வேறொன்றுமில்லை...!

                                             
                                             
                                                நீ இல்லாத வெளியில்
                                                இருக்கின்றன...
                                                உன் நுட்பங்களை 
                                                சொல்லிச் செல்கின்றன ! 
                                                தங்களுக்குள்ளே 
                                                கொதிக்கின்றன... 
                                                எரிகின்றன...
                                                எரிக்கின்றன...

                                                சில நேரம் அதிக சத்தமாய் 
                                                பல நேரம் ஆழ்ந்த மௌனம் 
                                                அதை நெடுந் தவம் என்பாய் !

                                                ஆழமாய் நெருங்கினால்
                                                மோனநிலை நிச்சயம்...
                                                மெல்ல வருடினால்
                                                சிலிர்ப்பின் உச்சம் தொடலாம் ! 

                                                சொல்லாமல் சொல்கிறது
                                                இல்லாமல் இருக்கிறது
                                                அது எல்லாமாய் நிறைக்கிறது
                                                நிறைந்து நிலைக்கிறது...

                                                உனதாய் இருக்கின்றன
                                                உன்னை போலில்லை
                                                உன்னை போன்ற
                                                வேறொன்றாக இருக்கிறது
                                             
                                                அவை வேறொன்றுமில்லை
                                             
                                                உன் வார்த்தைகள் !!



21 comments:

வார்த்தைகளிலும் வசந்தம் காணலாம்...


அவள் வாய் திறந்தால்...

 

அழகியதொரு கவிதை..
வாழ்த்துக்கள...

 

// அவை வேறொன்றுமில்லை

உன் வார்த்தைகள் !!//

அழகு..... அழகு .....
நீ சிரித்தால் சிரிப்பழகு ... அழகு
நீ நடந்தால் நடையழகு!

என்ற பாடலை வாய் முணுமுணுக்க வைத்தது, இதைப்படித்ததும்.

சபாஷ்!

 

சொல்லாமல் சொல்கிறது
இல்லாமல் இருக்கிறது
அது எல்லாமாய் நிறைக்கிறது
நிறைந்து நிலைக்கிறது...

-அருமையான வரிகள். கருப் பொருளும் கூட உங்களுக்கு வசப்பட்டு விட்ட, எனக்கு இன்னும் வசப்படாத... வார்த்தைகள்! மிக ரசித்தேன். அருமை.

 

னான் மனமென்று நினைத்தேன்.... கவிதை முடிவில் விடைகண்டு வியந்தேன்.

 

வார்த்தைகளின் வசந்தம், சூப்பர்ப்....!!!

 

// ஆழமாய் நெருங்கினால்
மோனநிலை நிச்சயம்...
மெல்ல வருடினால்
சிலிர்ப்பின் உச்சம் தொடலாம்//


உச்சத்தை எட்டி விட்டீர்-பலரின்
உள்ளத்தைத் தொட்டு விட்டீர்
மெச்சத்தான கவி பாடி-மேலும்
மேன்மைமிகு சொல் நாடி
முடித்தீராம் நயம் படவே-நம்
முத்தமிழும் பயன் படவே
தொடுத்தீராம் சொல் மாலை-எழில்
சொல்லரிய நறுஞ் சோலை!

புலவர் சா இராமாநுசம்

 

மென்மையான,இனிய,துளிர்க்க வைக்கும் ,உயிருள்ள வார்த்தைகள்!
நன்று.

 

//உனதாய் இருக்கின்றன
உன்னை போலில்லை
உன்னை போன்ற
வேறொன்றாக இருக்கிறது//
சுபர்ப்.

 

@@ கவிதை வீதி... // சௌந்தர் //...

//வார்த்தைகளிலும் வசந்தம் காணலாம்//

அழகாக சொல்லிடீங்க சௌந்தர் நன்றிகள்

 

@@ வை.கோபாலகிருஷ்ணன்...

கவிதையை நீங்க ரசிக்கிற விதமே தனிதான். :)

நன்றிகள்

 

@@ கணேஷ் கூறியது...

//கருப் பொருளும் கூட உங்களுக்கு வசப்பட்டு விட்ட, எனக்கு இன்னும் வசப்படாத... வார்த்தைகள்!//

மீண்டும் ஒருமுறை படியுங்கள் கவிதை வசப்பட்டு விடும். :)

நன்றி கணேஷ்

 

@@ சி.கருணாகரசு...

நலமா ? நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

ரசனைக்கு நன்றிகள்.

 

@@ MANO நாஞ்சில் மனோ...

நன்றி மனோ.

 

@@ புலவர் சா இராமாநுசம் கூறியது...

//உச்சத்தை எட்டி விட்டீர்-பலரின்
உள்ளத்தைத் தொட்டு விட்டீர்
மெச்சத்தான கவி பாடி-மேலும்
மேன்மைமிகு சொல் நாடி
முடித்தீராம் நயம் படவே-நம்
முத்தமிழும் பயன் படவே
தொடுத்தீராம் சொல் மாலை-எழில்
சொல்லரிய நறுஞ் சோலை!//

இப்படி அழகான தமிழில் கவிதையை எனக்கு பரிசளித்த உங்கள் அன்பிற்கு என் நன்றிகள் பல.

 

@@ சென்னை பித்தன்...

அழகான ரசனை !!

நன்றிகள்

 

@@ FOOD...

நன்றி அண்ணா

 

"உன் வார்த்தைகள் !! அருமை ...

 

வார்த்தைகளால் சுடவும் செய்யலாம்,மனதை குளிரவும் வைக்கலாம். "பலநேரம் ஆழ்ந்த மௌனம்" - இதுதான் நல்லது. நல்லதொரு படைப்பு.

 

///// அதை நெடுந் தவம் என்பாய்////

கம்பன் வந்து தங்கள் புளக்கில் கவி பாடிப் போனானோ...

நல்ல ஒரு எடுத்துக்கட்டு அருமைங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution