Posted by
Kousalya Raj
comments (9)
உன் தொடுதலில்
சுருங்கிய
தொட்டாச் சிணுங்கி மனது
நீ சென்றபின்பு
விரிந்து சிரிக்கிறது
ரகசியமாய் !
* * * * *
நான்
கவிதை எழுதவில்லை
எழுத்துக்களின் வழியே
உன்னை நெருங்குகிறேன்...
உன்னை நெருங்குகிறேன்...
என்னிடத்தில் உன் ஸ்பரிசம்
தேடியும்
நீ இட்ட முத்தச்சுவடு
வருடியும்
நெஞ்சம் படர்ந்த உன் நினைவுகள்
அணைத்தும்
எழுதி முடியும் தருணம்
சிலிர்த்தும்...
நான் கவிதை எழுதவில்லை
உன்னை எழுதுகிறேன்
என்னை வாசிக்கிறேன்...!
* * * * *
* * * * *
வண்ணத்தின் நிழலை
என்னிடம் விட்டுவிட்டு
பிடிபடாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நீ !
என்னிடம் விட்டுவிட்டு
பிடிபடாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நீ !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (8)
நீ எனக்களித்த
மற்றெல்லா பரிசையும்
போலத்தான்
உன் கோபமும் !
* * *
வெம்மையில்
வெடித்து
சிதறியச் சொற்களில்
சிதறியச் சொற்களில்
எனக்கானவற்றை
தேடிப்பிடித்து
மறைத்து வைக்கின்றேன்
அவையும் களவு
போய் விடுமோவென !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (21)
இருக்கின்றன...
உன் நுட்பங்களை
சொல்லிச் செல்கின்றன !
தங்களுக்குள்ளே
கொதிக்கின்றன...
எரிகின்றன...
எரிக்கின்றன...
எரிக்கின்றன...
சில நேரம் அதிக சத்தமாய்
பல நேரம் ஆழ்ந்த மௌனம்
அதை நெடுந் தவம் என்பாய் !
ஆழமாய் நெருங்கினால்
மோனநிலை நிச்சயம்...
மோனநிலை நிச்சயம்...
மெல்ல வருடினால்
சிலிர்ப்பின் உச்சம் தொடலாம் !
சிலிர்ப்பின் உச்சம் தொடலாம் !
சொல்லாமல் சொல்கிறது
இல்லாமல் இருக்கிறது
அது எல்லாமாய் நிறைக்கிறது
நிறைந்து நிலைக்கிறது...
உனதாய் இருக்கின்றன
உன்னை போலில்லை
உன்னை போன்ற
வேறொன்றாக இருக்கிறது
வேறொன்றாக இருக்கிறது
அவை வேறொன்றுமில்லை
உன் வார்த்தைகள் !!
Labels:
காதல்
,
வார்த்தைகள்