Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
Posted by
Kousalya Raj
comments (0)
அன்னையிடம் இருந்து
தொடங்கியது என் உலகம்
சுழலத் தொடங்கியது
உன்னை சந்தித்தப்பிறகு !
வண்ணத்துப்பூச்சி எனக்கு தெரியும்
வண்ணங்கள் இருக்கிறது பார் என்றாய்
கம்பன் பாரதி உன் உறவென
அறிமுகப்படுத்தினாய்
அடைந்துக்கிடக்காதே
சிறகடித்துப் பற...
தொடங்கியது என் உலகம்
சுழலத் தொடங்கியது
உன்னை சந்தித்தப்பிறகு !
வண்ணத்துப்பூச்சி எனக்கு தெரியும்
வண்ணங்கள் இருக்கிறது பார் என்றாய்
கம்பன் பாரதி உன் உறவென
அறிமுகப்படுத்தினாய்
அடைந்துக்கிடக்காதே
சிறகடித்துப் பற...
வானம் உன் வசமாகும்
என்றாய்
சிறகில்லை என்றேன்
சிரித்துக் கொண்டே
அணிவித்து விட்டாய்
அதுவரை நான் அறியாச் சிறகை
என்னுள் இருந்து எடுத்து !?
படித்ததெல்லாம் மறந்தது என்றேன்
புதிதாய் படி கற்றுத் தருகிறேன் என்றாய்
உன்னையும் படிக்க வைத்தாய்
விரும்பிப் படித்தேன் !
பூட்டிய சிறகுடன் பறக்க
எத்தனித்தப் போது
எங்கோ கிளம்பிவிட்டாய் நீ...
காரணம் கேட்டேன்
'உன் நினைவுகள்
என்றாய்
சிறகில்லை என்றேன்
சிரித்துக் கொண்டே
அணிவித்து விட்டாய்
அதுவரை நான் அறியாச் சிறகை
என்னுள் இருந்து எடுத்து !?
படித்ததெல்லாம் மறந்தது என்றேன்
புதிதாய் படி கற்றுத் தருகிறேன் என்றாய்
உன்னையும் படிக்க வைத்தாய்
விரும்பிப் படித்தேன் !
பூட்டிய சிறகுடன் பறக்க
எத்தனித்தப் போது
எங்கோ கிளம்பிவிட்டாய் நீ...
காரணம் கேட்டேன்
'உன் நினைவுகள்
என் நினைவுகள் அல்ல'
காற்றின் வழி செவியை அறைகிறது
எனக்கான பதில் !!?
* * * * *
image - Google
Posted by
Kousalya Raj
comments (11)
பிரியமே
எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை ...உள்ளத்தில் நிறைத்து வைத்திருப்பதை எல்லாம் அவ்வளவு எளிதாக எழுத்தில் கொட்டிவிட முடிகிறதா என்ன... என்னிடம் காதல் ஒரு காற்றை போல வரவில்லை புயலை போல காற்றாற்று வெள்ளத்தைப் போல வந்தது... எந்த நிமிடம் முதல் உன்னை உள்ளத்தில் கொண்டேன் என்பதும் தெரியவில்லை...
காலம் பல கடந்து இன்று வெகு சுலபமாக குற்றம் சாட்டுகிறாய் மறந்துவிட்டேன் என்று... உனக்கென்ன தெரியும் எனது பிரியங்களை பற்றி... அந்தியில் விரிந்து விடியலில் வாடிவிடும் மலரை போன்றதல்ல அவை...
உன் மீதான எனது பிரியங்கள் வைராக்கியம் மிகுந்தவை, எனக்கும் கட்டுபடாதவை... உன்னைவிட்டு விலகிச் சென்றுவிடவேண்டும் என்று முயலும் போதெல்லாம் தலையில் குட்டி எனக்கு வலி தந்து உனக்கு சந்தோசம் பரிசளித்து ரசிக்கும் பொல்லாத பிரியங்கள் அவை! காலத்தின் மீது பழி போட்டு மௌனித்து விலகி நிற்கும் உன் போக்கை 'புரிதல்' என புரிந்து வைத்திருக்கும் எனது பிரியத்தின் அசட்டுத்தனம் உனக்கு புரிய வாய்ப்பில்லை.
'காதல் என்பது நேசிப்பது மட்டுமல்ல சூழ்நிலை புரிந்து விலகி நிற்பதும்' என்று முன்பொருமுறை நீ சொன்னதை நான் இன்னும் மறக்கவில்லை... பிரியமானவனின் மௌனத்தை எவ்வாறு மொழிப்பெயர்த்தாலும் அது காதல் என்றே வருவதன் காரணமும் இதாகவே இருக்கிறது. மனக் கட்டுபாடுகளை தகர்த்து எறிந்த காதலை விதிமீறல் என குற்றம் சாட்டமாட்டேன் ... காதலுக்கு ஏது விதிகளும் மீறல்களும் விலக்குகளும்...
உனது சாயல் இல்லாமல் எதுவும் என்னை கடப்பதுமில்லை எதையும் நான் கடந்ததும் இல்லை... வாசித்த புத்தகங்களில் ராஜராஜ சோழனும் பாண்டிய பல்லவ மன்னர்களும் உனது சாயலைக் கொண்டிருந்தது உனக்கு தெரிய வாய்ப்பில்லைதான்
தட்டுத் தடுமாறி
மெல்ல நடை பயின்று
விழும் போதெல்லாம் தூக்கி
விடும் உனது நேசக் கரங்களை
இறுகப் பற்றிக் கொண்ட நாள் முதல்
இன்று வரை காதல்
எனக்கு
சுகமானதாகத்தான் இருந்தது
வண்ணத்து பூச்சி என்னுள்
பறந்த போதெல்லாம்
அதன் அழகை அசைவு விடாமல்
உன்னிடம் வர்ணித்த நாள்வரை
நேசம்
எனக்கு பிடித்தமானதாகத் தான் இருந்தது
நான் எனது என்பது மறந்து
உனது எல்லாம் எனதானது முதல்...
சுற்றிச் சுழலும் உன்னை
காற்றும் தீண்டக் கூடாதென
என் பார்வையால் வளைத்து வைத்துக் கொண்ட
கடந்த நிமிடம் வரை
காதல்
எனக்கு பிடித்தமானதாகத்தான் இருக்கிறது
பேசிக்கொள்ளாமல் காதலை தொடருவது எவ்வாறு என்ற ஆராய்ச்சியில் வென்று இன்று மௌன அகராதி எழுதிக் கொண்டிருக்கிறாள் இந்த அகராதி பிடித்தவள்.
குட்டி சண்டையின் பிறகு ஒரு சமாதானம் அதற்காக காத்திருக்கும் தருணத்தில் பூக்கும் ஒரு புது காதல் ...இவ்வாறு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் பூக்கச்செய்து அன்றலர்ந்த மலராய் மணம் வீசுகிறது எனது காதல் ! அப்படியேத்தான் தான் இருக்கிறது எனக்குள்ளும் காதல் அன்று போலவே இன்றும்... என்னவொன்று அன்று பேசிப் பேசி காதல் செய்தோம் இன்று மௌனங்களைப் பரிமாறி காதலை இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.
நீ பேசாவிட்டாலும்
நான் பேசிக் கொண்டுத்தான் இருக்கிறேன்
உனக்கு கேட்கவில்லை
என்பதற்காக நான் பேசவில்லை
என்றாகிவிடுமா என்ன?
என்னை போலத்தான் நீயும் என்னையே நினைத்துக் கொண்டு காலத்திற்குள் உன்னை புதைத்து மௌனித்திருக்கிறாய் என புரிந்து வைத்திருக்கிறேன். உனக்காக எழுதிய கவிதைகளை நானே வாசித்து கிழித்துப் போட்டுவிட்டு காகிதங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் பறந்துச் சென்று என்னவனை நலம் விசாரித்து வாருங்களேன் என்று... கேட்கவும் பார்க்கவும் பேசவும் எதுவுமில்லாமல் போனாலும் நான் இருப்பேன் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உன் நினைவுகளை இறுக அணைத்துக் கொண்டு... !!!
இப்படிக்கு,
உனது பிரியங்கள்.
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (1)
உன் ஒருவனை தேடி
ஜென்மஜென்மமாய் அலைந்து திரிந்த
கதைகளை நான் சொல்ல
நீ கேட்க வேண்டுமென
நாட்களை வருடங்களில் கடந்து
காத்துக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
பேசாமல் தீர்ந்த பொழுதுகளை
தேடிப்பிடித்து
பேசிப் பேசித் தீர்க்கவும்
வாழாமல் வெட்டியாய் கழிந்த இரவுகளை
வாழ்ந்துக் கழிப்பது எவ்வாறெனவும்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
தனிமை துயரினை தீர்க்க
கனவினைப் போன்ற மருந்தொன்றை
உனையன்றி வேறு யார் தருவார்?
எனது கனவுகளை
நனவாக்கிய உனது கனவுகளை
கையில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
நெருக்கத்தின் நெருப்பில் நெஞ்சம் தகிக்க
விழிகளின் மோதலில் மோகித்து
விரல்களின் உரசலில் கிறங்கிக் கிடந்த
கற்பனைகளை சாத்தியமாக்கி
நமது முதல் சந்திப்பினை காவியமாக்க
முயன்றுக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
...
...
...
அன்றேனும் செய்வாயா... காதல்!
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (0)
நட்சத்திரங்களை பரப்பி
வானவில்லை நட்டு வைத்து
நிலவுடன் கைக்கோர்ப்பது
உனது கனவாக உள்ளது
கனவு நிறைவேறவேண்டும்
என்பது ஒன்றே
எனது பிரார்த்தனையானது
இப்போது !
* * *
தீரத் தீர
மீண்டும் மீண்டும்
ஊற்றி நிறைத்துக்
கொண்டிருக்கிறேன்
என்னை...
நினைத்து நினைத்து
தீர்ந்துப் போகுமோ
உன் ஞாபகங்கள் !!?
* * *
நெஞ்சை பிசையும் கவலை
வருத்தும் வேதனை
எவை
என்னை மூழ்கடித்தாலும்
நொடியில்
கரையேறி விடுவேன்
என் பெயர் சொல்லி
நீ அழைக்கும் போதினிலே...
* * *
புகைப்படம் எடுத்தப்போது
யாரை பார்த்தனவோ
இப்போது
என்னைத் தவிர
வேறு எங்கும் பார்ப்பதில்லை
உனது அந்த இரு விழிகள் !!
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
பேச விசயம்
இல்லாத போதும்
அடிக்கடி
பேசியாகணும்
உன்னிடம்
ஏதோ ஒன்றை பற்றியாவது
இதை
அதை
எதையாவது
தேடி ஓடுகிறேன்
அந்த ஏதோ ஒன்றை
கண்டுப் பிடிக்க...!
* * *
நான் தூங்க
முதலில் உன் நினைவுகளை
தூங்க வைக்கிறேன்...
மூடிய இமைகளுக்குள்
ஓடிப் பிடித்து விளையாடுகிறது
அதுவரை தூங்குவதாய்
நடித்துக் கொண்டிருந்த
உன் நினைவுகள்..!
* * *
ஊடலில் உண்டாம் இன்பம்
சண்டைக்கு காரணம் தேடி
உன் வார்த்தைகளுக்குள் ஓடி
தேடிக் கண்டுபிடித்து
உன் நெஞ்சுக்கு நேராய்
வீசிய அடுத்த நொடி
ஐயோ உனக்கு வலிக்குமே
பதறும் என்னை பைத்தியகாரியாக்கி
நீ சிரிக்கும் வேளையில்
சமாதானப்பூ பூத்து
கூடலில் முடித்து வைக்கிறது
* * *
சூழ்ந்த மேகங்களை
வேகவேகமாய் விலக்கி
மெல்ல எட்டிப்பார்க்கிறான்
கதிரவன்...
எனக்கேன்
உன் முகம் நினைவுக்கு வரணும் ?!
* * *
பேருந்தில்
கூட்டத்தோடு
முண்டியடித்து
எனக்கு முன்னால்
ஏறிச் சென்று
துண்டுப் போட்டு
ஜன்னலோரம்
இடம் பிடித்து வைக்கிறது
உன் நினைவுகள் !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (1)
உனக்கு பிடித்த
உன் கற்பனைகளுக்குச் சிறகு தந்த
வாதாம் மரத்தின் அருகே
உன் சுவாசத்தின் ஒருத் துளி தேடி
அமர்ந்திருக்கின்றேன்
வெகு நேரமாய் ...
ஒன்றாய் நாம் திரிந்த வீதிகளில்
உன் நினைவுகளை ஏந்தி
தனியாய் அலையும் எனக்கு
ஒரு நம்பிக்கை இருக்கிறது
என்னை அழைத்து வந்த
அந்த ஏதோ ஒன்று
உன்னையும் இங்கே
அழைத்து வரும் என்று...
நீண்ட காத்திருப்புகள்
பதிலொன்றை என் மீது
வீசி எறிந்தது கேள்வியாக...
கடைசியாக நீ பேசிய
'புரிய முயற்சிச் செய்'
என்பதன் அர்த்தம்
'பிரிய முயற்சிச் செய்'
என்பதாக இருக்குமோ...?
ஒரு அத்தியாயம் ஒன்றின்
முடிவுரை எழுதி முடித்து
முடிந்து
பனிப் போர்வைக்குள்
தனித்து
நான் விறைத்துக் கிடக்கும்
வேளையில்
நீ என்னைக் கடந்து போகலாம்
அது நானென்று அறியாமல்
இது ஏதோவொன்று என...!
படம்- கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
மழைத் துளிகளில்
ஒரு துளியாக
நீ ரசிக்கும்
வானவில்லின்
ஒரு நிறமாக
உன் கேசம்
கலைத்து விளையாடும்
காற்றாக
நீ நடக்கும்
பாதையோர
ஒற்றை புல்லாக
உன் பாதம் பட்டு
சரசரக்கும்
இலைச் சருகாக
நீ அணியும்
ஆடையின்
ஒற்றை இழையாக
நீ விரும்பி கேட்கும்
பாடலின்
ஒரு ஸ்வரமாக
உனது
கவிதைகளில்
முற்றுப்புள்ளியாக
நீ அருந்தும்
தேநீரின்
கடைசித் துளியாக
ஏதோ ஒன்றாகவேணும்
நானாக வேண்டும் !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
நினைத்தப் போது அழைப்பாய்
அழைத்தப் போது நினைப்பேன்
உன் கோபத்தை
நான் பார்த்ததில்லை
கோபம் தவிர வேறொன்றும்
நான் கொடுத்ததில்லை
'சாப்டியா' என கேட்க தவறமாட்டாய்
தவறியும் கேட்டதில்லை நான்...
காய்ச்சல் என்றதும்
நொடிக்கொரு முறை விசாரித்து
காய்ச்சலை விட அதிகம் படுத்தி எடுப்பாய்
உன் அக்கறை எனக்கு இம்சை
என் இம்சைகள் உனக்கு ரசனை
என் தேவைகள் உனக்கு அவசியம்
உன் விருப்பம் எனக்கு அனாவசியம்
உன் தத்துப்பித்து உளறல்களை
கவிதை என்பாய்
அட அசடே என்றெண்ணி
ஆஹா அற்புதம் என்பேன்
தனிமையில் என்னை
மூழ்கடித்தப் போதெல்லாம்
எங்கே என்று தேடிக்கொண்டிருப்பாய்
தேடுவாய் என்று தெரிந்தே
தொலைந்துப் போகிறேன் அடிக்கடி...
நிலவென்றாய்
உயிரென்றாய்
இரண்டெழுத்தில்
என் பெயர் சுருக்கி
அழுத்தமாய் உச்சரித்து
இது காதல் என்கிறாய்
இப்படி சொல்வதில் உனக்கு
இன்பம் என்றால்
இருந்துவிட்டுத்தான் போகட்டுமே
நமக்குள் காதல் !
படம் : கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (2)
இமைச் சிறகடித்து
பனியிதழ் விரித்து
அவன் சிரிக்கும் போதெல்லாம்
வானுக்கும் பூமிக்குமாய்
பயணிக்கிறது
எனது உயிர் !
* * *
பனியூறிய இதழ்
பனிச் சிதறல் சிரிப்பு
பனித் தூறல் சொற்கள்
பனிமூட்டம் அவனது அண்மை
பனிப்போர்வை அவனது மௌனம்
பனிப்பொழிவு அவனது நேசம்
பனிப்பார்வை குளிர்விக்க
பனியால் சூழ்ந்து
பனியாய் தழுவினான்...
என்னை மறந்துக் கிறங்கிய
ஒருபொழுதில்
மூடிக் கிடந்த விழி
மெல்ல திறக்க...
சட்டென்று
வந்த தடம் இன்றி
கரைந்து
காற்றில் கலந்து
மறைந்தே போனான்
அவன்...!
* * *
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (12)
நமது சந்திப்பு
ஒவ்வொன்றின் முடிவிலும்
பேசி
விடை பெறுகிறாய் நீ
விடை பெற்றும்
பேசிக்கொண்டிருக்கிறேன்
அதுவரை
உன்னிடம் சொல்லவியலாத
காதல் படிமங்களுடன்...!
* * *
நம்மிடையே
சம்பிரதாயமான விடைபெறுதல்
சாத்தியமில்லை
என்றா
ஒரு காற்றைப்போல செல்கிறாய்...
என்னவொன்று
காற்று தொட்டுச் செல்லும்
நீ விட்டுச் சென்றாய் !
* * *
விடைப் பெற்று நீ
சென்ற பின்னும்
பல முறை
திரும்பிப் பார்க்கிறேன்
பார்ப்பேன் என தெரிந்தே
போகாமல் இன்னும்
அங்கேயே
நின்றுக்கொண்டிருக்கிறது
உன் நிழல்...!
* * *
எப்படியாவது சொல்லிவிடுவாய்
என்றுதான்
நமது எல்லா சந்திப்புகளிலும்
எதிர்பார்க்கிறேன்...
விடைபெறுவாய்
எல்லாம் பேசியும்
என்னை பேசாமலும்...!
படம் -கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்










