தினசரி
பேசியாக வேண்டும்
எனக்கு...
சொல்ல ஒன்றுமில்லை
என்றாலும்
காரணம் தேடுகிறேன்
சொல்வதற்கு...
எதுவும்
கிடைக்கவில்லை
என்றாலும்
இருக்கவே இருக்கிறது
காலை வணக்கமும்
இரவு வணக்கமும்...
ஆம்
தினசரி
பேசியாக வேண்டும்
இல்லை இல்லை
தினசரி
வாழ்ந்தாக வேண்டும்
உன்னுடன் !!
* * * * *
அஞ்சல் முகவரியில்
நீ எழுதிய
எனது பெயரிலும்
காதலை தேடுகிறேன்...!
உன் விழி மீன்களை
பிடித்துவிடும் ஆசையில்
தூண்டில் போட்டேன்...
சிக்கிவிடுமென
ஆவலுடன்
வைத்த கண் வாங்காமல்
பார்த்திருந்தேன்
சட்டென்று
என்னை விழுங்கிவிட்டன
அப்பொல்லாத மீன்கள் !!
22 comments:
எதுவும்
கிடைக்கவில்லை
என்றாலும்
இருக்கவே இருக்கிறது
காலை வணக்கமும்
இரவு வணக்கமும்..//
காரணம் இருக்கவே செய்கிறது காலை வணக்கம் மாலை வணக்கம், கலக்கல் கவிதை...!!!
முகவரியிலும் அன்பைத் தேடும் காதல் அருமையிலும் அருமை மேடம். தொடருங்கள்!
அருமை..
பொல்லாத விழி மீன்களை நீங்கள் சொல்லிய விதம் அருமை. தினமும் பேசி... இல்லை வாழ்ந்தாக வேண்டும் என்ற வரிகளும் அமுத வரிகள். மிகமிக ரசித்தேன்.
எளிமை,இனிமை அருமை!
நன்று!
புலவர் சா இராமாநுசம்
இந்த மீன்கள் ரொம்பவும் பொல்லாததாக இருக்கிறதே....
நல்ல கவிதை....
விழுங்கிவிட்ட கண்மீன்...வாவ் அற்புதம் கௌசி.அதானே பேசவா வார்த்தைகள் இல்லை.வணக்கம் சொன்னாலே மனம் குளிர்ந்துபோகுமே !
@@ MANO நாஞ்சில் மனோ கூறியது...
//காரணம் இருக்கவே செய்கிறது காலை வணக்கம் மாலை வணக்கம், கலக்கல் கவிதை..//
காலை, இரவு நடுவில மாலை ஒன்னை விட்டுட்டேனே...நீங்க சொல்லிடீங்க.
:))
நன்றி மனோ.
@@ துரைடேனியல் கூறியது...
//முகவரியிலும் அன்பைத் தேடும் காதல் //
வைக்கிற முற்று புள்ளியில் கூட காதலை தேடலாமே...?! :)
நன்றிங்க.
@@ guna thamizh...
நன்றிங்க.
@@ கணேஷ்...
அழகான ரசனைக்கு நன்றிகள் கணேஷ்.
@@ புலவர் சா இராமாநுசம்...
மிக்க நன்றிகள்.
@@ வெங்கட் நாகராஜ் கூறியது...
//இந்த மீன்கள் ரொம்பவும் பொல்லாததாக இருக்கிறதே....//
அதே அதே...
நன்றிகள்
@@ ஹேமா கூறியது...
//அதானே பேசவா வார்த்தைகள் இல்லை.வணக்கம் சொன்னாலே மனம் குளிர்ந்துபோகுமே !//
உங்களை விட வேற யாரால் இதை புரிஞ்சிக்க முடியும். :)
நன்றி ஹேமா.
வணக்கம்,
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
காதலை பற்றிய ஆழந்த உணர்வுகளின் வெளிப்பாடு. நன்றி.
வணக்கம் கெளசல்யா.
காதல் பற்றி மிக அழகான கவிதை.
//......சட்டென்று
என்னை விழுங்கிவிட்டன
அப்பொல்லாத மீன்கள் !!//
சிறப்பான வரிகள்..
வித்தியாசமான கற்பனை நிறைந்த கவிதை.அருமை வாழ்த்துகள்
sorry for not visiting for past few days sis...
this poetry is simply superb...
இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்.
எனக்கு கிடைத்த "versatile Blogger Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html
பிரமாதம்.
Post a Comment