Posted by
Kousalya Raj
comments (12)
முன் எப்போதும்
என் மாலை பொழுதுகள்
மொட்டைமாடியில் !
நீ வந்தாய் மனதினுள்
மறந்தேன்
மாலை பொழுதின் அழகை ரசிக்க !
இன்று உன்னை விடுத்து
இருக்க எண்ணி மாடி அடைந்தேன்
மாலை நேர தென்றல்
மேனித் தொட்டு மறவாமல் நலம் விசாரிக்க
மெல்ல நிமிர்ந்து வானம் பார்த்தேன்
அடடா நிலவுக்கு ஏன் இந்த அவசரம்
கதிரவன் முழுதாய் மறையும் முன் எட்டி பார்க்கிறது !!
நிலா கவிதை எழுதி நாள் பல ஆனதை
நினைவுபடுத்த வந்தாயா ?
என் செய்வேன் உனை பார்த்தாலும்
அவன் முகம் நினைவுக்கு வருகிறது
நிச்சயம் இன்று உன்னை பற்றியதே என் கவிதை !
அட...அங்கே யாரது தென்னை மரத்தில்
ஓ... இரு குயில்கள்
எப்படி மறந்தேன் உங்களின் இனிய குரலை....
கால்களுக்கு முன் இன்னிசை
கேட்க ஓடி வருமே என் செவிகள் !
கூவுங்கள் குயில்களே
இன்று இவள் செவி உங்கள் குரல் கேட்கவே !
என்ன சலசலப்பு ?!
வேப்பமரக் கிளைகளை அசைத்து
ஏன் தூண்டிவிடுகிறாய் காற்றே !
கட்டிய ஊஞ்சலில் ஆட மறந்தேன் என்றா?!
காற்றே மெல்ல மெல்ல...
குருவிக் கூடுகள் விழுந்துவிட போகின்றன!
தென்னையில் புதிதாய் ஒரு பாளை ?
ம்...இது எப்போது ?
சந்தன நிற மலர்கள்
அழகில் கிறங்குகிறதென் மனம்!
மணம் நாசியை துளைக்கிறதே
பன்னீர் பூ உனக்கு இது வசந்த காலமா...
மரம் கொள்ளாமல் பூவாடை !
சட்டென்று சிவக்கிறது வானம் ஏனோ?
பகலெல்லாம் பூமி பந்தினை சுட்டெரித்தாய் போதும்
நிலாவுடன் பேசவேண்டும் நீ செல் !
உன்னுடன் பேசக் கூடாதாம் நிலவே
முகம் சிவந்து கோபத்துடன்
செல்கிறான் கதிரவன் !
நான் பேசுவேன் இன்று இரவு முழுவதும்
ஆம் பேசுவேன்...கவிதை எழுதுவேன்
எழுத பேனா எடுத்தேன்.......
நிலவே
இரவின் தனிமையில்
சுட்டெரிகிறாய் என்னை
வடுக்களோ உன்னில் !
.....
.....!
.....?
இரு எழுத்து
மந்திரமாம் அவனது பெயர்
உச்சரித்தே
முக்தி அடைகிறதென் காதல் !!
மரம் , குயில், ஊஞ்சல், பன்னீர் பூ
மறந்து...
அவனையே எழுதுகிறது...!
எப்போது மயக்கினான்
என் பேனாவையும் !?
Labels:
காதல்
Posted by
Kousalya Raj
comments (18)
தின்று ஜீவிக்கும் கொடூரா
சொற்கள் வார்த்தைகள்
செய்கையால்
பிறரை துன்புறுத்தும்
நீ சொல்கிறாய்..
'துவேசம் தவிர்'
குருதி,ரத்தம்,அவயங்கள்
உன் போலவே அவனுக்கு
இருந்தும் உனக்கு மட்டும் ஏன் இந்த வெறி
பிற மனதை குத்தி கிழித்து ரணமாகி
புரையோடிப்போன
புண்ணை ரசிக்கும்
நீ சொல்கிறாய்..
'பிற உயிரை நேசி'
நரியின் வஞ்சக புத்தி
பாம்பின் விஷம்
வார்த்தையில்
தேளின் கொடுக்காய்
நாக்கை சுழற்றி கொட்டும்
நீ சொல்கிறாய்..
'அன்பே சிவம்'
புறங் கூறி பழகிய
நாவுகள் உரசிப் போன
தீச்சொற்கள்
எத்தனை மனதை
எரித்திருக்கும்
நீ சொல்கிறாய்..
'வாக்கில் இனிமை வேண்டும்'
ஆணவத்தால் அகக்கண் மூட
தெளிவற்ற சிந்தை
சுயநலத்தால்
உன்னை முன்னிறுத்த
பிறரை பந்தாடும்
மமதை மாமனிதா
நீ சொல்கிறாய்..
'கர்வம் தவிர்'
தூக்கிப்போடு உன்
வறட்டு சித்தாந்தத்தையும்
விளங்காத சாத்திரத்தையும்
இனியும் அவற்றை பேசி
உன்னை புனிதன் என்று காட்டாதே
சக மனிதன், உன் சிநேகிதனை
மதிக்கத் தெரியாத
நீ சொல்கிறாய்..
'நட்பால் உலகை வெல்வோம்'
உன் போல் யார்
ஊர் சொல்லும் முன்
உன் மனசாட்சியிடம் கேள்
முகமூடி கிழித்து உன்
சுயத்தை காட்டும்
பிற உயிரை தூசித்து
கடவுளை தொழுகிறாய்
தூஷணமும்
பூசையும் ஒன்றா ?!
சில நேரம் பிதற்றுவாய்
'என் குரலுக்கு
ஓடி வருவான் இறைவன்'
இனி நன்றாக
உற்றுப்பார்
வந்தது...
சாத்தானாக இருக்கக் கூடும் !!
Posted by
Kousalya Raj
comments (32)
வேண்டுமென்றே
தோற்கிறேன்
உன்
வெற்றி பிடிக்கிறது !
பலமுறை
வாங்கி கட்டி கொள்வேன்
உன்
திட்டுகள் பிடிக்கிறது !
தெரியாததுபோல்
முழித்து கொண்டிருப்பேன்
உன்
அறிவுரை பிடிக்கிறது !
கைகட்டி
கேட்டு கொண்டிருப்பேன்
உன்
கட்டளை பிடிக்கிறது !
உனக்கு
பிடிக்காததை செய்வேன்
உன்
தண்டனை பிடிக்கிறது !
பிறரிடம் பேசியதாய்
பொய் சொல்வேன்
உன்
கோபம் பிடிக்கிறது !
தவறு செய்யாமல்
மண்டியிட்டு நிற்பேன்
உன்
மன்னிப்பு பிடிக்கிறது !
படிப்பு, அனுபவ அறிவு
மறைத்து நிற்பேன்
உன்
பேச்சுக்கள் பிடிக்கிறது !
சில நேரம்
அசட்டுதனமாய் பேசுவேன்
உன்
சிரிப்பு பிடிக்கிறது !
கவிதையில்
எனை மொத்தமாய் சிதறியும்
இயல்பாய் பார்த்துச் செல்லும்
உன்
கம்பீரம் பிடிக்கிறது !
சமயங்களில்
சட்டென என் அன்பை
'போடி' என தூக்கி எறிவது
வலித்தாலும்...
அந்த திமிரும் பிடித்துதான் போகிறது !
படிப்பு, அனுபவ அறிவு
மறைத்து நிற்பேன்
உன்
பேச்சுக்கள் பிடிக்கிறது !
சில நேரம்
அசட்டுதனமாய் பேசுவேன்
உன்
சிரிப்பு பிடிக்கிறது !
கவிதையில்
எனை மொத்தமாய் சிதறியும்
இயல்பாய் பார்த்துச் செல்லும்
உன்
கம்பீரம் பிடிக்கிறது !
சமயங்களில்
சட்டென என் அன்பை
'போடி' என தூக்கி எறிவது
வலித்தாலும்...
அந்த திமிரும் பிடித்துதான் போகிறது !
Posted by
Kousalya Raj
comments (18)
உன்னை முழுதும்
என்னுடையவனாக்க
முயன்றும் முடியாமல்
போய்விடுமோ !??
...
...
...
...
...
அழைத்தேன்
மறுக்காமல் வந்தாய்
ஓயாமல் பேசும் என் வாய்
ஓய்வெடுக்கிறது !
வழக்கம் போல்
மடை திறந்த வெள்ளமாய்
ஆர்ப்பரித்து பேசிச் சிரிக்கிறாய்
என் எண்ணம் புரியாமல் !
எப்போதும் கிறங்கடிக்கும்
இன்றோ என்னைக் கொன்று
தின்றுத் தீர்க்கிறது
உன் புன்னகை !
அழுத்தமாய் உன் கரம் பற்ற
வித்தியாசம் உணர்ந்து
விடுவிக்க முயன்று தவிக்கிறாய்
திமிரும் உன்னை...
உன் கெஞ்சும் விழிகளை
கொஞ்சியே கூட்டிச் செல்கிறேன் !
மலை உச்சி
தூரம் தெரியவில்லை
உடன் நீ வருகையில் !
உச்சி முகட்டின் மேல் நின்று
கீழ் நோக்க
ஒரு கணம் பயந்து
பின் சுதாரிக்கிறேன் !
ஒரு கணம் பயந்து
பின் சுதாரிக்கிறேன் !
ஓடும் நதி
ஆர்ப்பரித்துச்செல்லும் அழகை
விழியால் பருக மனம் குளிர
சுவாசத்தில் புதிய நறுமணம்
ஆழமாய் உள்ளிழுத்து
நிதானமாய் வெளி விடுகிறேன் !
நிதானமாய் வெளி விடுகிறேன் !
கம்பீரம் மிளிரும் உன்
அழகு முகம் கையில் ஏந்தி
உன் இரு விழி நோக்கி
அழகு முகம் கையில் ஏந்தி
உன் இரு விழி நோக்கி
முதலும் கடைசியுமாய்
இறுக அணைத்து
இறுக அணைத்து
முத்தமிட்டு
நம்மை உணரும் முன்
நம்மை உணரும் முன்
உன் கரம் பற்றியிழுத்து
கண் மூடி
வேகமாய் நதி நோக்கி
பாய்கின்றேன் !
கண் மூடி
வேகமாய் நதி நோக்கி
பாய்கின்றேன் !
ஒன்று...
இரண்டு...
மூன்றாம் முறை
மேலெழும்பாமல்
மூழ்கி போனோம் மொத்தமாய் !!?