ஓட ஓடி ஒளிகிறாய்
என்னை என்னுள் ஒளிக்கிறாய்
தேடத் தேட தொலைகிறாய்
என்னையும் தொலைக்கிறாய்
எங்கேயென கெஞ்சினால்
வானத்தில் உனது குரல்
அண்ணாந்து பார்க்கையில்
மேகத்தினுள் மறைகிறாய்
பகலில்
கதிரவனை போலாகிறாய்
இரவினில்
நிலவே நான்தான் என்பாயோ...!
கண்ட கனவொன்று
கலைந்தப் போது
எனதருகில் சிறகொன்றை
கண்டெடுத்தேன் நேற்றிரவு...!
இதோ என் நேச இரைகளை
வானெங்கும் தூவுகிறேன்
பறவையென பறந்து திரியும் நீ
கொத்தித் தின்றுவிடு
இன்றேனும் ...!
1 comments:
காதல் ஏக்கம் கவிதை அருமை.
Post a Comment