Posted by
Kousalya Raj
comments (9)
புது பொம்மை
பத்திரமாக இருக்கிறதா
பாதி தூக்கத்தில்
தடவி பார்க்கும் குழந்தை போல...
நடு இரவில்
மெல்ல தொட்டு
தடவிப் பார்க்கிறேன்
உறக்கத்தில் இருக்கும்
பத்திரமாக இருக்கிறதா
பாதி தூக்கத்தில்
தடவி பார்க்கும் குழந்தை போல...
நடு இரவில்
மெல்ல தொட்டு
தடவிப் பார்க்கிறேன்
உறக்கத்தில் இருக்கும்
உன் நினைவுகளை !!
* * *
பேசதொடங்கினாய்
* * *
* * *
பேசதொடங்கினாய்
வீணை சுரங்கள் மறந்தது !
சிரிக்க தொடங்கினாய்
வண்ணத்துபூச்சியினை
வரைந்து
வண்ணம் தீட்டிவிட்டேன்
நான் !
வண்ணம் தீட்டிவிட்டேன்
நான் !
* * *
என்ன மாயம்
செய்து போனாய்
என் கனவு தோட்டத்து பூக்கள்
மணம் வீசுகின்றன !
* * *
சுற்றிலும்
கொழுந்துவிட்டு எரியும்
நெருப்பு
வளையத்துக்குள் இருக்கும்
பற்றி எரியாத
ஒற்றை கற்பூரம்
நீ...!
படம் - கூகுள்
நீ...!
படம் - கூகுள்
Posted by
Kousalya Raj
comments (15)
- தத்துவங்கள்
"நீ செத்துட்டா நானும் செத்துடுவேன்"
- பிதற்றல்கள்
"அடுத்த ஜென்மத்திலும் பிரிவில்லை"
- சத்தியங்கள்
எல்லாம் மறந்து போகின்றன !
* * * * * * *
மீளா இறப்புகள்
மீளா துயரங்கள்
ஆற்றமுடியாப் பிரிவுகள்
சோகங்கள்
வேதனைகள்
இழப்புகள்
எல்லாம் மறக்கடிக்கபட்டு
விடுகின்றன...
சில நாட்களில்...
சில வாரங்களில்...
சில மாதங்களில்...
யதார்த்த உலகில்
வாழ்க்கை
வெகு இயல்பாகிவிடுகிறது !!
வெகு இயல்பாகிவிடுகிறது !!
Posted by
Kousalya Raj
comments (17)
இரவில்
விழிப்பின் தேடலில்...
விழிப்பின் தேடலில்...
பகலில்
தொடரும் துரத்தலில்...
முடிந்துபோகுமென்
ஒரு நாளின் பொழுதுகள்
உன்னால் !
* * *
* * *
இதயத்தில் வலி அதிகரிக்க
இறுக பற்றிக்கொள்கிறேன்...
இனியவனே உன் நினைவுகளை
இதயவலி
உன்னால் என்ற போதும் !
உன்னால் என்ற போதும் !
* * *
நான் அரற்றினால்
Posted by
Kousalya Raj
comments (25)
புனிதம் புரியா புனிதர்கள்
மெய் கொண்டு வாழாமல்
பொய் கொண்டு வாழும் பித்தர்கள்
நல்லவனாம்
பொய் கொண்டு வாழும் பித்தர்கள்
நல்லவனாம்
நம்பக்கூடிய பொய்கள் துணைக்கு!
உத்தமனாம்
உதறி தள்ளபடும் உண்மை! இங்கும் அங்கும்
எதையோ தேடி ஓடி அலைவது
நிச்சயமாக
தொலைந்து போன மனிதத்தை அல்ல...
எதையோ தேடி ஓடி அலைவது
நிச்சயமாக
தொலைந்து போன மனிதத்தை அல்ல...
அரிதாரம் பூசாத வேடதாரிகள்!
பகலில் பல வேடம்
இரவிலோ இருவேடம்
ஒன்று நல்லவன்
மற்றொன்று மிக நல்லவன் !
பொய்கள் பல நிறமாம்
வெள்ளை பச்சை நீலம் என...
உண்மையின் நிறத்தை
மறக்கடித்து விட்டது
மனிதர்களின் பச்சோந்திதனம் !?
சூழ்ச்சியால் தோற்று
புதைக்கப்பட்ட உண்மைகள்
வெற்றிகளிப்பில்
நம்பிக்கை துரோகங்கள்
உண்மையின் நிறத்தை
மறக்கடித்து விட்டது
மனிதர்களின் பச்சோந்திதனம் !?
சூழ்ச்சியால் தோற்று
புதைக்கப்பட்ட உண்மைகள்
வெற்றிகளிப்பில்
நம்பிக்கை துரோகங்கள்
பொய் புரட்டு துரோகம் உயிர்த்தெழ
அஸ்தமித்து போனது அன்பு பாசம் நட்பு !?
Posted by
Kousalya Raj
comments (10)
'காத்திருக்கிறேன்' என்றேன்
'அதுக்கென்ன' என்கிறாய்
'உனக்காக' என்றேன்
'யாரோ நான்' என்கிறாய்
'காதலன்' என்றேன்
'உனக்கில்லை' என்றாய்
'காதல்' என்றேன்
'உன்னிடமில்லை' என்றாய்
'பரவாயில்லை பேசு' என்றேன்
'பிடிக்கவில்லை' என்றாய்
'சிரித்தாயே' என்றேன்
'உன்னை பார்த்து இல்லை' என்றாய்
'திமிர் கூடி போச்சு' என்றேன்
'எப்ப குறைந்தது' என்கிறாய் !
பொறுமை இழந்து
மௌன மடியில் நான் விழ...
...
...
...
'என்ன சைலென்ட்' என்றாய்
'வார்த்தை தீர்ந்தது' என்றேன்
'பரவாயில்லை பேசு' என்றாய்
'போகிறேன்' என்றேன்
'என்னை விட்டா' என்றாய்
சிரித்தேன்...
'சிதைக்காதே' என்கிறாய் !
போடா! நீயும் உன் காதலும் !!
தொடருகிறது உரை(?)யாடல்...