Posted by
Kousalya Raj
comments (4)
தேடி அலைந்தேன்
ஒவ்வொரு இடமாக...
பின் தொடர்ந்த என் மீது
வண்ணம் உதிர்த்து வானில் பறந்தது
ஒரு வண்ணத்துபூச்சி...!
அருகில் சென்ற என் மீது
பழுத்த இலைகளை வீசி எறிந்தது
காற்றுக்கு தலை அசைத்த ஒரு மரம்...!
விரைந்து நெருங்கிய என் மீது
சாம்பலை அள்ளி பூசியது
கனல் கக்கிய ஒரு எரிமலை...!
நதி கரையில் காலடி தடம்
கண்டுத் தொடர்ந்தேன்
தடம் நதிக்குள் சென்று முடிந்திருந்தது...
ஓடும் நீரில் முகம் தெரிய உற்று நோக்கினேன்
முகம் நழுவத் தொடங்கியது...
ஐயோவென்று நதியுடன் தொடர்ந்து ஓடினேன்...
அது என்னை ஒரு பாலை வனத்தில்
கொண்டுபோய் சேர்த்தது...
மணலை அள்ளி எண்ணி பார்த்தேன்
அங்கே உன் வருகை பதிவு
எண்ண முடியாத அளவில் இருந்தது...
களைத்து
வீடு திரும்பி
பூட்டை விடுவித்து
என் அறை கதவு திறந்து
உள்ளே சென்றேன்...
அங்கே
பஞ்ச பூதங்கள் மீதேறி
அமர்ந்திருந்தாய்
வெற்றிக் களிப்புடன்...!!
படம் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (3)
விவாதங்களில்
விட்டுக்கொடுப்பதில்
முந்திக் கொள்வாய்
என் வார்த்தைகள்
உன்னை வதைப்பதை மறைத்து...
சமயங்களில்
வெட்கப்பட வைக்கிறது
அளவில்லா உன் அக்கறை
மறுபடி காய்ச்சல் வரும் நாளை
எதிர்பார்க்கிறது மனது...
பலமுறை உன் பேச்சை
அசட்டை செய்திருக்கிறேன்
'அடி அசடே' கன்னம் கிள்ளும்
விரல்கள் சொல்லும்
என் மீதான உன் அன்பை...
உன் அழைப்புகளை
தவிர்க்க முயலும்
ஒவ்வொரு முறையும்
விழிகளால் இறைஞ்சும் உன்னை
மறுதலித்தாலும்
மனமறியும்
இறுதிவரை
எனது நிழல் நீ என்பதை...!
விலகவும்
விலக்கவும்
விதிமுறை ஏது
விளக்கம் கொடுத்தாய்
விளக்கம் பெற்றும்
விளங்காமல் நிற்க்கிறேன்...
ஒரு காற்றாய்
எப்பொழுதும் சூழ்ந்திருக்கும்
உனக்காக
இதுவரை நான் ஒன்றும் செய்ததில்லை
சுவாசிப்பதை தவிர...!
படம்-நன்றி கூகுள்
Labels:
கவிதைகள்