வார்த்தை ஜாலங்கள் - கருத்துகளால்
முரண்பட்டும் பிடித்துப்
போன வாதங்கள் - உயிரை
ஆழமாய் ஊடுருவி
சாகடித்த பேச்சுக்கள் - விளைவு
தெரிந்தும் என்னை
இழந்த தருணங்கள் - காதலை
புதிதாய் எனக்கு
சொல்லிய சந்திப்புக்கள் - அன்பிற்கு
புது இலக்கணம்
எழுதிய புரிதல்கள் - உன் கர்வத்தை
அடக்க நான்
எடுத்த சபதங்கள் - திசை மாறி
தாக்கி உன்முன்
மண்டியிட்ட என் கர்வங்கள் - பல
ஜென்மங்கள் உனை தொடர
மேற்கொண்ட வேண்டுதல்கள் - புரிந்தும்
உன்னிடம் கேட்கிறேன்
'ஏன் வந்தாய் என்னுள்....?!!'
22 comments:
/ 'ஏன் வந்தாய் என்னுள்....?!!'//
அதானே என் வந்தார் அவர் உங்களுக்குள்ள??
'ஏன் வந்தாய் என்னுள்....?!!'/////
நல்ல கேள்வி
nice
//ஏன் வந்தாய் என்னுள்....?!!'//
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.. அப்போ தான எங்களுக்கு உங்க கவிதைகள் கிடைக்கும் :)
//உன் கர்வத்தை
அடக்க நான்
எடுத்த சபதங்கள் - திசை மாறி
தாக்கி உன்முன்
மண்டியிட்ட என் கர்வங்கள்//
காதல்ல விட்டுக் கொடுத்தல் ரொம்ப முக்கியம். அதை அழகா சொல்லி இருக்கிங்க...
(பார்டா!! இவங்க கவிதை எல்லாம் எழுதராங்க. நான் பதிவு போட்டு எல்லாரையும் திட்ட மட்டும் தான் செய்வாங்க நினைத்தேன்...)
கலகிடிங்க
LK...
//அதானே என் வந்தார் அவர் உங்களுக்குள்ள??//
கவிதைக்காக கேட்ட கேள்வியை என்கிட்டே கேட்டா எப்படிங்க..??!!
:)))
சௌந்தர்...
ஆமாம் நல்ல கேள்விதான்
புதிய மனிதா சொன்னது…
//nice//
உங்க வருகைக்கு நன்றிங்க
Balaji saravana சொன்னது…
//கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.. அப்போ தான எங்களுக்கு உங்க கவிதைகள் கிடைக்கும் :)//
அட இது கூட நல்லா இருக்கே....??!! புரிதலுக்கு நன்றி சகோ.
TERROR-PANDIYAN(VAS) சொன்னது...
//காதல்ல விட்டுக் கொடுத்தல் ரொம்ப முக்கியம். அதை அழகா சொல்லி இருக்கிங்க...//
நல்ல வேளை என் கவிதையாவது உங்களை குழப்பாமல் இருக்கிறதே...!!? உங்களின் புரிதலுக்கும் முதல் வருகைக்கும் நன்றி சகோ.
//(பார்டா!! இவங்க கவிதை எல்லாம் எழுதராங்க. நான் பதிவு போட்டு எல்லாரையும் திட்ட மட்டும் தான் செய்வாங்க நினைத்தேன்...)//
எல்லோரையும் நான் திட்டுறேனா....?? என்னை ஏங்க வம்புல மாட்டி விடுறீங்க ??
(ஆமா... நேத்து உங்க பிளாக்கில நடந்ததுக்கு பேர் என்னவாம்...?!!) :))))
யாதவன் சொன்னது…
//கலகிடிங்க//
நன்றி சகோ.
இதென்ன கேள்வி?
@Kousalya
// ஆமா... நேத்து உங்க பிளாக்கில நடந்ததுக்கு பேர் என்னவாம்...?!!) :)))) //
அதுக்கு பேர் ஊர் வம்ப விலைக்கு வாங்கரது சகோ. இதுவரை யார் ரத்தமும் சிந்தல.... :))))
கவிதை...ஆழமாகச் சொல்கிறது வலியை...
asiya omar சொன்னது…
//இதென்ன கேள்வி?//
விடை சொல்ல முடியாத கேள்வி.....!
:))
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
//அதுக்கு பேர் ஊர் வம்ப விலைக்கு வாங்கரது சகோ. இதுவரை யார் ரத்தமும் சிந்தல.... :))))//
இப்படி வேற ஒரு சமாளிப்பா .....?! ஓ.கே நடத்துங்க.
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
ம்ம்..
denim...
உங்கள் வருகைக்கு நன்றி.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது கௌசி.சொல்லவும் மாட்டார்கள்.ஏனென்றால் அவர்களுக்கே தெரிவதில்லை தங்களின் வருகை !
சூப்பர்
Post a Comment