தூரிகை வழி பயணிக்காத
ஓவியமடா நீ !
எழுத்தில் வடிக்க இயலா
காவியம் நீ !
காவியம் உன்னிடம் இறைஞ்சும்
உபதேசம் !
கவி வரிக்குள் சிக்காத
கவிதை நீ !
உன் கேச சுருள் ஊடாய்
கோலம் போட ஏங்கும் என் விரல்கள் !
புருவ அழகில் மயங்கி தொட்டு விட
முன் வந்து விழும் இரு முடி கற்றைகள் !
தூக்கம் இழந்த விழிகளில் சோர்வை மீறி
பளீரிடும் மின்னல் கீற்றுகள் !
அந்த நெருப்பில் குளித்தே
குளிர் விட்டு போச்சு எனக்கு.....!!
புகை எனக்கு பகை என்று
சத்தியம் செய்யும் உன்
செந்நிற இதழ்கள் !!
நான் பேசும் வார்த்தைகள்
மோட்சம் அடைக்கின்றனவாம்
உன் செவி அடைந்ததும் !!
பைத்தியம்
பிடிக்க வைத்த புன்னகை !
கர்வம்
தொலைக்க வைத்த குரல் !
உன் ..........
............
...........
" நிறுத்து....! நிறுத்து....!!
வர்ணித்தது போதும்
வருகிறான் தேவதூதன்
உன்னை அழைத்து செல்ல"
கடவுளின் குரல் !??
5 comments:
தேவதூதன் வர வில்லை என்றால் இன்னும் வர்ணித்து இருப்பாங்க
நல்ல வர்ணனை ... நடுவில் தேவத் தூதன் வந்தது நன்றாக இல்லை..கடவுளும் காதலும் வாழ்வின் அங்கம் ,.இரண்டுமே அவசியம்
//தூரிகை வழி பயணிக்காத
ஓவியமடா நீ ! //
//புருவ அழகில் மயங்கி தொட்டு விட
முன் வந்து விழும் இரு முடி கற்றைகள் !//
//புகை எனக்கு பகை என்று
சத்தியம் செய்யும் உன்
செந்நிற இதழ்கள் !!//
வர்ணிப்பு ஆபாரம் சகோ.
ஆமா எதுக்கு இப்போ கடவுள் உள்ள வந்தாரு.. அவரு பாட்டுக்கு அவரு வேலைய பாக்க வேண்டியதுதான.. ;)
கவிதை அருமை.
நல்ல அழகு தமிழ் கவிதை
Post a Comment