோடு மட்டும்பேசி வந்த என்னை
கனவு தோட்டத்தில் பூக்கவைத்த விந்தையே !
ஆறுபல கூடிடவே தேடிவரும் கடலெனவே
நட்புபல நாடிவரும் பேருபெற்ற நாயகனே !
தவறாய் தமிழை பேசும்பலர் சூழ்ந்திருக்க
தவமாய் தமிழை போற்றும் தனித்துவமே !
பூவுலகின் ஆர்ப்பாட்டமான அற்புத கவிதையே
செஞ்சுடரே ! செந்தமிழே ! செந்தழலே ! தீஞ்சுவையே !
நீ வாழிய ! வாழிய பல்லாண்டு !
தமிழ் வாழும்வரை நீயும் வாழியவே !!
***************
வாழ்த்துக்களில்
வாழ்வதில்லையாம் நேசம்
யார் சொன்னது !?
உன்னை
வாழ்த்தியே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான் !
***************
Labels:
காதல் கவிதைகள்
,
வாழ்த்துப்பா
Posted by
Kousalya Raj
comments (14)
என் தாயை உன் தாய்
என்று உரைப்பாய்
நான் ஆம் என்பேன் உன்போல்
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
மண்ணை தாயாய் வணங்கும்
நான் எங்கே
என் தாய்களின் கருவறுத்த
நீ எங்கே
நாளை உனக்கு
இங்கே 'ராஜ'மரியாதை !
கொலை விளையாட்டை
ரசித்த உனக்கு
இது எம்மாத்திரம் !?
தமிழன் கருவறுத்தவன்
'கை'பற்றி
குதூகலிக்க போகும் கூட்டம்.....!!
ரசிக்கத்தான் வேண்டுமோ
விளையாட்டுடன் அவனையும் ?!
எங்கே போயின
எம்வீர தினவெடுத்த தோள்கள் ?
எங்கே தொலைந்தார்கள்
ரௌத்ரம் பழகியவர்கள் ?