Posted by
Kousalya Raj
comments (4)
மழைத் துளிகளில்
ஒரு துளியாக
நீ ரசிக்கும்
வானவில்லின்
ஒரு நிறமாக
உன் கேசம்
கலைத்து விளையாடும்
காற்றாக
நீ நடக்கும்
பாதையோர
ஒற்றை புல்லாக
உன் பாதம் பட்டு
சரசரக்கும்
இலைச் சருகாக
நீ அணியும்
ஆடையின்
ஒற்றை இழையாக
நீ விரும்பி கேட்கும்
பாடலின்
ஒரு ஸ்வரமாக
உனது
கவிதைகளில்
முற்றுப்புள்ளியாக
நீ அருந்தும்
தேநீரின்
கடைசித் துளியாக
ஏதோ ஒன்றாகவேணும்
நானாக வேண்டும் !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (3)
நினைத்தப் போது அழைப்பாய்
அழைத்தப் போது நினைப்பேன்
உன் கோபத்தை
நான் பார்த்ததில்லை
கோபம் தவிர வேறொன்றும்
நான் கொடுத்ததில்லை
'சாப்டியா' என கேட்க தவறமாட்டாய்
தவறியும் கேட்டதில்லை நான்...
காய்ச்சல் என்றதும்
நொடிக்கொரு முறை விசாரித்து
காய்ச்சலை விட அதிகம் படுத்தி எடுப்பாய்
உன் அக்கறை எனக்கு இம்சை
என் இம்சைகள் உனக்கு ரசனை
என் தேவைகள் உனக்கு அவசியம்
உன் விருப்பம் எனக்கு அனாவசியம்
உன் தத்துப்பித்து உளறல்களை
கவிதை என்பாய்
அட அசடே என்றெண்ணி
ஆஹா அற்புதம் என்பேன்
தனிமையில் என்னை
மூழ்கடித்தப் போதெல்லாம்
எங்கே என்று தேடிக்கொண்டிருப்பாய்
தேடுவாய் என்று தெரிந்தே
தொலைந்துப் போகிறேன் அடிக்கடி...
நிலவென்றாய்
உயிரென்றாய்
இரண்டெழுத்தில்
என் பெயர் சுருக்கி
அழுத்தமாய் உச்சரித்து
இது காதல் என்கிறாய்
இப்படி சொல்வதில் உனக்கு
இன்பம் என்றால்
இருந்துவிட்டுத்தான் போகட்டுமே
நமக்குள் காதல் !
படம் : கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்