Posted by
Kousalya Raj
comments (17)
இரவில்
விழிப்பின் தேடலில்...
விழிப்பின் தேடலில்...
பகலில்
தொடரும் துரத்தலில்...
முடிந்துபோகுமென்
ஒரு நாளின் பொழுதுகள்
உன்னால் !
* * *
* * *
இதயத்தில் வலி அதிகரிக்க
இறுக பற்றிக்கொள்கிறேன்...
இனியவனே உன் நினைவுகளை
இதயவலி
உன்னால் என்ற போதும் !
உன்னால் என்ற போதும் !
* * *
நான் அரற்றினால்
Posted by
Kousalya Raj
comments (25)
புனிதம் புரியா புனிதர்கள்
மெய் கொண்டு வாழாமல்
பொய் கொண்டு வாழும் பித்தர்கள்
நல்லவனாம்
பொய் கொண்டு வாழும் பித்தர்கள்
நல்லவனாம்
நம்பக்கூடிய பொய்கள் துணைக்கு!
உத்தமனாம்
உதறி தள்ளபடும் உண்மை! இங்கும் அங்கும்
எதையோ தேடி ஓடி அலைவது
நிச்சயமாக
தொலைந்து போன மனிதத்தை அல்ல...
எதையோ தேடி ஓடி அலைவது
நிச்சயமாக
தொலைந்து போன மனிதத்தை அல்ல...
அரிதாரம் பூசாத வேடதாரிகள்!
பகலில் பல வேடம்
இரவிலோ இருவேடம்
ஒன்று நல்லவன்
மற்றொன்று மிக நல்லவன் !
பொய்கள் பல நிறமாம்
வெள்ளை பச்சை நீலம் என...
உண்மையின் நிறத்தை
மறக்கடித்து விட்டது
மனிதர்களின் பச்சோந்திதனம் !?
சூழ்ச்சியால் தோற்று
புதைக்கப்பட்ட உண்மைகள்
வெற்றிகளிப்பில்
நம்பிக்கை துரோகங்கள்
உண்மையின் நிறத்தை
மறக்கடித்து விட்டது
மனிதர்களின் பச்சோந்திதனம் !?
சூழ்ச்சியால் தோற்று
புதைக்கப்பட்ட உண்மைகள்
வெற்றிகளிப்பில்
நம்பிக்கை துரோகங்கள்
பொய் புரட்டு துரோகம் உயிர்த்தெழ
அஸ்தமித்து போனது அன்பு பாசம் நட்பு !?
Posted by
Kousalya Raj
comments (10)
'காத்திருக்கிறேன்' என்றேன்
'அதுக்கென்ன' என்கிறாய்
'உனக்காக' என்றேன்
'யாரோ நான்' என்கிறாய்
'காதலன்' என்றேன்
'உனக்கில்லை' என்றாய்
'காதல்' என்றேன்
'உன்னிடமில்லை' என்றாய்
'பரவாயில்லை பேசு' என்றேன்
'பிடிக்கவில்லை' என்றாய்
'சிரித்தாயே' என்றேன்
'உன்னை பார்த்து இல்லை' என்றாய்
'திமிர் கூடி போச்சு' என்றேன்
'எப்ப குறைந்தது' என்கிறாய் !
பொறுமை இழந்து
மௌன மடியில் நான் விழ...
...
...
...
'என்ன சைலென்ட்' என்றாய்
'வார்த்தை தீர்ந்தது' என்றேன்
'பரவாயில்லை பேசு' என்றாய்
'போகிறேன்' என்றேன்
'என்னை விட்டா' என்றாய்
சிரித்தேன்...
'சிதைக்காதே' என்கிறாய் !
போடா! நீயும் உன் காதலும் !!
தொடருகிறது உரை(?)யாடல்...
Posted by
Kousalya Raj
comments (18)
இருட்டடிப்பு செய்யப்பட்ட
பக்கங்களில் தவறியும்
தோல்விகள்
பதிவு செய்யபடுவதில்லை
வெறும் எழுத்துக்கள்
வலியின் கனத்தை
முழுமையாய்
உணர்த்தாத போது!?
புதுவிடியலில்
முழுமையாய்
உணர்த்தாத போது!?
புதுவிடியலில்
முதல்நாளின் விடியல்
ஏனோ காணாமல்
போய்விடுகிறது !
காய்ந்த இலைகளை
உதிர்த்த மரம்
உயிர்ப்பிலை
உதிர்க்கலாம்
புயல் வீசினால்...
நறுமணம் வீசிய
கடந்த காலம்...
வாசமற்ற
நிகழ்காலம்...
எதிர்பார்ப்பில்
ஏனோ காணாமல்
போய்விடுகிறது !
காய்ந்த இலைகளை
உதிர்த்த மரம்
உயிர்ப்பிலை
உதிர்க்கலாம்
புயல் வீசினால்...
நறுமணம் வீசிய
கடந்த காலம்...
வாசமற்ற
நிகழ்காலம்...
எதிர்பார்ப்பில்
எதிர்காலம்!?
மறந்தே போனது
இறந்த காலத்திய
நினைவுகள்...
தற்கால நிகழ்வுகள்
நினைவுகள்...
தற்கால நிகழ்வுகள்
கிழித்து போட்டு விட்டதால்...
முடிவுறா முடிவுகள்
முன்னறிவிப்பின்றி
முடிக்கப்பட்டே
முடிவுறும்...
முடிக்கப்பட்டே
முடிவுறும்...
முற்றுப்புள்ளிகள்
இருக்கின்றனவே...!?
படம் - நன்றி கூகுள்
Posted by
Kousalya Raj
comments (15)
இன்னும் குழந்தையாய் நான் இருக்க
அவனோ நாளும் ஒரு வளர்ச்சி
உடலில் மட்டுமா ? மனதளவிலும் !
'நைட் அம்மா வர லேட் ஆகும்,
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'
செல்பேசியில் நான்.
'பிரட் ரோஸ்ட்,ஆம்லேட்,மில்க்
ரெடி பண்ணி தம்பியும் நானும் சாப்பிட்டாச்சு'
ரெடி பண்ணி தம்பியும் நானும் சாப்பிட்டாச்சு'
பதிலில் மனம் குளிர வைப்பதிலும் !
மாலையில் வரும் என்னை வரவேற்கும்
வாசலில் நீ தெளித்திருக்கும் தண்ணீர்
'நான் வந்து தெளிப்பேனே நீ ஏன்மா பண்ணின ?
'லைட் போடணும் அதான் தெளிச்சேன்மா' என்பதிலும் !
புதிதாய் யாரையும் அறிமுகபடுத்தினால்
உடனே 'நல்லா இருக்கீங்களா' நீ நலம் விசாரிக்க
பையனை 'நல்லா வளர்த்திருக்கீங்க' என
அதை கேட்ட நீ மௌனமாய் சிரிப்பதிலும் !
அதை கேட்ட நீ மௌனமாய் சிரிப்பதிலும் !
என் கையில் ரத்தம் பார்த்து பதறி
தண்ணீர் குடிக்க வைத்து ரத்தம் துடைத்து காயத்திற்கு(?) கட்டு போட்டு விடுவாய்
பள்ளிவிட்டு வந்ததும் 'வலி சரியா போச்சா?'
விசாரிப்பதிலும்
என அத்தனையிலும் தாயாக நீ தானே தெரிகிறாய் !
என அத்தனையிலும் தாயாக நீ தானே தெரிகிறாய் !
இன்று எங்கள் திருமணநாள், உனக்கு எப்படி இதை நினைவு படுத்த
வார்த்தைகளை நான் தேட, கிளம்பி வாசல் வரை சென்ற நீ, திரும்பி பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து, "இரண்டு பேரும் ஏதாவது மூவி போயிட்டு வாங்க...அப்பா, இன்னைக்காவது மறக்காம அம்மாவுக்கு பூ வாங்கி கொடுங்க...நாங்க வந்ததும் ஈவினிங் வெளில போகலாம், ரெஸ்டாரன்ட்ல நைட் டின்னர், ஒ.கே வா ?! சந்தோசமா இருங்க...திருமணநாள் வாழ்த்துகள் !'
வாழ்த்தி விட்டு இதோ கிளம்பிவிட்டாய் பள்ளிக்கு...!
உன்னை பார்த்து பொடியனும் " சரி சரி நல்லா இருங்க...!" என்று ஆசிர்வதிப்பது போல் கைகளை உயர்த்தி சொல்லிவிட்டு கிளம்ப 'இன்று விடுமுறை நாளாய் இருந்தால் நல்லா இருக்குமே' யோசனையில் இருவரும் உள்ளே வர மனமின்றி வாசலில் அமர்ந்துவிட்டோம்.
Labels:
அனுபவம்
,
திருமணநாள்
Posted by
Kousalya Raj
comments (9)
புல்வெளியில்
அமரும்போதெல்லாம்
அனிச்சையாய் விரல்கள்
புல் பிடுங்கி அடி கடிக்க
ருசி ரசிக்கும் மனது !
பேச்சின் ஊடாய்
உன் அழகு சிரிப்பு
அனிச்சையாய் கண்
சேர்த்து அள்ள
ரசித்து ருசிக்கிறது
என் இதயம்
சேர்த்து அள்ள
ரசித்து ருசிக்கிறது
என் இதயம்
சிரிக்க மறக்காதே
அது துடிக்க
மறந்துவிடக்கூடும் !
மறந்துவிடக்கூடும் !
* * * * * * *
உன்னில் என்னை மீட்டெடுக்க
எடுத்த பிரயாசங்கள்
அனைத்தையும் வென்று
இன்னும் ஆழத்தில் புதைத்தே விட்டது
உன் புன்னகை !
தூக்கத்தில் சிரிக்கும்
குழந்தையின்
பரிசுத்தமான பளிங்கு சிரிப்பு
உன் புன்னகை !
எதையும் சொல்லாதது போல்
உன் வார்த்தைகள்
எல்லாவற்றையும் சொன்னது போல்
உன் புன்னகை !
மௌனம், கோபம், சண்டை
எல்லாம் நொடியில் தூக்கி போட்டு
என் தலையில் தட்டி பரிகசிக்கும்
கர்வகிரீடம் உன் புன்னகை !
Posted by
Kousalya Raj
comments (23)
சில புரிதலற்ற
கோபக்கனல்கள்
கோபக்கனல்கள்
சுட்டெரித்து சாம்பலாக்கிவிட
மிகச் சரியாக அந்த வினாடி
வீறு கொண்டெழுகின்றன
உன் முன் மண்டியிட்டு கிடக்கும்
என் கர்வங்கள் !
இருபுறமும் மோதி
இருபுறமும் மோதி
கீழே வீழ்ந்து துடிக்கிறது
ஏதும் அறியா ஒரு நேசம்...
வார்த்தைகளின் கனம்
தாளாமல் சிதைந்தது
மாசற்ற அன்பு...
மௌனமாய் கதறுகிறது
என்றோ எனக்குள்
ஒளித்திருந்த காதல் !
ஒரு கட்டத்தில்
இரு கர்வங்கள்
போராடி
களைத்து போய்விட
மௌன வெளியில்
சிறகடித்து பறந்து
சென்றே விட்டது
வெண்புறா ஒன்று !
அதன் பின்னான
ஏதும் அறியா ஒரு நேசம்...
வார்த்தைகளின் கனம்
தாளாமல் சிதைந்தது
மாசற்ற அன்பு...
மௌனமாய் கதறுகிறது
என்றோ எனக்குள்
ஒளித்திருந்த காதல் !
ஒரு கட்டத்தில்
இரு கர்வங்கள்
போராடி
களைத்து போய்விட
மௌன வெளியில்
சிறகடித்து பறந்து
சென்றே விட்டது
வெண்புறா ஒன்று !
அதன் பின்னான
உன் இதழோரப் புன்னகை
களிம்பை பூச மறந்து
ஏனோ
காயத்தை கீறி விட்டு
செல்கிறது!?
இம்முறையும்
உன் கோபாக்கினையில்
தப்பி பிழைத்த
ஒற்றை கொள்ளியாய் நான் !
ஏனோ
காயத்தை கீறி விட்டு
செல்கிறது!?
இம்முறையும்
உன் கோபாக்கினையில்
தப்பி பிழைத்த
ஒற்றை கொள்ளியாய் நான் !












