Showing posts with label தேசம். Show all posts
Showing posts with label தேசம். Show all posts
Posted by
Kousalya Raj
comments (8)
குவிக்கப்பட்டனர்
முப்படைவீரர்கள்
பல்லாயிரக்கணக்கில் !
பல்லாயிரக்கணக்கில் !
விமான நிலையம்
ரயில் நிலையங்கள்
பேருந்து நிலையங்கள்
தீவிர சோதனையில்...!
பாராளுமன்ற வளாகம்
ஹோட்டல்கள்
தங்கும் விடுதிகள்
மனிதர்கள்
கடும் கண்காணிப்பில்...!
உச்சகட்ட பாதுகாப்பு
இன்று சுதந்திரதினம் !?
அச்சம் ஏன் ?
எதனால் தீவிரவாதம் ?
சுயநல அரசியலின்
முரண்பட்ட வாதங்களால்
முரண்பட்டு போனதொரு
மக்கள்கூட்டம் அன்றோ அவர்கள்!
அடிஉதை வாங்கிபெற்று தந்தீர்கள்
வெள்ளையர்களிடம் இருந்து
விடுதலை !
இரவில் வாங்கியதால் என்னவோ
உறக்கத்தில் இருந்து
இன்னும் எழவில்லை நாங்கள் !
பகலில் வாங்கிதாருங்கள்
அரசியல்
கொள்ளையர்களிடம் இருந்தும் !
அரசியல்வாதிகளின்
அயோக்கியத்தனம்
அடக்கி
அடையவேண்டும்
மற்றுமோர் சுதந்திரம்
ஆம் வேண்டும் 2 வது சுதந்திரம் !
எங்கள் இளைஞர்களே...
தலைமீது கைவைக்க
காத்திருக்கிறது அமெரிக்கா
கை வெட்ட
நேரம் பார்க்கிறது சீனா
வேடிக்கை பார்க்க
காத்திருக்கிறது மற்றவை !
இனி அலறவேண்டும் அத்தனையும்...
இங்கே மூடப்பட்ட
ஜன்னல்களை திறவுங்கள்
தேச மூலையில்
ஆங்காங்கே கொட்டி கிடக்கிற
நேர்மையை, உழைப்பை, ஞானத்தை
சேர்த்தள்ளி எடுங்கள் !
அவை கொண்டு
புரையோடி போய் கிடக்கிற
சமூக பள்ளங்களில் இட்டு நிரப்புங்கள்
வெற்று மனங்களை இணையுங்கள் !
உள்ளுக்குள் இருக்கும் நெருப்பை
வெளி அள்ளித் தெளியுங்கள்
எரிந்து சாம்பலாகட்டும்
அநீதிகளும்
அவசர கோலங்களும் !
இரண்டாம் சுதந்திரம் பெற்று தாருங்கள்
ஆண்டுகள் பல ஆயினும்
நான் இன்னும் சுவாசிக்கவில்லை
ஜீவனுள்ள சுதந்திரக்காற்று !!
கடும் கண்காணிப்பில்...!
உச்சகட்ட பாதுகாப்பு
சுற்றிலும் இரகசிய கேமராக்கள்
ஹெலிஹாப்டர் ரோந்துகள்
நடுவே செங்கோட்டை
கண்ணாடி கூண்டின் உள்ளே பிரதமர் !
இன்று சுதந்திரதினம் !?
அச்சம் ஏன் ?
எதனால் தீவிரவாதம் ?
சுயநல அரசியலின்
முரண்பட்ட வாதங்களால்
முரண்பட்டு போனதொரு
மக்கள்கூட்டம் அன்றோ அவர்கள்!
எங்கள் முன்னோர்களே...
அடிஉதை வாங்கிபெற்று தந்தீர்கள்
வெள்ளையர்களிடம் இருந்து
விடுதலை !
இரவில் வாங்கியதால் என்னவோ
உறக்கத்தில் இருந்து
இன்னும் எழவில்லை நாங்கள் !
பகலில் வாங்கிதாருங்கள்
அரசியல்
கொள்ளையர்களிடம் இருந்தும் !
அரசியல்வாதிகளின்
அயோக்கியத்தனம்
அடக்கி
அடையவேண்டும்
மற்றுமோர் சுதந்திரம்
ஆம் வேண்டும் 2 வது சுதந்திரம் !
எங்கள் இளைஞர்களே...
தலைமீது கைவைக்க
காத்திருக்கிறது அமெரிக்கா
கை வெட்ட
நேரம் பார்க்கிறது சீனா
வேடிக்கை பார்க்க
காத்திருக்கிறது மற்றவை !
இனி அலறவேண்டும் அத்தனையும்...
இங்கே மூடப்பட்ட
ஜன்னல்களை திறவுங்கள்
தேச மூலையில்
ஆங்காங்கே கொட்டி கிடக்கிற
நேர்மையை, உழைப்பை, ஞானத்தை
சேர்த்தள்ளி எடுங்கள் !
அவை கொண்டு
புரையோடி போய் கிடக்கிற
சமூக பள்ளங்களில் இட்டு நிரப்புங்கள்
வெற்று மனங்களை இணையுங்கள் !
உள்ளுக்குள் இருக்கும் நெருப்பை
வெளி அள்ளித் தெளியுங்கள்
எரிந்து சாம்பலாகட்டும்
அநீதிகளும்
அவசர கோலங்களும் !
இரண்டாம் சுதந்திரம் பெற்று தாருங்கள்
ஆண்டுகள் பல ஆயினும்
நான் இன்னும் சுவாசிக்கவில்லை
ஜீவனுள்ள சுதந்திரக்காற்று !!
Labels:
சுதந்திரதினக் கவிதை
,
தேசம்


