நமது சந்திப்பு
ஒவ்வொன்றின் முடிவிலும்
பேசி
விடை பெறுகிறாய் நீ
விடை பெற்றும்
பேசிக்கொண்டிருக்கிறேன்
அதுவரை
உன்னிடம் சொல்லவியலாத
காதல் படிமங்களுடன்...!
* * *
நம்மிடையே
சம்பிரதாயமான விடைபெறுதல்
சாத்தியமில்லை
என்றா
ஒரு காற்றைப்போல செல்கிறாய்...
என்னவொன்று
காற்று தொட்டுச் செல்லும்
நீ விட்டுச் சென்றாய் !
* * *
விடைப் பெற்று நீ
சென்ற பின்னும்
பல முறை
திரும்பிப் பார்க்கிறேன்
பார்ப்பேன் என தெரிந்தே
போகாமல் இன்னும்
அங்கேயே
நின்றுக்கொண்டிருக்கிறது
உன் நிழல்...!
* * *
எப்படியாவது சொல்லிவிடுவாய்
என்றுதான்
நமது எல்லா சந்திப்புகளிலும்
எதிர்பார்க்கிறேன்...
விடைபெறுவாய்
எல்லாம் பேசியும்
என்னை பேசாமலும்...!
படம் -கூகுள்
12 comments:
அருமை... நன்றாகவும் முடித்துள்ளீர்கள்....
இதற்கு பெயர் தான் காதலா ?
கவிதை அருமை....
காதல் தவிப்பின் கவிதை, அருமை...!
அருமையான கவிதை!
சொல்ல இயலாத காதல் படிமங்களுக்கு சொல்லும் படியாய் காரணம் இல்லாமல் போனது ஏனோ?
விட்டுச் சென்றாய் தொடாமல்... ஆனால் விட்டுச் சென்றாய் நினைவுகளை.... நீங்காது என் மனதில்!
நிழலாய் நினைவுகள்!! நினைவுகள் யாவுமே நிஜம் தானே - இறந்த காலத்தில்... காலம் இறக்கலாம் ; நினைவுகள் ???
யாதுமாகி நின்றவரை பேசாமல் போனது ஏன் என்று நிற்கும் போது கேள்வி கேட்கவும் தோன்றைவில்லை... எல்லாம் பேசும் போது அந்தப் பேச்சில் தொலைந்ததாலோ???
நல்ல பதிவு....
@@ திண்டுக்கல் தனபாலன்...
நன்றிகள்.
@@ vimal கூறியது...
//இதற்கு பெயர் தான் காதலா ? //
அப்படிதான் நினைக்கிறேன் ! :)
வருகைக்கு நன்றிகள்.
@@MANO நாஞ்சில் மனோ கூறியது...
நன்றி மனோ. :)
@@கோவை ஆவி...
நன்றிகள்.
@@ Shankar M கூறியது...
//சொல்ல இயலாத காதல் படிமங்களுக்கு சொல்லும் படியாய் காரணம் இல்லாமல் போனது ஏனோ?//
காரணம் இருக்கு, ஆனா சொல்லியும் use இல்ல, அதான் அப்படி ! :)
//விட்டுச் சென்றாய் தொடாமல்... ஆனால் விட்டுச் சென்றாய் நினைவுகளை.... நீங்காது என் மனதில்!//
ஆமா முப்பொழுதும் நினைவுகளுடன் மட்டுமே ! :)
//நிழலாய் நினைவுகள்!!//
அருமை.
//யாதுமாகி நின்றவரை பேசாமல் போனது ஏன் என்று நிற்கும் போது கேள்வி கேட்கவும் தோன்றைவில்லை... எல்லாம் பேசும் போது அந்தப் பேச்சில் தொலைந்ததாலோ???//
அடடா எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க...?!!! சூப்பர் !!
அழகான ரசனைக்கு என் நன்றிகள் ஷங்கர்.
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்...
எல்லா சந்திப்புகளின் முடிவிலும்
எப்போதும்
சில பதில்கள்
மிச்சமிருக்கின்றன
கேட்க மறந்த
சில கேள்விகளும்
சொல்ல விட்டுப்போன
சில விளக்கங்களும்....
Post a Comment