Posted by
Kousalya Raj
comments (2)
என்ன என்னமோ எண்ணங்கள்
எண்ணங்கள் எண்ணி எண்ணி
எண்ணங்களின் எண்ணிக்கை
ஏராளம்...
ஏதோ எண்ணுகிறேன்
ஏதோ பேசுகிறேன்
எதையோ செய்கிறேன்
என் எண்ணம் போல்
எதையும்
எடுக்கவும் இயலவில்லை...
எதையும்
கொடுக்கவும் மனதில்லை !
பயணத்தில் பல நிறுத்தங்கள்
ஒவ்வொன்றாய் கடக்கின்றேன்
உடன் வந்த பலரும்
நிறுத்தத்திற்கு ஒருவராய்
இறங்கி செல்ல
என் நிறுத்தம் வருவது எப்போது
தெரியாமல் தொடருகிறேன்
பயணத்தை...
எனக்கான நிறுத்தம்
எதுவென சொல்லக்கூடியவர்
என ஒருவரை கை காட்டினார்கள்
எனது எதுவென
கேட்க எத்தனிக்கும் தருணம்
மிக சரியாக
அவரின் நிறுத்தமும் வந்துவிட
இறங்கிச் சென்றே விட்டார்...!
படம்- கூகுள்
Posted by
Kousalya Raj
comments (1)
ஓட ஓடி ஒளிகிறாய்
என்னை என்னுள் ஒளிக்கிறாய்
தேடத் தேட தொலைகிறாய்
என்னையும் தொலைக்கிறாய்
எங்கேயென கெஞ்சினால்
வானத்தில் உனது குரல்
அண்ணாந்து பார்க்கையில்
மேகத்தினுள் மறைகிறாய்
பகலில்
கதிரவனை போலாகிறாய்
இரவினில்
நிலவே நான்தான் என்பாயோ...!
கண்ட கனவொன்று
கலைந்தப் போது
எனதருகில் சிறகொன்றை
கண்டெடுத்தேன் நேற்றிரவு...!
இதோ என் நேச இரைகளை
வானெங்கும் தூவுகிறேன்
பறவையென பறந்து திரியும் நீ
கொத்தித் தின்றுவிடு
இன்றேனும் ...!
Labels:
கவிதை காதல்
,
காதல் கவிதைகள்