நாயகனே...!


                                  

                                  அமுத தமிழை அள்ளி பருகி
                                  ஆசையோடு எனக்கும் ஊட்டிய அன்பே !
                                  தமிழோடு உறவாடி காதல் மணம் 
                                  புரிந்து கவிக்குழந்தை பெற்ற தாயே !

                                  என் விரல் பிடித்து கவிநடை
                                  பயில கற்றுத் தந்த எந்தையே !
                                  என் மனச்சுமை குறைக்க சாய்ந்து
                                  கொள்ள தோள் தரும் தோழனே !

                                  உனதன்பை நினைத்து உவகை கொண்ட
                                  என்னுள்ளம் துள்ளி எழுதும் கவிதையே!
                                  உன் பேச்சில் சிதறிடும் முத்துக்கள்
                                  சேர்த்து அள்ளி நெஞ்சம் நிறைப்பேனே !
                                  
                                  பரம்பொருளை பாடி பணிவதுபோல் மனதினுள்  
                                  மலர்தூவி அர்ச்சித்து மகிழ்வேன் கண்ணனே ! 
                                  மனதோடு மட்டும்பேசி வந்த என்னை 
                                  கனவு தோட்டத்தில் பூக்கவைத்த விந்தையே !
                                                                    
                                  ஆறுபல கூடிடவே தேடிவரும் கடலெனவே
                                  நட்புபல  நாடிவரும் பேருபெற்ற நாயகனே ! 
                                  தவறாய் தமிழை பேசும்பலர் சூழ்ந்திருக்க
                                  தவமாய் தமிழை போற்றும் தனித்துவமே !

                                  பூவுலகின் ஆர்ப்பாட்டமான அற்புத கவிதையே 
                                  செஞ்சுடரே ! செந்தமிழே ! செந்தழலே ! தீஞ்சுவையே !
                                  நீ வாழிய ! வாழிய பல்லாண்டு !
                                  தமிழ் வாழும்வரை நீயும் வாழியவே !!

                                  
                                 ***************


                                  வாழ்த்துக்களில் 
                                  வாழ்வதில்லையாம் நேசம் 
                                  யார் சொன்னது !?  
                                  உன்னை 
                                  வாழ்த்தியே 
                                  வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 
                                  நான் !


                                  ***************
  

15 comments:

வாழ்த்துக் கவிதை அருமை. ஆனால் உங்கள் வாழ்த்துக்குறிய கவிஞன்தான் யார் எனத் தெரியவில்லை.

யாராய் இருந்தாலும் அவர் கவித்திறமை சிறக்க வாழ்த்துகள்.

தொடருங்கள்...

நல்லக் கவிதைகளை.

 

// வாழ்த்துக்களில்
வாழ்வதில்லையாம் நேசம்
யார் சொன்னது !?
உன்னை
வாழ்த்தியே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான் !

//

நல்லாத்தான் இருக்கு :)

 

கவிதை வழக்கம் போல் அருமை.நாயகியின் வாழ்த்து சூப்பர்.

 

Kousalya, very nice. :-)

 

கவிதை சுவாரசியமா இருக்கு

 

கவிதை நல்லா இருக்குங்க...

மரபு வாசனையுடனாவது கவிதை எழுதும் எல்லோருக்கும் கொடி பிடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்...

உங்கள் கவிதைக்குள்ள கொஞ்சம் வருத்தம் அல்லது சோகம் ஒளிந்து கொண்டு இருப்பது போல இருக்கிறது..

வாழ்த்துக்கள்.நிறைய எழுதவும்.

 

// வாழ்த்துக்களில்
வாழ்வதில்லையாம் நேசம்
யார் சொன்னது !?
உன்னை
வாழ்த்தியே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான் !//
பிரமாதம்

 

@@ தமிழ்க் காதலன் கூறியது...

//உங்கள் வாழ்த்துக்குறிய கவிஞன்தான் யார் எனத் தெரியவில்லை.//

எழுத கரு இருந்தா போதுமே வரிகள் தானா வந்துவிட போகுது... :))

என்னை எழுத வைத்துகொண்டிருக்கும் எனக்குள் இருக்கும் ஒரு உணர்வு தான் எனது கவிதைகள் எல்லாம்...அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க...!? :)))

//யாராய் இருந்தாலும் அவர் கவித்திறமை சிறக்க வாழ்த்துகள்.//

யாராய் இருந்தாலும் வாழ்த்துரீங்க பார்த்தீங்களா...? இப்படிதான் நானும் வாழ்த்தினேன். :))

அதுசரி இங்கே கேள்வி கேட்டது பத்தாதுன்னு fb லையும் வந்து கேட்டா நியாயமா ரமேஷ் ?

 

@@ எல்.கே...

நன்றி.



@@ asiya omar...

நன்றி தோழி.


@@ Chitra...

நன்றி சித்ரா.



@@ யாதவன்...

நன்றி சகோ.

 

@@ அறிவன்#11802717200764379909...

பெரிய வார்த்தை சொல்ற அளவு இருக்கானு எனக்கு தெரியல...பிடித்திருப்பதில் மகிழ்கிறேன்.

//உங்கள் கவிதைக்குள்ள கொஞ்சம் வருத்தம் அல்லது சோகம் ஒளிந்து கொண்டு இருப்பது போல இருக்கிறது..//

உண்மையில் வியக்கிறேன்...சில உணர்வை எல்லோராலும் உணர இயலாது...உங்களால் முடிகிறது.

நன்றி உங்களின் வருகைக்கும், ரசனைக்கும் !!

 

||/உங்கள் கவிதைக்குள்ள கொஞ்சம் வருத்தம் அல்லது சோகம் ஒளிந்து கொண்டு இருப்பது போல இருக்கிறது..//

உண்மையில் வியக்கிறேன்...சில உணர்வை எல்லோராலும் உணர இயலாது...உங்களால் முடிகிறது.

நன்றி உங்களின் வருகைக்கும், ரசனைக்கும் !! ||

கவிதை மனம் இருக்கும் எவருக்கும் முடியும்....

கல்லூரிக் காலத்திலிருந்தே இலக்கியத்திலும் கவிதையிலும் ஆழ்ந்த ஈடுபாடும் பரிச்சயமும் பழக்கமும் உண்டு,அதுதான் காரணம்...

என்னுடைய பதிவின் கவிதைகளையும் நீங்கள் பார்க்கலாம்,காரணம் சட்டென்று விளங்கி விடும். :))

நன்றி,பாராட்டுக்கு...

தேடிப் படிப்பதையும் எழுதுவதையும் தொடருங்கள்.

 

// வாழ்த்துக்களில்
வாழ்வதில்லையாம் நேசம்
யார் சொன்னது !?
உன்னை
வாழ்த்தியே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான் !//
அழகா சொன்னீங்க சகோதரி. வாழ்துக்கள் வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்று முதல் ஒரு வாரம் லீவு. தேர்தல் பணி. முடிந்ததும் பதிவுலகம் வருகிறேன்.

 

கௌசல்யா, நல்ல தமிழ்க் கவிதை!! மிகவும் ரசித்து படித்தேன்..யாருக்காக இருக்கும் என எண்ணியபடியே படித்தேன்.. கற்பனையாக எழுதியதாக பின்னூட்டத்தில் படித்த போது வியந்தேன்..

 

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்:
செவ்வாய் பெண்கள் சரமாக!

 

வாழ்த்துக்கள்