காதலே
உனக்கும் வெட்கம் வரும்
என்னவன் சிரித்தால் !
இன்று எனக்கு
கோபம் வருகிறது
அவன் சிரிக்க மறந்ததால் !
ஏன்
இந்த கள்ள மௌனம்
எங்கே கற்றாய்......?!
உன் இருப்பை
உறுதி படுத்த நான்
எடுக்கும் பிரயத்தனம்
கொஞ்சமா.....?!
நழுவியே செல்கிறாய்
நதி நீர் ஆடும்
மீனை போல !
அன்பு தூண்டிலை விட
வலியதா உன் பணி...
மாட்டி கொள்கிறாய்
சுலபமாக அங்கே !
தவிர்த்து
தவிக்க விடாதே
வேண்டாம் பெண் பாவம்
பாவம் பெண் !
கருணை பார்வை
ஒன்று வீசிச் செல்
உயிர்ப்பித்து விடும்
துடிப்பை மறந்த இதயம் !!?
15 comments:
ஏன்
இந்த கள்ள மௌனம்
எங்கே கற்றாய்......?!////
ஓஹ அந்த ஸ்கூல் பெயர் தெரிந்தால் நீங்களும் அங்கே போய் கற்று கொள்ள போறிங்களா?
அருமையான கவிதை
//கருணை பார்வை
ஒன்று வீசிச் செல்
உயிர்ப்பித்து விடும்
துடிப்பை மறந்த இதயம் !!?//
super...
சூப்பர் கவிதை அருமையான வரிகள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//நதி நீர் ஆடும்
மீனை போல//
//பெண் பாவம்
பாவம் பெண்//
சகோ.. சூப்பர்! ரொம்ப ரசிச்சேன் இதை.. :)
//கருணை பார்வை
ஒன்று வீசிச் செல்
உயிர்ப்பித்து விடும்
துடிப்பை மறந்த இதயம்//
நீண்ட வெய்டிங்...
arumaiyana kavithai kavithakku image uyir kodukkirathu
image enga kidaikirathu...............
தவிப்பு..... நல்லா இருக்குங்க.. :-))
சௌந்தர் சொன்னது…
//ஓஹ அந்த ஸ்கூல் பெயர் தெரிந்தால் நீங்களும் அங்கே போய் கற்று கொள்ள போறிங்களா?//
இதை கத்துக்க ஸ்கூல் வேற போகணுமா...?? சரிதான்...
THOPPITHOPPI சொன்னது…
//அருமையான கவிதை//
வருகைக்கு நன்றிங்க...
மதுரை சரவணன் சொன்னது…
//super...//
நன்றி சகோ.
சசிகுமார்...
நன்றி சசி.
Balaji saravana சொன்னது…
//பெண் பாவம்
பாவம் பெண்//
//சகோ.. சூப்பர்! ரொம்ப ரசிச்சேன் இதை.. :)//
ரசனைக்கு மகிழ்கிறேன் சகோ.
//நீண்ட வெய்டிங்..//
ம்...ஆமாம்பா நீண்ட வெய்ட்டிங் தான்...
:)))
Jeyamaran சொன்னது…
//arumaiyana kavithai kavithakku image uyir kodukkirathu
image enga kidaikirathu..//
வருகைக்கு நன்றி சகோ.
தம்பி சௌந்தர் selection அந்த pic ....!
Ananthi சொன்னது…
//தவிப்பு..... நல்லா இருக்குங்க.. :-))//
ரசனைக்கு மகிழ்கிறேன் தோழி.
அருமையான கவிதை..
Post a Comment