Showing posts with label தேவதை. Show all posts
Showing posts with label தேவதை. Show all posts
Posted by
Kousalya Raj
comments (45)
நீ சிரிக்கும் போது சிதறிய முத்துக்களை அள்ளி
எடுத்தே கை வலித்திருக்குமோ
சிவந்திருக்கிறது
உன் அன்னையின் கை !
கவிதைகள் சொல்லிவிட்டது என்னிடம்
அந்த ரகசியத்தை
நீ பிறந்த பின்பே கவி புனைய
தொடங்கினாராம் உன் தந்தை !
உன் மென் பட்டு பாதம் கண்ட மேக கூட்டம்
இறங்கி வந்து நீ நடக்க
பாதை அமைத்திட்டதோ
துணை இன்றி தவிக்கிறது வானம் !
குயில்கள் உன் மழலை மொழி கேட்டு
தன் மொழி மறந்து
திரிகின்றனவோ
ஆட மறுத்து அலையும் மயில்கள் !
படபடக்கும் உன் விழி பார்த்து
உன்னிடம் பாடம் பயில
வந்துவிட்டதோ
தோட்டத்தில் காணவில்லை வண்ணத்து பூச்சிகள் !
என் வீட்டு ரோஜாக்களும் கிளம்பி விட்டன உன்னை வாழ்த்துவதற்கு.....!!!
இன்று நண்பர் தேவா அவர்களின் மகள் அக்ஷயாவின் பிறந்த நாள்.
அந்த அழகு மகளை வாழ்த்தி இந்த சிறிய கவிதை.
இன்று போல் என்றும் சுகமாய் வாழ வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்.



