Posted by
Kousalya Raj
comments (25)
தவம் கிடக்கிறோம்
நானும் தொலை பேசியும் !
சிணுங்கும்
ஒவ்வொரு முறையும்
உன் குரலை எதிர்பார்த்து
சலித்த மனது !
என்றோ வரும்
அழைப்புக்காய்
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறது
தொலை பேசியும்
தொலைந்த மனதும் !
தொல்லையடா உன்னுடன்
இன்றாவது
பேசித்தொலை தொலைபேசி !!
நலம் விசாரிப்பு
ஊடல்
கோபம்
தவிப்பு
கண்ணீர்
கெஞ்சல்
கொஞ்சல்
கூடல்
சிரிப்பு
அனைத்தும்
நிகழ்ந்துவிடுகிறது
தொலைபேசியில்...
நான் தனித்தில்லை
இவ்வாறு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடன் !!
Posted by
Kousalya Raj
comments (22)
பிறர் உன்னை அழைக்கும் போது
இருக்கிறேன் உன் பெயரில் !
பிறருடன் பேசும் போது
இருக்கிறேன் உன் வார்த்தையில் !
பிறரை பார்க்கும் போது
இருக்கிறேன் உன் பார்வையில் !
இல்லை என்று மறுத்துவிடாதே
நொறுங்கிவிடும் உள்ளே ஒன்று !!?
மெல்லிய இழை ஒன்று
அசைந்தும்
அசைவின்றியும்
இருவருக்குமிடையே !
சிறு காற்று போதும்
இழை அறுபட...
அறுபடாமல் பாதுகாப்பதில்
பருவங்கள்
கடந்துவிடுகின்றன
எனக்கு ?!
செத்து கிடக்கிறது !
ஒரு முறை அழை
உயிர் பிழைக்கட்டும்
என் பெயர் !!
ஓடுகிறேன்
துரத்துகிறாய்
நினைவுகளால் !
தேடுகிறேன்
ஓடுகிறாய்
என் உதிரமாய் !
Posted by
Kousalya Raj
comments (20)
மௌனமான மௌனங்கள் !
திரை விலகும் தருணம்
எதிர்பார்த்தே
விழும் மற்றொரு கனத்த திரை !
எதற்கான ஊடல்,
மறந்து புதிதாய் சேர்ந்த
உனது பாரா முகம் !
உனக்கான சொற்கள், தகவல்கள்
எனக்குள்
பிடிவாதமாய் மரிக்கின்றன !
தனிமை உதடுகள் அசைய
வார்த்தைகள் காற்றில்
கேட்பாரற்று!
நீண்ட மௌனம்
நீள் உறக்கத்திற்கான
ஒத்திகை !?
பிரிவு வலிக்கிறதுஒத்திகை !?
மௌனம் இதயம் பிளந்தாலும்
சுகித்து திளைக்கிறது காதல் !
பூமி நனைத்த மழை
ஒரு போதும்
வான் நனைத்ததில்லை !
நீ வான்
வெப்பம், குளுமை உன்னில் !
நான் மண்
தாங்குவேன் என்னில் !
தவிப்பதும்
தடுமாறுவதும்
காத்திருப்பதும்
கலங்குவதும்
காதலுக்கு புதிதா ?!
காலமற்று போய்
திசைகளற்ற பயணத்தில்
செயலற்று பறக்கும்
சிறகுகளற்ற
ஒரு சிறு பறவை !!
படங்கள் - நன்றி கூகுள்
Labels:
கவிதை காதல்