Posted by
Kousalya Raj
comments (22)
முதல் முறை
நாம் சந்தித்தபோது
விழிகள் விரிய
நீ பார்த்த பார்வையின்
ஆழத்தில் விழுந்து
நான் மெல்ல
உள்ளே செல்ல
சிறிதும் தாமதியாமல்
இமைகள் இரண்டையும்
இறுக்கமாக
மூடிக்கொண்டாய் !
மூடிக்கொண்டாய் !
வெளிவர மனம் இன்றி
பொய்யாக மயங்கியே
கிடக்கின்றேன்
******
நாம்
இன்றுவரை நானும் !
******
நாம்
கடற்கரைச் செல்லும்
போதெல்லாம்
பெருமையாய் சிரிக்கின்றன
உன் கால் தழுவி
முத்தமிட்டு செல்லும் அலைகள் !
ஒரு சந்தர்ப்பம் கொடு
அவை என்னை பார்த்து
பொறாமைப்படட்டும் !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (26)
பயணம் இனிதாய் முடிந்தது
அடம் பிடித்து
உடன் வந்த உன்
நினைவுகளால் !!
**************
சில நேரம்
உன் கோபம் ரம்மியமானதாக
இருந்திருக்கிறது
மழை நேரத்து தேநீரின்
முதல் துளி
அருந்துவது போல !
**************
பேசியே களைத்து போன வார்த்தைகள்
தேடிக் கிடைத்த அர்த்தங்கள்
இரண்டும் அற்ற இந்த மௌனம்
இதன் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும்
நம் நேசம் !
விலகி இருந்தும்
தழுவிக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள் !
தனித்திருந்தும்
தொடர்ந்து ஒலிக்கும்
உனது குரல் !
நான் சேகரித்து
வைத்திருக்கும்
உன் சிரிப்பு முத்துக்கள் !
இவை போதுமெனக்கு
இந்த ஜென்மத்தை முடிப்பதற்கு !!
**************
சட்டென்று
சிலிர்க்கிறது எனக்கு
வேகமாய் துடிக்கிறது நெஞ்சம்
..................
புரிந்துவிட்டது
இப்போது
என் எழுத்துக்களை நீ
படித்துக் கொண்டிருக்கிறாய் !
Labels:
காதல் கவிதைகள்