Posted by
Kousalya Raj
comments (6)
கவிதை
அவன் ஆன்மாவுடன் பேச
நான் கண்டு பிடித்த
ரகசிய வழி!
எழுத்தின் வழி
என்னவனை
சென்றடைய வேள்வி!
இங்கே
கட்டளைகள் சில
மீறப்படும்
கட்டுப்பாடுகள் சில
தளர்த்தப்படும்
கவனிப்புகள் சில
நிராகரிக்கபடும்
புதிர் விடுவிக்கும்
சில கொஞ்சல்கள்...
புனிதம் தெய்வீகமாகும்
சில கெஞ்சல்கள்...
யாரும் அறியாவண்ணம்
அந்தரங்க மொழியில்
திகட்ட திகட்ட
பரிமாறப்படுகிறது
கட்டுடைத்த காதலும்
எண்ணமுடியா முத்தங்களும்...!
இங்கே
நான்
அவன்
மற்றும்
என் கவிதை மட்டுமே...!!
படம் - கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்