skip to main |
skip to sidebar
Posted by
Kousalya Raj
இங்கே வெளிச்சம் இல்லை
ஆதலால்
நான் குருடாக இருக்கிறேன்
இங்கே வார்த்தைகள் இல்லை
ஆதலால்
நான் ஊமையாக இருக்கிறேன்
இங்கே சப்தம் இல்லை
ஆதலால்
நான் செவிடாக இருக்கிறேன்
பார்க்கவும் பேசவும் கேட்கவும்
ஏதுமில்லாததை
மௌனம் தனிமை
என்பதை விட
ஜடமாக இருக்கிறேன்
என்றும் சொல்லலாம் !!
2 comments:
அருமை.
வாழ்த்துகள்.
// பார்க்கவும் பேசவும் கேட்கவும்
ஏதுமில்லாததை
மௌனம் தனிமை
என்பதை விட
ஜடமாக இருக்கிறேன்
என்றும் சொல்லலாம் //
சொல்லுகின்ற போது
மௌனம் தன் இருப்பிடத்தைவிட்டு
நகர்ந்து விடுகிறது.
ஊமையின் நாவுகள்
செவிடரின் செவிப்பறையில் மோதுகின்றன...
அருமை சகோ...
தொடர்கிறேன்.
Post a Comment