Posted by
Kousalya Raj
comments (11)
எங்கெல்லாம் கூட்டி செல்கிறாயோ
அங்கெல்லாம் கேள்வி ஏதும் இன்றி
உன் கை பிடித்து வரும் என்னை...
'சிரி' என்று நீ சிரிப்பாய்
சிரிப்பேன்
'பேசு' என்று நீ பேசுவாய்
பேசிக் கொண்டே இருப்பாய்...
உன் வார்த்தையை
ஒவ்வொன்றாக
அசைபோட்டு மென்று தின்பேன்...
விழிகளால் உன்னை பருகி
நெஞ்சை நிறைக்கும் என்னை
நடு நடுவே
துடிக்கவைத்து ரசிப்பாய்...
சமயங்களில்
என் உயிரை
விலை பேசும் உன் மௌனம்
வெம்மை முழுமையாக
எரிக்கும் முன்
மண்டியிடுவேன்
உன் காலடியில்...
கர்வத்துடன் காதலால்
அள்ளி அணைப்பாய்...!
இதோ
பிரிந்து விட்டாய்
மற்றொரு விடை பெறுதல் !
பிரிவு தற்காலிகம்
மனதிடம் சமாதானம்
எடுபடவில்லை...
வழக்கத்திற்கு மாறாக
உன் தோளோடு தோள் நெருங்கி அமர்ந்து
உன் கரங்களை குழந்தையை போல
தூக்கி முத்தமிட்ட
அடுத்த கணம்...
கனத்த மௌனத்தின் ஓசை நெஞ்சை அறைய
கரங்களில் என் பிடியின் அழுத்தம்
உணர்ந்து நிமிர்ந்த வேளை
விழியோரம் துளிர்த்தது நீர்
பதறி புரிந்தவனாய்
'சீக்கிரம் வந்துவிடுவேன்'
அதுவரை...?
அதுவரை.....!!
படம்-நன்றி கூகுள்
Posted by
Kousalya Raj
comments (10)
எதிர்பாரா நேரத்தில்
சற்றுமுன் கேட்ட
உன் குரல்...
என் நரம்புகளை
உருவேற்றி சென்றதை
நீ அறிய மாட்டாய்...
சேகரித்து வைத்திருந்த
நினைவுகளை
உன் குரல்...
என் உயிர் பிளந்து
களவாடிய போனதை
நீ அறியமாட்டாய்...
என் தனிமைச்
சுமைகளை
உன் குரல்...
அதிகரித்துச் சென்றதை
நீ அறியமாட்டாய்...
தலைகோதி
நெஞ்சை வருடும்
உன் குரல்...
என்னை துடிக்க வைப்பதை
நீ அறிய மாட்டாய்...
விழியில் உன் பிம்பம்
நெஞ்சை வருடும்
உன் குரல்...
என்னை துடிக்க வைப்பதை
நீ அறிய மாட்டாய்...
விழியில் உன் பிம்பம்
செவியில் உன் குரல்
எதை முழுதாய் ரசிப்பது
தவித்து நிற்க்கையில்
சட்டென்று ஒலிக்கும்
உன் சிரிப்பொலி...
உன் சிரிப்பொலி...
அந்த அதிர்வில்
மொத்தமாய் சிதைந்து
சிதறி சருகாய் உதிர்ந்து
போனேன் நான் !
மீண்டு எழுவதற்குள்
முடிந்தே விட்டது
இந்த முறையும்
நம் தொலைபேசி உரையாடல் !!
நம் தொலைபேசி உரையாடல் !!
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (16)
நமக்கேயான
தனிமையான தருணங்களில்
அங்கே நீ
ஒவ்வொரு எழுத்தாய்
ஒவ்வொரு எழுத்தாய்
எனது பெயரை
உச்சரிக்கும் நொடிகளில்
உச்சரிக்கும் நொடிகளில்
இங்கே இவள்
தூள் தூளாய் சிதறி
காற்றில் கரைவதை
அறிவாய் தானே !
மொத்தமாய்
கரைந்து
கரைந்து
உன்னை வந்தடைகிறேன்
அதுவரை
அதுவரை
சொல்லிக்கொண்டே இரு
எனது பெயரை !!
எனது பெயரை !!
எழுத்துக்களை தனித் தனியே
சேர்த்தும் பிரித்தும்
நீ எழுத
'என்ன மொழி இது' நான் விழிக்க
நீ சிரித்தாய்
'உன் பெயரை தான் எழுதினேன் !'
அன்று பார்த்தேன்...
காதல்
உன்னை சிறுபிள்ளையாக்கி
வைத்திருந்த அழகை !!
.
என் பெயரை அவன்
சொல்லும் போதெல்லாம் !
இப்போதும்
கிறங்கிக் கிடக்கிறேன்...
யாராவது
அவன் பெயர்
சொல்லி அழையுங்களேன்
விழித்தெழ வேண்டும் நான் !!
படம் - நன்றி கூகுள்
சொல்லும் போதெல்லாம் !
இப்போதும்
கிறங்கிக் கிடக்கிறேன்...
யாராவது
அவன் பெயர்
சொல்லி அழையுங்களேன்
விழித்தெழ வேண்டும் நான் !!
படம் - நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (16)
நீண்ட தூர பயணத்தில்
எதிர்ப்படும்
ஆயிரமாயிரம் முகங்களிலும்
உன்னைத் தேடுகிறேன்
உள்ளே வைத்துகொண்டு
வெளியே தேடுவதே
வாடிக்கையாகிவிட்டது
வழக்கம் போல் பரிகசித்து
சிரிக்கின்றன விழிகள்...
இமைகளை இறுக மூடி
விழிகளுக்குள் ஓடுகிறேன்
உன்னைக் காண...!
* * * * *
இப்போதெல்லாம்
கண்கள் கலங்கினாலும்
கண்ணீர் விடுவதாயில்லை...
விழித்திரையில்
சேமித்து வைத்திருக்கும்
உன் காட்சிகளில்
ஒன்றையும்
கரைத்து விட
எனக்கு சம்மதமில்லை !!
படங்கள்-நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (3)
உலவும் காடுகளில்
கடவுளுக்கு ஏனோ
வேலையிருப்பதில்லை !
மனிதரின் கண்ணீர்
மொத்தமும் விழுந்து
நாள்காட்டியின்
ஏதோ ஒரு நாளில்
ஆழிபேரலை வரும்
அதில் அடித்துச்செல்லப்படும்
அத்தனை அசிங்கங்களும் !
சக மனிதனை
குத்திக்கிழிக்கும்
வெறிப்பிடித்த
தீநாவுகள்
கருகிப் போகும்
கர்வங்கள்
துரோகங்கள்
பொய்கள்
பசப்பு வார்த்தைகள்
மிகைப்பட்ட
கோமாளித்தனங்கள்
எதுவும் இருக்காது அந்நாளில் !
இறுதிநாளில்
தன்னுடன்
அழைத்து செல்ல
அழைத்து செல்ல
வந்த கடவுள்
ஏமாந்தே போவான்
மனிதன் ஒருவரையும் காணாமல் !?
படங்கள் - நன்றி கூகுள்