Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Posted by
Kousalya Raj
comments (0)
பிரித்தறிய இயலாத
உன் மௌனம் புன்னகை
அர்த்தம் தேடித் தேடி
தொலைத்துவிடுகிறேன்
வார்த்தைகளை
எனை சோதனைக்குள்ளாக்கி
மகிழ்வதில் அப்படியென்ன
ஆனந்தமோ உனக்கு...
தூக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளை
தூக்கிப் போனாயோ
இன்னும் விழிக்கவில்லை
தூக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளை
தூக்கிப் போனாயோ
இன்னும் விழிக்கவில்லை
நானும் இரவும்...
வாழ்க்கையை உன்னிடம் கொடுத்துவிட்டு
வாழ்வதைக் கண்டு ரசித்திருக்க
வைத்து விட்டதென்னவோ
வாழ்க்கையை உன்னிடம் கொடுத்துவிட்டு
வாழ்வதைக் கண்டு ரசித்திருக்க
வைத்து விட்டதென்னவோ
வாழ வா இல்லை நான் வாழவா ?!
நிழல் தேடி ஒதுங்கினேன்
வெட்டப்பட்ட மரத்தினடியில்
உன் மனம் தேடி
ஒதுங்கியது என் காதல்
* * *
விடியல் நீயென
நானிருக்க
அஸ்தமனம் இல்லா
என் உலகில் விடியல் ஏதடி
என்கிறாய்
* * *
நிழல் தேடி ஒதுங்கினேன்
வெட்டப்பட்ட மரத்தினடியில்
உன் மனம் தேடி
ஒதுங்கியது என் காதல்
* * *
விடியல் நீயென
நானிருக்க
அஸ்தமனம் இல்லா
என் உலகில் விடியல் ஏதடி
என்கிறாய்
* * *
image -google
Labels:
கவிதை
,
கவிதை காதல்
Posted by
Kousalya Raj
comments (0)
![]() |
'ம்' என்று நீ சொல்லும்
ஒவ்வொரு முறையும்
ஓராயிரம் வார்த்தை சொன்னதாய்
திருப்திபட்டுக் கொள்ளச் சொல்கிறது
'ம்' உடன் தொடர்ந்து வந்த
உன் புன்னகை...!
* * *
சொல்ல வந்ததை மறைத்து
வேறு எதையோ
பேசி விடைபெறும்போது
விழுந்து நொறுங்குகிறது
மனதைவிட்டு வெளியேறிவிட்ட
ஒலியற்ற சொற்கள் !
* * *
என்னவன்
தூங்கவேண்டும்
தொல்லைப் பண்ணாமல்
தொலைந்து போங்கள்
துரத்தி விட்டேன்
உன் மீதான என் நினைவுகளை...
* * *
வழக்கம்போல காசோலையில்
இன்று கையெழுத்திட்டேன்
ஏதோ வித்தியாசம்
உற்றுக் கவனித்தேன்
எப்போது இணைந்தது
என் பெயருடன் உனது பெயர் !
* * *
அடுத்தவர் கவிதை வாசிக்கும் போது
உன் நினைவு வரும்
உன் கவிதை வாசிக்கும் போது
என் நினைவு போகும்
கவிதை யாருக்கானது என...!
* * *
எனக்கு உன் மௌனம் பிடிப்பதில்லை
உனக்கு என் சத்தம் பிடிக்காது
இருவரும் இணையும் பொழுதில்
இரண்டு மௌனங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன
சத்தமாக !
* * *
image -Google
Labels:
கவிதை
,
கவிதை காதல்
Posted by
Kousalya Raj
comments (0)
அன்னையிடம் இருந்து
தொடங்கியது என் உலகம்
சுழலத் தொடங்கியது
உன்னை சந்தித்தப்பிறகு !
வண்ணத்துப்பூச்சி எனக்கு தெரியும்
வண்ணங்கள் இருக்கிறது பார் என்றாய்
கம்பன் பாரதி உன் உறவென
அறிமுகப்படுத்தினாய்
அடைந்துக்கிடக்காதே
சிறகடித்துப் பற...
தொடங்கியது என் உலகம்
சுழலத் தொடங்கியது
உன்னை சந்தித்தப்பிறகு !
வண்ணத்துப்பூச்சி எனக்கு தெரியும்
வண்ணங்கள் இருக்கிறது பார் என்றாய்
கம்பன் பாரதி உன் உறவென
அறிமுகப்படுத்தினாய்
அடைந்துக்கிடக்காதே
சிறகடித்துப் பற...
வானம் உன் வசமாகும்
என்றாய்
சிறகில்லை என்றேன்
சிரித்துக் கொண்டே
அணிவித்து விட்டாய்
அதுவரை நான் அறியாச் சிறகை
என்னுள் இருந்து எடுத்து !?
படித்ததெல்லாம் மறந்தது என்றேன்
புதிதாய் படி கற்றுத் தருகிறேன் என்றாய்
உன்னையும் படிக்க வைத்தாய்
விரும்பிப் படித்தேன் !
பூட்டிய சிறகுடன் பறக்க
எத்தனித்தப் போது
எங்கோ கிளம்பிவிட்டாய் நீ...
காரணம் கேட்டேன்
'உன் நினைவுகள்
என்றாய்
சிறகில்லை என்றேன்
சிரித்துக் கொண்டே
அணிவித்து விட்டாய்
அதுவரை நான் அறியாச் சிறகை
என்னுள் இருந்து எடுத்து !?
படித்ததெல்லாம் மறந்தது என்றேன்
புதிதாய் படி கற்றுத் தருகிறேன் என்றாய்
உன்னையும் படிக்க வைத்தாய்
விரும்பிப் படித்தேன் !
பூட்டிய சிறகுடன் பறக்க
எத்தனித்தப் போது
எங்கோ கிளம்பிவிட்டாய் நீ...
காரணம் கேட்டேன்
'உன் நினைவுகள்
என் நினைவுகள் அல்ல'
காற்றின் வழி செவியை அறைகிறது
எனக்கான பதில் !!?
* * * * *
image - Google
Posted by
Kousalya Raj
comments (6)
பிரியங்களை கோர்த்து
ஒரு வாழ்த்துச்சொல்ல
வார்த்தைகளை தேடித்தேடி
களைத்துப் போனேன் நான்
ஏதோ கையில் கிடைத்த எழுத்துக்களை
இதோ வரிகளாக்குகிறேன்
பிழை இருப்பினும்
ஏற்றுக் கொள்
அவை பிழைகள் அல்ல
என் பிரியங்கள் என...
வார்த்தைகளுக்குள்
நீ அடங்குவதும்
அதற்குள் உன்னை
அடக்குவதும்
அவ்வளவு எளிதா என்ன...
யாரோடும் ஒப்பிட நீ
அவர் போல்
இவர் போல் அல்ல
நீ வேறானவன்
என் நல்லவை அனைத்திற்கும்
வேரானவன்...
நீ நேரானவன்
முழுமைக்குள் மூழ்கிக் கிடக்கும்
நிறைவானவன்...
பேசுபவன் அல்ல நீ
பேசப்பட வேண்டியவன் !
அசாத்தியமும்
சாத்தியம் உன்னிடத்தில்...
அசாதாரணங்கள்
சாதாரணமாவது உன்னிடமே...
உலகின்
அத்தனை வாழ்த்துகளும்
ஒட்டு மொத்தமாய்
ஒன்றுச் சேர்ந்து
வாழ்த்தட்டும் இன்று !!!
போராளி பேரொளியாய்
மின்னட்டும் என்றும்...!!!!
இனிய நண்பர் தேவாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் !!
(குருவை ஒருமையில் குறிப்பிட்டதற்கு பொறுத்துக் கொள்க) :-)
Posted by
Kousalya Raj
comments (2)
அனல் வீசும் காட்டில்
எரிந்தும் எரியாமலும்
கசியும் புகை
காற்றில் வீசி
எறியப் பட்ட சருகுகள்
காட்டாற்றில்
பெருக்கெடுத்தோடுகிறது மணல்
கீச்சு கீச்சுக்களும்
குக்கூக்களும் கரைந்து
செவியருக்கிறது கோட்டான்களின்
ஊளைச் சத்தம்...
மாட்டிக்கொண்ட
விட்டு விலகிட முடியா
ஆலமர விழுதின் வேர் முடிச்சை
அவிழ்க்கவும் வெட்டவும் இயலும்
என்றபோதிலும்
இப்போதெனக்கு
வேண்டுமெனக்கு ஒரு தனிமை
என்னில் இருந்து
என்னைத் தவிர்த்த ஒரு தனிமை !
Posted by
Kousalya Raj
comments (3)
உலவும் காடுகளில்
கடவுளுக்கு ஏனோ
வேலையிருப்பதில்லை !
மனிதரின் கண்ணீர்
மொத்தமும் விழுந்து
நாள்காட்டியின்
ஏதோ ஒரு நாளில்
ஆழிபேரலை வரும்
அதில் அடித்துச்செல்லப்படும்
அத்தனை அசிங்கங்களும் !
சக மனிதனை
குத்திக்கிழிக்கும்
வெறிப்பிடித்த
தீநாவுகள்
கருகிப் போகும்
கர்வங்கள்
துரோகங்கள்
பொய்கள்
பசப்பு வார்த்தைகள்
மிகைப்பட்ட
கோமாளித்தனங்கள்
எதுவும் இருக்காது அந்நாளில் !
இறுதிநாளில்
தன்னுடன்
அழைத்து செல்ல
அழைத்து செல்ல
வந்த கடவுள்
ஏமாந்தே போவான்
மனிதன் ஒருவரையும் காணாமல் !?
படங்கள் - நன்றி கூகுள்
Posted by
Kousalya Raj
comments (16)
பல வந்தன
பலவாகி வந்தன
பலனின்றி சில
பலமின்றி சில
பலமாய் பயமின்றி
வேர் விட்ட ஒன்று எதுவோ
அதை இது
உடைத்து போட முயன்று தோற்று
உடைந்து போனது என்னவோ இது தான் !
அது வேறு வேறாகி
போயினும்
அது அதுவாகியே
தனித்திருந்தது
தன் இருப்பு புரிந்திருந்தது...
வெளியில் தெரியா நகைப்பு
உள்ளில் புரியா திகைப்பு
இப்படியும் இயலுமா
சிந்தித்தே சிதறிப்போனது
சிந்தை...
கோபக்கனல்களால் சபிக்கப்பட்ட அது
தொடர்ந்த இரவுகளின் கனவுகளில்
விமோசனம் அடைந்தது...
அது போன்ற முடிவுறாக் கனவுகள்
முடிவுரக்கூடும்
கூட்டை புறந்தள்ளி உயிர்
விடுதலை பெறும் இறுதி நாளில்...
ஆழமாய் புரிய முயன்ற அது
அறிவற்றது என அர்ச்சிக்கபட்டது
அறிவை கடந்த புரிதல் அது என்பது புரியாதது
அறியாமையா அதிக அறிவின் மாயையா ?
கொலைக்களத்தில் ஓர்நாள்
கொலையுண்ட அது
ஒற்றை பார்வையில் சட்டென்று
உயிர்ப் பெற்று நகைக்கிறது
சிறிதும் லஜ்ஜையின்றி...
அறிந்தே சித்தரித்த பிம்பங்கள்
ஒவ்வொன்றாக உடைத்து போட போட
சிதறி விழும் சில்லுகளில்
அதுவே அதுவாகி தெரிகிறது
எதுவான போதும்
பிடிவாதமாய் நிற்கிறது
அது அதுவாகவே !!
* * * * *
Posted by
Kousalya Raj
comments (8)
ஆர்ப்பாட்டமான அழைப்பு
அக்கறையாய் நலம் விசாரிப்பு
சலிக்காத சம்பாஷனை
அர்த்தமற்ற அங்கலாய்ப்பு
நேச பரிமாற்றம்
அவஸ்தையான வெட்கம்
சில புரிதல்கள்
சில சமாளிப்புகள்
சில கட்டளைகள்
சில வற்புறுத்தல்கள்
சில கோபங்கள்
சில கெஞ்சல்கள்
ஒரு சொல் பனித்தூறல்
மறு சொல் எரியும் தணல்
அத்தனை சந்திப்பிலும்
இறப்பும் உயிர்ப்பும்
சாதாரண ஒரு நிகழ்வாகி விடுகிறது !
ஒவ்வொரு சந்திப்பிலும்
விழுவது நானாக
எழுவது நீயாகவும்
இருக்கிறாய்...
...
சரிதான்
நான் விழுந்து
நீ எழுவது தானே காதல் !
* * * * *
எல்லா சந்திப்புகளின் முடிவிலும்
எப்போதும்
சில பதில்கள்
மிச்சமிருக்கின்றன
கேட்க மறந்த
சில கேள்விகளும்
சொல்ல விட்டுப்போன
சில விளக்கங்களும்...
படங்கள் - கூகுள்
Posted by
Kousalya Raj
comments (9)
புது பொம்மை
பத்திரமாக இருக்கிறதா
பாதி தூக்கத்தில்
தடவி பார்க்கும் குழந்தை போல...
நடு இரவில்
மெல்ல தொட்டு
தடவிப் பார்க்கிறேன்
உறக்கத்தில் இருக்கும்
பத்திரமாக இருக்கிறதா
பாதி தூக்கத்தில்
தடவி பார்க்கும் குழந்தை போல...
நடு இரவில்
மெல்ல தொட்டு
தடவிப் பார்க்கிறேன்
உறக்கத்தில் இருக்கும்
உன் நினைவுகளை !!
* * *
பேசதொடங்கினாய்
* * *
* * *
பேசதொடங்கினாய்
வீணை சுரங்கள் மறந்தது !
சிரிக்க தொடங்கினாய்
வண்ணத்துபூச்சியினை
வரைந்து
வண்ணம் தீட்டிவிட்டேன்
நான் !
வண்ணம் தீட்டிவிட்டேன்
நான் !
* * *
என்ன மாயம்
செய்து போனாய்
என் கனவு தோட்டத்து பூக்கள்
மணம் வீசுகின்றன !
* * *
சுற்றிலும்
கொழுந்துவிட்டு எரியும்
நெருப்பு
வளையத்துக்குள் இருக்கும்
பற்றி எரியாத
ஒற்றை கற்பூரம்
நீ...!
படம் - கூகுள்
நீ...!
படம் - கூகுள்
Posted by
Kousalya Raj
comments (15)
- தத்துவங்கள்
"நீ செத்துட்டா நானும் செத்துடுவேன்"
- பிதற்றல்கள்
"அடுத்த ஜென்மத்திலும் பிரிவில்லை"
- சத்தியங்கள்
எல்லாம் மறந்து போகின்றன !
* * * * * * *
மீளா இறப்புகள்
மீளா துயரங்கள்
ஆற்றமுடியாப் பிரிவுகள்
சோகங்கள்
வேதனைகள்
இழப்புகள்
எல்லாம் மறக்கடிக்கபட்டு
விடுகின்றன...
சில நாட்களில்...
சில வாரங்களில்...
சில மாதங்களில்...
யதார்த்த உலகில்
வாழ்க்கை
வெகு இயல்பாகிவிடுகிறது !!
வெகு இயல்பாகிவிடுகிறது !!



.jpg)











