பல அடிகள் வரை ஆழமாய்
தோண்டி.....
தூண்களை எழுப்பி வெகு
உறுதியாய் கட்டுமானம்
வீடு எழும்பிற்று !
கட்டியவனின் பெருமிதம் ,
பலமான அஸ்திபாரம்
எந்த புயல் மழைக்கும்
என் வீடு தாங்கும்...??
என்னே...
அவனின் அறியாமை
வியந்தது இயற்கை....!
பூமி பந்தே எந்த பிடிப்பும்
இல்லாமல் அந்தரத்தில் !!?
2 comments:
இயற்கைக்கு நியதி அவனுக்கு நம்பிக்கை
அறியாமைதான் மனிதனை அகந்தைக்கு காரணம்
Post a Comment