Posted by
Kousalya Raj
comments (6)
நேசம் தவிர
வேறு சில தேவைகள்
சில சரிபடுத்தல்கள்
அவசியமாகி விட்டது
இப்போது...
உனது முப்பொழுதும் இன்பமாய்
கழியவேண்டுமென்று
உன் மேல் படிந்திருந்த
நரக நிழலை
வழித்தெடுத்து எறிந்துவிட்டேன்...
உனது பயணம் சுகமாக
இருக்கவேண்டுமென்று
வழியிலிருந்து எடுத்து
அப்புறப் படுத்திவிட்டேன்
முள் என்னை...
உன்னை துன்புறுத்தும்
நினைவு மிச்சங்களை
மொத்தமாய் தீயிலிட்டு
எரித்துவிடுவேன்
இன்னும் சற்று நேரத்தில்...
யாவும் முடிந்துவிடும் !
இனி
தினமும் நீ
விழித்தெழுந்து பார்க்கையில்
உன் வீட்டு பூந்தொட்டியில்
ரோஜாக்கள் மட்டும் பூத்திருக்கும் !
முட்களை எடுத்து
வந்துவிட்டேன் கையோடு...!!
படம் - நன்றி கூகுள்
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
கண்ணாமூச்சி விளையாடும்
சிறுபிள்ளையாய் ஓடி
ஒளிந்து கொள்ளும் உன்னை
ஒவ்வொரு அறையாய்
தேடித் தேடி
களைத்துப் போகும் என்னை
ஓரமாய் நின்று
மௌனமாய் ரசிப்பதே
உன் வேலையாகி போனது !
இதோ
இன்றும்
தேடி ஓடுகிறேன்
ஓடிக்கொண்டே இருக்கிறேன்
களைத்து சோர்ந்து
வாசலோரம் சாய்ந்து அமருகையில்
மடியில் வந்து விழுகின்றன
'எடுத்துக் கொள்ளேன்' என்று
இந்த வார்த்தைகளும்
நீயும் ஒன்று
தேடவைப்பதில்...!!
படம் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (10)
தேவைப்படுகிறது
ஒரு கனத்த மௌனம்
மௌன நிலையில்
ஒன்றையொன்று
உணர்ந்துக்கொள்ளும்
அந்த அற்புத கணம்
என்று வாய்க்குமோ...?!
அவ்வேளையில்
உன் முன்னே
ஒரு வெற்றுத்தாள் போல்
வந்து நிற்கிறேன்
உனது சங்கல்பம்
அப்போதே
என்னுள் எழுதப்படட்டும்
உன்னால்...!
அத்தருணத்தில்
அதுவரையில் இருந்த எனது கற்பனைகளை
கலைத்துப்போடு...
இரவின் தனிமை கட்டிய
கனவுக் கோட்டைகளைத் தகர்த்தெறி...
சேர்த்து வைத்திருந்த
மாயக்கூடுகளை உடைத்துப் போடு...
பழைய எண்ணக்கட்டுகளை
அவிழ்த்து விடு உடன் அழித்துவிடு ...
உணர்ச்சிப் பெருக்குகளை
கட்டுப்படுத்தி கடிவாளம் இடு...
கற்பிதங்கள் படிப்பினைகளை
கரைத்துவிடுவது அவசியமெனில்
கரைத்துவிடு...!
என்னுள் நீ நிறைய
தடையாய் இருக்கும்
அத்தனையும்
இல்லாமல் போகட்டும் !
உன்னை அறிந்து
எல்லாம் அறிந்தவளாக மாற
உன் பாதத்தில்
என்னை சமர்ப்பித்து
பனிமலரால் குளிர்விக்கிறேன்
உன்னை...!!
படம் - நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (5)
இதுவரை
அவன் எனக்காக
ஒன்றும் செய்ததில்லை
பரவாயில்லை
அவனுக்கும் சேர்த்து
நான் காதலிக்கிறேன்
* * *
நேரம் போவது தெரியாமல்
அவனுடன் பேசிகொண்டிருக்கையில்
எனக்கு ஒரே ஒரு கவலை
இந்த நேரம் ஏன் இப்படி ஓடுகிறது?
* * *
எனக்காக அவன்
பேசியதை விட
என்னிடம் பேசியதில் தான்
உணர்கிறேன் காதலை !!
* * *
'என் கவிதையை படித்துவிட்டு
தூங்கச் சென்றால்
தூங்கமாட்டாய் நீ'
என்றான் ஒருநாள்
என்னமோ தினமும்
நான் தூங்குவது மாதிரி...!
* * *
அவனிடம் பேச இயலாதபோது
எதிர்ப்படும் அத்தனை பேரிடமும்
பேசுகிறேன்
அவனைப் பற்றி மட்டுமே...!
* * *
யார் அவன்
கேள்விக்கு
பதில் சொல்ல முடிவதில்லை
எல்லோரிடமும்...
எங்கும் தேடாதீர்கள்
என் கவிதைகளில் இருக்கிறான்
என் 'அவன்' !
படம்-நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (14)
நீ சிதறிய வார்த்தைகளை
நேற்றிரவில்
கனவுகளில் சேகரித்து
விடியலில்
விதைத்துவிட்டேன்
இன்னும் ஆழமாய்
நெஞ்சில்...
நெருப்பால் அணைத்தாய்
பனியென மடி அள்ளிச் சேர்க்க
சுடும் வரை உரைக்கவில்லை
சுட்ட பின்போ
சுட வைத்தவன் நீ தானே
ரசித்து சுகித்தேன் தீயில்...
நேற்று சாம்பாலாகி போன
என் உடலை
உன் நினைவு நீரூற்றி
உயிர்ப்பிக்க
வைத்துவிட்டேன்
உனக்காக இன்று...
மறுபடி
என்றாவது ஒருநாள்
உனக்கு தேவைப்படலாம்
எரித்து விளையாட...!
* * * * *
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்