Posted by
Kousalya Raj
comments (3)
நீண்ட நாள் முன்பு கேட்ட அதே சத்தம்
ஆங்கார ஓலம்
மிக கொடூரமாய்
மிக கொடூரமாய்
செவிப்பறையை தாக்க
கரங்களால் இருக பொத்தியும் மீறி
உள்ளே ஊடுருவி
உயிரை பிசைகிறது...
உயிரை பிசைகிறது...
வலியால்
கதறித் துடிக்கும் நெஞ்சில்
ரத்தம் கசியாத காயங்கள்...
இழுத்து
தோளில் சாய்த்து கொள்ள
நீண்ட கரம் ஒன்றை
பிடிவாதமாய் விலக்கி
பிடிவாதமாய் விலக்கி
ஓட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டேன்
நத்தை போலான நான் !
படம்- நன்றி கூகுள்
Labels:
கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (7)
நீ பார்க்கும் பார்வைகள்
நீ கேட்கும் பாடல்கள்
நீ சுவாசிக்கும் சுவாசங்கள்
எல்லாமும் நானாக
முடிகிறது ...!
ஆசை தீர ரசித்து
சண்டை இட்டு மௌனித்து
சமாதானம் செய்யடா என கெஞ்சி
அப்படியே கொஞ்சவும்
முடிகிறது ...!
உன் காத்திருப்புகள்
கவனிப்புகள் என் ஒருத்திக்காக
கவனிப்புகள் என் ஒருத்திக்காக
சமாதானம் செய்து கொள்ள
முடிகிறது ...!
கதை பேசிக்கொண்டே
உன் விரல் சொடுக்கு எடுக்க
முடிகிறது ...!
உன் கையுடன் இறுக்கமாக
என் கை கோர்த்து பரவும்
வெப்பத்தில் என்னை எரிக்க
முடிகிறது ...!
வாய்ப்பில்லாத
அனைத்தையும்
சாத்தியமாக்கி குதூகளிக்க
முடிகிறது ..!
உடலெங்கும்
பரவும் சிலிர்ப்பில்
அனைத்தையும்
சாத்தியமாக்கி குதூகளிக்க
முடிகிறது ..!
உடலெங்கும்
பரவும் சிலிர்ப்பில்
மதிமயங்கி
படபடக்கும் நெஞ்சை
இறுகப் பிடித்து
விழிகளில் நீர் பெருக
மண்டியிட்டு
சரிந்து விழுகிறேன்
சரிந்து விழுகிறேன்
உன் காலடியில்
என் கனவுகளில்..!
என் கனவுகளில்..!
உயிரே!
காதலே!
தாயே!
இறையே!
இறையே!
என் ஜீவன் உள்ளவரை
என் கனவுகள் போதுமெனக்கு...!!
Posted by
Kousalya Raj
comments (8)
சரக் கொன்றை மரத்தின்
பழுத்த இலைகள்
வாடிய பூக்கள்
சருகுகள்
என
மொத்தமாய்
மூடி கிடக்கிறது வாசல்
குப்பைகள் அல்ல அவை
உன் பாதம் தொட்டு முத்தமிட
காத்திருந்து
காத்திருந்து
தற்கொலை செய்துகொண்ட
அழகு தேவதைகள்...
அன்று ஒருநாள்
'வாசல் தெளிக்க படாமல் கிடக்கிறதே,
என்னாச்சு !'
சிரித்து கொண்டேகேட்டாய்
முழுதாய் உன் நினைவில்
மூழ்கி போனதை
எவ்வாறு சொல்வேன்
வெட்கம் மறைத்து
'இனி எழுதுகிறேன்' என்றேன்
'கவி எழுத முடியவில்லையா?
என்னை எண்ணி முடியவில்லையா?!
நீ செல்லமாய் சீண்ட
எங்கிருந்தோ வேகமாய்
முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது
அதுவரை மறைவில் இருந்த வெட்கம்
'இதை பார்க்கவே கேட்டேன்'
சத்தமாய் நீ சிரித்து கவிதை எழுத
ஒரு காவியம் அங்கே அரங்கேறியது !
இதோ
இன்று வாசல் தெளித்து
கோலமிட்டு விட்டேன்
உன் வரவுக்காய்
காத்திருக்கிறோம்
நானும் இந்த கொன்றை பூக்களும்...
'வா...உயிரே !'
படங்கள் - என் வீட்டு தோட்டத்தில்...
* * * * *
பின் குறிப்பு
வாசலில் கவிதைகள் எழுதி இரண்டு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.(விதி வலியது !!) :) இனியது காதல் தொடர் இனி தொடரும்...நன்றிகள்.
பிரியங்களுடன்
கௌசல்யா