Posted by
Kousalya Raj
comments (10)
ஒவ்வொரு முறையும்
மிக சரியாக வலைவீசி
பிடித்து விடுகிறாய்...
கைதேர்ந்த
வேடன் நீ !
அப்பாவி பறவையாகி
போனேன் நான்...
* * * * * * * * *
பறக்கும்
சிறு காகிதம் நான்...
காற்று நீ !
* * * * * * * * *
காணும்
அத்தனையிலும் நீ...
என் நெற்றி பொட்டை
எவ்வாறு சரி செய்வது
...
நிலை கண்ணாடியில் நீ !
* * * * * * * * *
வண்ணம் குழைத்து
வெள்ளைத்தாளில்
அழகழகாய்
ஓவியங்கள்...
ஏனோ ஈர்க்கவில்லை
உயிருள்ள ஓவியம் நீ
அருகில் நிற்க்கையில் !
* * * * * * * * *
எதுவும் தெரியாமல்
உன்னை காதலித்தேன்...
எல்லாம்
தெரிந்த போது
நான் பக்தையானேன்
...
நீ கடவுளானாய்...!
படங்கள் - கூகுள்
போனேன் நான்...
* * * * * * * * *
அடிக்கடி
கோபபடுகிறாயே
ஏன்...?
அடுத்து வரும்
என் கெஞ்சல்களை
நீ ரசிக்கிறாயா என்ன ?
* * * * * * * * *
பறக்கடிக்கும்
திசையெல்லாம்பறக்கும்
சிறு காகிதம் நான்...
காற்று நீ !
* * * * * * * * *
காணும்
அத்தனையிலும் நீ...
என் நெற்றி பொட்டை
எவ்வாறு சரி செய்வது
...
நிலை கண்ணாடியில் நீ !
* * * * * * * * *
வண்ணம் குழைத்து
வெள்ளைத்தாளில்
அழகழகாய்
ஓவியங்கள்...
ஏனோ ஈர்க்கவில்லை
உயிருள்ள ஓவியம் நீ
அருகில் நிற்க்கையில் !
* * * * * * * * *
எதுவும் தெரியாமல்
உன்னை காதலித்தேன்...
எல்லாம்
தெரிந்த போது
நான் பக்தையானேன்
...
நீ கடவுளானாய்...!
படங்கள் - கூகுள்
Labels:
காதல்
Posted by
Kousalya Raj
comments (20)
என்னவோ பேசுகிறேன்
எதையோ எழுதுகிறேன்
எங்கோ அலைகிறேன்
ஏனோ அத்தனையிலும்
உன் பிம்பத்தை
பதித்து விடுகிறேன்
மறக்காமல்...
பிடித்திருப்பதாய்
ஒருபோதும் சொன்னதில்லை நீ !
பேசும் அத்தனை முறையும்
'பிடிக்கும்' என
சொல்லி விடுகிறேன்
தவறாமல்...
* * * * *
நெஞ்சை வலிமையாய்
கிழித்தபின் புரிந்தது
மௌனம்
வலிமையானதுதான்...
ஒன்றும் தோணவில்லை
பதிலுக்கு மௌனிப்பதை தவிர...
எதையும் உணர்த்தாத
வார்த்தைகள்
இனி எதற்கென்றே
மௌனத்தில்
மூழ்கடிக்கிறேன் எனை
மொத்தமாய் !
சொற்கள் அற்ற
மொழிகள் அற்ற
மௌனங்களின் பரிமாற்றத்தில்
வாழுகிறது நேசம்
மௌனமாய் தேற்றிக் கொள்கிறேன்
வருந்தும் என் மனதை !
இருவரின் மௌனங்கள்
சப்தமாய் பேசிச் சிரிக்கலாம்
நாம் இல்லா வெளியில்...
மெய்
பொய்யானது
மெய் நீ
பொய் நான்
மௌனமாய் நாம்
மெய்யாய் நம் காதல் !
படங்கள் - கூகுள்
Posted by
Kousalya Raj
comments (9)
உன் தொடுதலில்
சுருங்கிய
தொட்டாச் சிணுங்கி மனது
நீ சென்றபின்பு
விரிந்து சிரிக்கிறது
ரகசியமாய் !
* * * * *
நான்
கவிதை எழுதவில்லை
எழுத்துக்களின் வழியே
உன்னை நெருங்குகிறேன்...
உன்னை நெருங்குகிறேன்...
என்னிடத்தில் உன் ஸ்பரிசம்
தேடியும்
நீ இட்ட முத்தச்சுவடு
வருடியும்
நெஞ்சம் படர்ந்த உன் நினைவுகள்
அணைத்தும்
எழுதி முடியும் தருணம்
சிலிர்த்தும்...
நான் கவிதை எழுதவில்லை
உன்னை எழுதுகிறேன்
என்னை வாசிக்கிறேன்...!
* * * * *
* * * * *
வண்ணத்தின் நிழலை
என்னிடம் விட்டுவிட்டு
பிடிபடாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நீ !
என்னிடம் விட்டுவிட்டு
பிடிபடாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நீ !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (8)
நீ எனக்களித்த
மற்றெல்லா பரிசையும்
போலத்தான்
உன் கோபமும் !
* * *
வெம்மையில்
வெடித்து
சிதறியச் சொற்களில்
சிதறியச் சொற்களில்
எனக்கானவற்றை
தேடிப்பிடித்து
மறைத்து வைக்கின்றேன்
அவையும் களவு
போய் விடுமோவென !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (21)
இருக்கின்றன...
உன் நுட்பங்களை
சொல்லிச் செல்கின்றன !
தங்களுக்குள்ளே
கொதிக்கின்றன...
எரிகின்றன...
எரிக்கின்றன...
எரிக்கின்றன...
சில நேரம் அதிக சத்தமாய்
பல நேரம் ஆழ்ந்த மௌனம்
அதை நெடுந் தவம் என்பாய் !
ஆழமாய் நெருங்கினால்
மோனநிலை நிச்சயம்...
மோனநிலை நிச்சயம்...
மெல்ல வருடினால்
சிலிர்ப்பின் உச்சம் தொடலாம் !
சிலிர்ப்பின் உச்சம் தொடலாம் !
சொல்லாமல் சொல்கிறது
இல்லாமல் இருக்கிறது
அது எல்லாமாய் நிறைக்கிறது
நிறைந்து நிலைக்கிறது...
உனதாய் இருக்கின்றன
உன்னை போலில்லை
உன்னை போன்ற
வேறொன்றாக இருக்கிறது
வேறொன்றாக இருக்கிறது
அவை வேறொன்றுமில்லை
உன் வார்த்தைகள் !!
Labels:
காதல்
,
வார்த்தைகள்
Posted by
Kousalya Raj
comments (9)
புது பொம்மை
பத்திரமாக இருக்கிறதா
பாதி தூக்கத்தில்
தடவி பார்க்கும் குழந்தை போல...
நடு இரவில்
மெல்ல தொட்டு
தடவிப் பார்க்கிறேன்
உறக்கத்தில் இருக்கும்
பத்திரமாக இருக்கிறதா
பாதி தூக்கத்தில்
தடவி பார்க்கும் குழந்தை போல...
நடு இரவில்
மெல்ல தொட்டு
தடவிப் பார்க்கிறேன்
உறக்கத்தில் இருக்கும்
உன் நினைவுகளை !!
* * *
பேசதொடங்கினாய்
* * *
* * *
பேசதொடங்கினாய்
வீணை சுரங்கள் மறந்தது !
சிரிக்க தொடங்கினாய்
வண்ணத்துபூச்சியினை
வரைந்து
வண்ணம் தீட்டிவிட்டேன்
நான் !
வண்ணம் தீட்டிவிட்டேன்
நான் !
* * *
என்ன மாயம்
செய்து போனாய்
என் கனவு தோட்டத்து பூக்கள்
மணம் வீசுகின்றன !
* * *
சுற்றிலும்
கொழுந்துவிட்டு எரியும்
நெருப்பு
வளையத்துக்குள் இருக்கும்
பற்றி எரியாத
ஒற்றை கற்பூரம்
நீ...!
படம் - கூகுள்
நீ...!
படம் - கூகுள்
Posted by
Kousalya Raj
comments (15)
- தத்துவங்கள்
"நீ செத்துட்டா நானும் செத்துடுவேன்"
- பிதற்றல்கள்
"அடுத்த ஜென்மத்திலும் பிரிவில்லை"
- சத்தியங்கள்
எல்லாம் மறந்து போகின்றன !
* * * * * * *
மீளா இறப்புகள்
மீளா துயரங்கள்
ஆற்றமுடியாப் பிரிவுகள்
சோகங்கள்
வேதனைகள்
இழப்புகள்
எல்லாம் மறக்கடிக்கபட்டு
விடுகின்றன...
சில நாட்களில்...
சில வாரங்களில்...
சில மாதங்களில்...
யதார்த்த உலகில்
வாழ்க்கை
வெகு இயல்பாகிவிடுகிறது !!
வெகு இயல்பாகிவிடுகிறது !!












