Posted by
Kousalya Raj
comments (5)
உன் தோள் சாய்ந்து
கதைகள் ஆயிரம் பேசி
விரலுடன் விரல் கோர்த்து
உனக்கினையாக நடந்து
விழியால் விழி ஊடுருவி
உயிர் தொட்டு பிடித்து
விளையாடி மகிழ்ந்து...
உன் அத்துமீறல்கள் ரசித்து
தயங்குவதாய் கொஞ்சம் நடித்து
கெஞ்சலில் அனுமதித்து
செல்ல சீண்டல் சண்டையுமாய்
முப்பொழுதுகள் மயங்க...
என் மடி சாய்த்து
தலை கோதும் வேளை
உன் அழகை விழியால் அள்ளி பருகி
என் உயிரை நிறைத்து...
இவை எல்லாம் நிகழ வேண்டுமென
கனவுகள் ஏதும்
இதுவரை
காணவில்லை
...
...
...
நிஜமாக்க முயன்று கொண்டிருக்கிறேன் !
படம் - கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (11)
திடமுடன் மீண்டெழுவேன்
காப்பாற்றுகள்
என்றாயே
அறைசுவரில் பட்டு தெறித்த
அவள் கதறல் ஒலி
நெஞ்சை அறைகிறதே...
காலமே புண்ணை ஆற்று
வடு என்னை வதைக்கட்டும்!
தைரியம் தன்னம்பிக்கையின்
மொத்த உருவம்
நீ சென்றுவிட்டாய்
கையாலாகாத கோழைகள்
மட்டுமே மிச்சம் இங்கே...
பெண்ணியம் பேசி
தொலைக்காதீர்கள்
பெண்ணை தொலைத்து விடுங்கள்
மொத்தமாக...
கொடுபாதகம் கண்டும்
கையை பிசைந்து கொண்டு
வேடிக்கைப் பார்த்த
என்போன்றோரை
மன்னித்து விடுமா...
நாளை வேறு பெண்ணுக்கு
அஞ்சலி செலுத்த
நலமாய் இருக்கவேண்டும்
நாங்கள் !
காதலர் தினம் வேறு வருகிறது
தயாராக வேண்டும்
நாங்கள் !
உனக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
சொல்வதுடன்
திருப்திபட்டுக்கொள்கிறது
எனது மனித நேயம் !!??
* * * * *
ஒவ்வொரு துயர மரணத்தின் போதும் இது இறுதியாக இருக்கட்டும் என்ற எனது வேண்டுதல்கள் மட்டும் மாறவில்லை ...பெண்ணை சக்தி என்ற கொண்டாட்டவும் வேண்டாம் சகதியில் தூக்கி எறியவும் வேண்டாம். சக உயிராக உணர்ந்து மதித்தால் போதும். காதல் என்ற பெயரிலும் போக பொருளாக எண்ணி விளையாடுபவர்கள் மன்னிப்பு பெற கூட அருகதை அற்ற வக்கிர மனித மிருங்கங்கள்...
பெண்களின் மீதான கொடுமைகள் தொடருவதை கண்டும் காணாமல் இருக்கும் சமூகம் திருந்தாதவரை வினோதினிகள் பலியிடபடுவதும் நிற்க போவதில்லை என்பதை மிகுந்த வலியுடன் பதிகிறேன்.
வினோதினியின் மரணம் கொடுமை என்றால் வலியுடன் அவள் நடத்திய மரண போராட்டம் கொடுமையிலும் கொடுமை. இத்தனை நாளாய் அவளுக்கு கிடைக்காத நிம்மதி அமைதி இனியாவது அவளை இறுக தழுவட்டும் என்ற வேண்டுதலுடன்...
Posted by
Kousalya Raj
comments (6)
கவிதை
அவன் ஆன்மாவுடன் பேச
நான் கண்டு பிடித்த
ரகசிய வழி!
எழுத்தின் வழி
என்னவனை
சென்றடைய வேள்வி!
இங்கே
கட்டளைகள் சில
மீறப்படும்
கட்டுப்பாடுகள் சில
தளர்த்தப்படும்
கவனிப்புகள் சில
நிராகரிக்கபடும்
புதிர் விடுவிக்கும்
சில கொஞ்சல்கள்...
புனிதம் தெய்வீகமாகும்
சில கெஞ்சல்கள்...
யாரும் அறியாவண்ணம்
அந்தரங்க மொழியில்
திகட்ட திகட்ட
பரிமாறப்படுகிறது
கட்டுடைத்த காதலும்
எண்ணமுடியா முத்தங்களும்...!
இங்கே
நான்
அவன்
மற்றும்
என் கவிதை மட்டுமே...!!
படம் - கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
தேடி அலைந்தேன்
ஒவ்வொரு இடமாக...
பின் தொடர்ந்த என் மீது
வண்ணம் உதிர்த்து வானில் பறந்தது
ஒரு வண்ணத்துபூச்சி...!
அருகில் சென்ற என் மீது
பழுத்த இலைகளை வீசி எறிந்தது
காற்றுக்கு தலை அசைத்த ஒரு மரம்...!
விரைந்து நெருங்கிய என் மீது
சாம்பலை அள்ளி பூசியது
கனல் கக்கிய ஒரு எரிமலை...!
நதி கரையில் காலடி தடம்
கண்டுத் தொடர்ந்தேன்
தடம் நதிக்குள் சென்று முடிந்திருந்தது...
ஓடும் நீரில் முகம் தெரிய உற்று நோக்கினேன்
முகம் நழுவத் தொடங்கியது...
ஐயோவென்று நதியுடன் தொடர்ந்து ஓடினேன்...
அது என்னை ஒரு பாலை வனத்தில்
கொண்டுபோய் சேர்த்தது...
மணலை அள்ளி எண்ணி பார்த்தேன்
அங்கே உன் வருகை பதிவு
எண்ண முடியாத அளவில் இருந்தது...
களைத்து
வீடு திரும்பி
பூட்டை விடுவித்து
என் அறை கதவு திறந்து
உள்ளே சென்றேன்...
அங்கே
பஞ்ச பூதங்கள் மீதேறி
அமர்ந்திருந்தாய்
வெற்றிக் களிப்புடன்...!!
படம் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
விவாதங்களில்
விட்டுக்கொடுப்பதில்
முந்திக் கொள்வாய்
என் வார்த்தைகள்
உன்னை வதைப்பதை மறைத்து...
சமயங்களில்
வெட்கப்பட வைக்கிறது
அளவில்லா உன் அக்கறை
மறுபடி காய்ச்சல் வரும் நாளை
எதிர்பார்க்கிறது மனது...
பலமுறை உன் பேச்சை
அசட்டை செய்திருக்கிறேன்
'அடி அசடே' கன்னம் கிள்ளும்
விரல்கள் சொல்லும்
என் மீதான உன் அன்பை...
உன் அழைப்புகளை
தவிர்க்க முயலும்
ஒவ்வொரு முறையும்
விழிகளால் இறைஞ்சும் உன்னை
மறுதலித்தாலும்
மனமறியும்
இறுதிவரை
எனது நிழல் நீ என்பதை...!
விலகவும்
விலக்கவும்
விதிமுறை ஏது
விளக்கம் கொடுத்தாய்
விளக்கம் பெற்றும்
விளங்காமல் நிற்க்கிறேன்...
ஒரு காற்றாய்
எப்பொழுதும் சூழ்ந்திருக்கும்
உனக்காக
இதுவரை நான் ஒன்றும் செய்ததில்லை
சுவாசிப்பதை தவிர...!
படம்-நன்றி கூகுள்
Labels:
கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (6)
நேசம் தவிர
வேறு சில தேவைகள்
சில சரிபடுத்தல்கள்
அவசியமாகி விட்டது
இப்போது...
உனது முப்பொழுதும் இன்பமாய்
கழியவேண்டுமென்று
உன் மேல் படிந்திருந்த
நரக நிழலை
வழித்தெடுத்து எறிந்துவிட்டேன்...
உனது பயணம் சுகமாக
இருக்கவேண்டுமென்று
வழியிலிருந்து எடுத்து
அப்புறப் படுத்திவிட்டேன்
முள் என்னை...
உன்னை துன்புறுத்தும்
நினைவு மிச்சங்களை
மொத்தமாய் தீயிலிட்டு
எரித்துவிடுவேன்
இன்னும் சற்று நேரத்தில்...
யாவும் முடிந்துவிடும் !
இனி
தினமும் நீ
விழித்தெழுந்து பார்க்கையில்
உன் வீட்டு பூந்தொட்டியில்
ரோஜாக்கள் மட்டும் பூத்திருக்கும் !
முட்களை எடுத்து
வந்துவிட்டேன் கையோடு...!!
படம் - நன்றி கூகுள்
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
கண்ணாமூச்சி விளையாடும்
சிறுபிள்ளையாய் ஓடி
ஒளிந்து கொள்ளும் உன்னை
ஒவ்வொரு அறையாய்
தேடித் தேடி
களைத்துப் போகும் என்னை
ஓரமாய் நின்று
மௌனமாய் ரசிப்பதே
உன் வேலையாகி போனது !
இதோ
இன்றும்
தேடி ஓடுகிறேன்
ஓடிக்கொண்டே இருக்கிறேன்
களைத்து சோர்ந்து
வாசலோரம் சாய்ந்து அமருகையில்
மடியில் வந்து விழுகின்றன
'எடுத்துக் கொள்ளேன்' என்று
இந்த வார்த்தைகளும்
நீயும் ஒன்று
தேடவைப்பதில்...!!
படம் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்








