Posted by
Kousalya Raj
comments (12)
நமது சந்திப்பு
ஒவ்வொன்றின் முடிவிலும்
பேசி
விடை பெறுகிறாய் நீ
விடை பெற்றும்
பேசிக்கொண்டிருக்கிறேன்
அதுவரை
உன்னிடம் சொல்லவியலாத
காதல் படிமங்களுடன்...!
* * *
நம்மிடையே
சம்பிரதாயமான விடைபெறுதல்
சாத்தியமில்லை
என்றா
ஒரு காற்றைப்போல செல்கிறாய்...
என்னவொன்று
காற்று தொட்டுச் செல்லும்
நீ விட்டுச் சென்றாய் !
* * *
விடைப் பெற்று நீ
சென்ற பின்னும்
பல முறை
திரும்பிப் பார்க்கிறேன்
பார்ப்பேன் என தெரிந்தே
போகாமல் இன்னும்
அங்கேயே
நின்றுக்கொண்டிருக்கிறது
உன் நிழல்...!
* * *
எப்படியாவது சொல்லிவிடுவாய்
என்றுதான்
நமது எல்லா சந்திப்புகளிலும்
எதிர்பார்க்கிறேன்...
விடைபெறுவாய்
எல்லாம் பேசியும்
என்னை பேசாமலும்...!
படம் -கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்