Posted by
Kousalya Raj
comments (23)
நிறைய பேசினோம்
எதிர்பாராத கணத்தில்
ஒற்றை சிரிப்பில்
எரியும் தணலை
அள்ளி
பற்றி
எரிந்துகொண்டிருக்கிறேன்
'விடை கொடு, கிளம்புகிறேன் '
என்கிறாய்
ஏதுமறியாமல்...!
தானாக
எங்ஙனம் அணையும்
'தீ'
* * * * * * * * * * * * *
நிச்சயமற்ற
எதிர்பாராத கணத்தில்
ஒற்றை சிரிப்பில்
எரியும் தணலை
அள்ளி
என்னுள் வீசிவிட்டு
பற்றி
எரிந்துகொண்டிருக்கிறேன்
'விடை கொடு, கிளம்புகிறேன் '
என்கிறாய்
ஏதுமறியாமல்...!
தானாக
எங்ஙனம் அணையும்
'தீ'
* * * * * * * * * * * * *
நிச்சயமற்ற
லட்சியங்கள்
சலனமற்ற
சந்தோசங்கள்
சலனமற்ற
சந்தோசங்கள்
நிதர்சனமற்ற
நிகழ்வுகள்
நிகழ்வுகள்
காணவியலா
கனவுகள்
எதிர்பார்த்தேயிராத
எதிர்காலம்
கனவுகள்
எதிர்பார்த்தேயிராத
எதிர்காலம்
நிர்மூலமாகும்
நிகழ்காலம்
நிகழ்காலம்
அனைத்தும் தீப்பற்றி
பிரகாசிக்கின்றன...
அதீத உஷ்ணத்துடன்
என் எதிரே வந்த உன்னால் !
Posted by
Kousalya Raj
comments (24)
தனித்த இரவொன்றில்
உன் விரல் கோர்த்து
உன் தோள் சாய்ந்து
உன் தொடர்ந்த பேச்சுக்களில்
விழிமூடி கிறங்கி கிடந்தேன்
பிரபஞ்சம், வானம் , நிலவு
என
புரியாத மொழியில்
ஏதேதோ
பேசிக்கொண்டே இருந்தாய்
அத்தனையும் காதல் என்றே
மொழி பெயர்த்தது மனது !
'உன் தலை பின்னால்
ஒளிவட்டம் தெரிகிறது
நீ தெய்வமாகிறாய்' என்றேன்
விழி திறவாமலே...
அதை கேட்டு நகைத்தாய்
நான் கோபப்படவே
'சரி சரி உனக்கு மட்டும் தெரியகடவது'
சமாளித்தாய் இறை போலவே...
நகைப்பும் பேச்சுமாய் கடந்த பொழுதில்
உன்னை சேரவேண்டுமென
காத்திருந்த வேளையில்
சலனமற்ற குளத்து நீரில்
வந்து விழுந்தது
ஒற்றை மழைத்துளி...
சலனம் அடங்குமென - மன
சலனத்துடன் - விழி
சலனமின்றி நான்...
நீண்ட காத்திருப்புக்கு பின்
நெருங்கி வர
எத்தனித்த வேளையில்
சட்டென்று
வெடித்து சிதறியது
கனவு...!
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்