பெயர் சொல்லிப்போ...!

                                                                   
                                                                  நமக்கேயான
                                                                  தனிமையான தருணங்களில்
                                                                  அங்கே நீ 
                                                                  ஒவ்வொரு எழுத்தாய் 
                                                                  எனது பெயரை
                                                                  உச்சரிக்கும் நொடிகளில்
                                                                  இங்கே இவள்
                                                                  தூள் தூளாய் சிதறி
                                                                  காற்றில் கரைவதை
                                                                  அறிவாய் தானே !
                                                                  மொத்தமாய்
                                                                  கரைந்து 
                                                                  உன்னை வந்தடைகிறேன்
                                                                  அதுவரை 
                                                                  சொல்லிக்கொண்டே இரு
                                                                  எனது பெயரை !!  

                                                                

      எழுத்துக்களை தனித் தனியே
      சேர்த்தும் பிரித்தும் 
      நீ எழுத
      'என்ன மொழி இது' நான் விழிக்க
      நீ சிரித்தாய் 
      'உன் பெயரை தான் எழுதினேன் !' 
      அன்று பார்த்தேன்...
      காதல் 
      உன்னை சிறுபிள்ளையாக்கி
      வைத்திருந்த அழகை !!

                                                                   .

                                                                   கிறங்கி கிறங்கி விழுகிறேன்
                                                                   என் பெயரை அவன்
                                                                   சொல்லும் போதெல்லாம் !
                                                                   இப்போதும்
                                                                   கிறங்கிக் கிடக்கிறேன்...
                                                                   யாராவது
                                                                   அவன் பெயர்
                                                                   சொல்லி அழையுங்களேன்
                                                                   விழித்தெழ வேண்டும் நான் !!





படம் - நன்றி கூகுள்  


16 comments:

//எழுத்துக்களை தனித் தனியே
சேர்த்தும் பிரித்தும்
நீ எழுத
'என்ன மொழி இது' நான் விழிக்க
நீ சிரித்தாய்
'உன் பெயரை தான் எழுதினேன் !'
அன்று பார்த்தேன்...
காதல்
உன்னை சிறுபிள்ளையாக்கி
வைத்திருந்த அழகை !!//
Supper Kaushi akka :)

 

அழகு....வரிகள் பிரமாதம் தொடருங்கள்

என் முதல் வருகை இனி தொடரும்

 

ஊஹும். ஒண்ணும் சரியில்லை. பித்து முத்திப்போச்சு. :-))))))))))))))

 

உருக்கமான கவிதை........ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்ப்....!

 

நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்

 

அன்பு நெஞ்சத்தின் பெயரிலுள்ள எழுத்துக்களும் பெரிய ஈர்ப்பைத் தரும்.

 

@@ வெங்கட் நாகராஜ்...

நன்றிகள் :)

 

@@ rishvan...

thank u

 

@@ Harini Nathan...

ரொம்பநாள் ஆச்சு.நலமா ஹரிணி?

 

@@ சிட்டுக்குருவி கூறியது...

//என் முதல் வருகை இனி தொடரும்//

மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றிகள்.

 

@@ Bhuvaneshwar கூறியது...

//ஊஹும். ஒண்ணும் சரியில்லை. பித்து முத்திப்போச்சு.//

அது தெரிஞ்சு போச்சா உங்களுக்கு...?!!

:))

 

@@ அன்பு...

நன்றிகள் :)

 

@@ திண்டுக்கல் தனபாலன்...

நன்றிகள்.

 

@@ FOOD NELLAI கூறியது...

//அன்பு நெஞ்சத்தின் பெயரிலுள்ள எழுத்துக்களும் பெரிய ஈர்ப்பைத் தரும்.//

சரிதான் அண்ணா.

:)