அடிக்கடி சோம்பி நிற்கும்
என் மௌனங்கள் - மௌனத்தில்
விளங்காத என் காதல்...
வார்த்தைகளில்
எங்ஙனம் விளங்கும்....?!
விதி வலியதாம் - அதைவிட
வலியதே உன் அறியாமை !
என் தவிப்பின் கணம்
உணராமல் போனதென்ன !?
புரியாக் காதலை எனக்கு
அடையாளம் காட்டிவிட்டு
முடிந்தது வேலை என்றே
ஒதுங்கி போகிறாய் !
கற்பனைகள் உடையலாம்
சோப்பு குமிழியாய்...!
கனவுகள் கலையலாம்
மேக கூட்டமாய்....!
உன் நினைவுகள்
துருபிடித்துக் கொண்டதே
எப்படி கலையும்....??
எப்படி மறையும் ....??
**************************************************************
நேற்று, இன்று மறந்து
உருவம், பருவம் கடந்து
தர்க்கம், வர்க்கம் துறந்து
கள் குடித்த வண்டாய்
தள்ளாடி தள்ளாடி பறந்து
கொண்டே இருக்கிறேன்..!!
சரியா... ? தவறா....?
சரியான ஒரு தவறா..?!!
14 comments:
கவிதை நல்லா இருக்கு....
//உன் நினைவுகள்
துருபிடித்துக் கொண்டதே//
ஒரு நினைவில் சுற்றிவரும் வரி :)
//சரியா... ? தவறா....?
சரியான ஒரு தவறா..?!!//
நைட்டு சரியா தூங்கலையா சகோ ;)
உன் நினைவுகள்
துருபிடித்துக் கொண்டதே////
அந்த அளவிற்கு பிடித்து கொண்டதா இனி ஒன்றும் செய்ய முடியாது
அருமை,..
//தள்ளாடி தள்ளாடி பறந்து
கொண்டே இருக்கிறேன்..!//
பார்த்து போங்க
// கற்பனைகள் உடையலாம்
சோப்பு குமிழியாய்...!//
super. vaalththukkal.
வார்த்தை உபயோகம் சூப்பரா இருக்குங்க.. :-)
பிரஷா...
நன்றி தோழி
Balaji saravana சொன்னது…
//ஒரு நினைவில் சுற்றிவரும் வரி :)
நைட்டு சரியா தூங்கலையா சகோ ;)//
தூங்கும் போது கனவில் சுற்றி வந்த வரிகள் சகோ.....!
சௌந்தர் சொன்னது…
//அந்த அளவிற்கு பிடித்து கொண்டதா இனி ஒன்றும் செய்ய முடியாது//
:))))
புதிய மனிதா...
நன்றி சகோ.
LK சொன்னது…
//பார்த்து போங்க//
:)))
மதுரை சரவணன் சொன்னது…
//super. vaalththukkal.//
வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.
Ananthi சொன்னது…
//வார்த்தை உபயோகம் சூப்பரா இருக்குங்க.. :-)//
அப்படியா..! நன்றி தோழி.
வரிகளால் பின்றீங்க.
// கள் குடித்த வண்டாய்
தள்ளாடி தள்ளாடி பறந்து
கொண்டே இருக்கிறேன்..!!
சரியா... ? தவறா....?
சரியான ஒரு தவறா..?!!//
அழகான கவிதை..
asiya omar சொன்னது…
//வரிகளால் பின்றீங்க.//
ம்...நன்றி தோழி.
பால் [Paul] சொன்னது…
//அழகான கவிதை..//
உங்களின் முதல் வருகைக்கு நன்றி
beautiful!
>>>சரியான ஒரு தவறா..
Post a Comment