Posted by
Kousalya Raj
comments (8)
என் உணர்வுகள்
என் வார்த்தைகள்
என் மௌனங்கள்
என் சுவாசங்கள்
அனைத்தும்
உன் ஒருவனை
உன் ஒருவனை
பற்றியதாகவே இருக்கிறது
மொத்த வாழ்வின்
ஒரே தேடலாய்
ஒரே தேடலாய்
ஒற்றை முடிவாய்
முற்றுப்புள்ளியாய் நீ இருக்கிறாய்
முற்றுப்புள்ளியாய் நீ இருக்கிறாய்
ஆதி எதுவென நான் அறியேன்
அந்தம் நீ...நீ மட்டுமே !
பலநேரங்கள்
நீயாகிய நான்
சில நிமிடங்களே
நானாகிய நான்
நித்தம் நீ ஆடும்
மேடையாகி போனதென் மனம்
நீயோ ஆனந்த தாண்டவம் இதுவென
கர்வம் கொண்டு சிரிக்கிறாய் !
சமயங்களில் எனை
மேடு பள்ளம் பாறைகள்
யாவும் கடந்து
ஆழ்கடல் உனை
சிறு நதியெனவே
வந்தடைவேன்
உருவமற்று
பொருளற்று
நீயே தஞ்சமென
உயிர்த்துளிகள் உதிர்த்து
உன்னுள் அடங்கி
போய்விட மாட்டேனா
நானாகிய நான்
நித்தம் நீ ஆடும்
மேடையாகி போனதென் மனம்
நீயோ ஆனந்த தாண்டவம் இதுவென
கர்வம் கொண்டு சிரிக்கிறாய் !
சமயங்களில் எனை
பாலை புயலாய் சுழன்றடிப்பாய்
காட்டாறு வெள்ளமாய் ஆர்ப்பரிப்பாய்
அத்தனையிலும்
சப்தமின்றி அமிழ்ந்து
ஆழ்ந்து கரைந்து மறைந்தே
போய்விடுகிறதென் நான் ! காட்டாறு வெள்ளமாய் ஆர்ப்பரிப்பாய்
அத்தனையிலும்
சப்தமின்றி அமிழ்ந்து
ஆழ்ந்து கரைந்து மறைந்தே
மேடு பள்ளம் பாறைகள்
யாவும் கடந்து
ஆழ்கடல் உனை
சிறு நதியெனவே
வந்தடைவேன்
உருவமற்று
பொருளற்று
நீயே தஞ்சமென
உயிர்த்துளிகள் உதிர்த்து
உன்னுள் அடங்கி
போய்விட மாட்டேனா
...
என்றாவது ?!
என்றாவது ?!
Posted by
Kousalya Raj
comments (9)
குவிக்கப்பட்டனர்
முப்படைவீரர்கள்
பல்லாயிரக்கணக்கில் !
பல்லாயிரக்கணக்கில் !
விமான நிலையம்
ரயில் நிலையங்கள்
பேருந்து நிலையங்கள்
தீவிர சோதனையில்...!
பாராளுமன்ற வளாகம்
ஹோட்டல்கள்
தங்கும் விடுதிகள்
மனிதர்கள்
கடும் கண்காணிப்பில்...!
உச்சகட்ட பாதுகாப்பு
இன்று சுதந்திரதினம் !?
அச்சம் ஏன் ?
எதனால் தீவிரவாதம் ?
சுயநல அரசியலின்
முரண்பட்ட வாதங்களால்
முரண்பட்டு போனதொரு
மக்கள்கூட்டம் அன்றோ அவர்கள்!
அடிஉதை வாங்கிபெற்று தந்தீர்கள்
வெள்ளையர்களிடம் இருந்து
விடுதலை !
இரவில் வாங்கியதால் என்னவோ
உறக்கத்தில் இருந்து
இன்னும் எழவில்லை நாங்கள் !
பகலில் வாங்கிதாருங்கள்
அரசியல்
கொள்ளையர்களிடம் இருந்தும் !
அரசியல்வாதிகளின்
அயோக்கியத்தனம்
அடக்கி
அடையவேண்டும்
மற்றுமோர் சுதந்திரம்
ஆம் வேண்டும் 2 வது சுதந்திரம் !
எங்கள் இளைஞர்களே...
தலைமீது கைவைக்க
காத்திருக்கிறது அமெரிக்கா
கை வெட்ட
நேரம் பார்க்கிறது சீனா
வேடிக்கை பார்க்க
காத்திருக்கிறது மற்றவை !
இனி அலறவேண்டும் அத்தனையும்...
இங்கே மூடப்பட்ட
ஜன்னல்களை திறவுங்கள்
தேச மூலையில்
ஆங்காங்கே கொட்டி கிடக்கிற
நேர்மையை, உழைப்பை, ஞானத்தை
சேர்த்தள்ளி எடுங்கள் !
அவை கொண்டு
புரையோடி போய் கிடக்கிற
சமூக பள்ளங்களில் இட்டு நிரப்புங்கள்
வெற்று மனங்களை இணையுங்கள் !
உள்ளுக்குள் இருக்கும் நெருப்பை
வெளி அள்ளித் தெளியுங்கள்
எரிந்து சாம்பலாகட்டும்
அநீதிகளும்
அவசர கோலங்களும் !
இரண்டாம் சுதந்திரம் பெற்று தாருங்கள்
ஆண்டுகள் பல ஆயினும்
நான் இன்னும் சுவாசிக்கவில்லை
ஜீவனுள்ள சுதந்திரக்காற்று !!
கடும் கண்காணிப்பில்...!
உச்சகட்ட பாதுகாப்பு
சுற்றிலும் இரகசிய கேமராக்கள்
ஹெலிஹாப்டர் ரோந்துகள்
நடுவே செங்கோட்டை
கண்ணாடி கூண்டின் உள்ளே பிரதமர் !
இன்று சுதந்திரதினம் !?
அச்சம் ஏன் ?
எதனால் தீவிரவாதம் ?
சுயநல அரசியலின்
முரண்பட்ட வாதங்களால்
முரண்பட்டு போனதொரு
மக்கள்கூட்டம் அன்றோ அவர்கள்!
எங்கள் முன்னோர்களே...
அடிஉதை வாங்கிபெற்று தந்தீர்கள்
வெள்ளையர்களிடம் இருந்து
விடுதலை !
இரவில் வாங்கியதால் என்னவோ
உறக்கத்தில் இருந்து
இன்னும் எழவில்லை நாங்கள் !
பகலில் வாங்கிதாருங்கள்
அரசியல்
கொள்ளையர்களிடம் இருந்தும் !
அரசியல்வாதிகளின்
அயோக்கியத்தனம்
அடக்கி
அடையவேண்டும்
மற்றுமோர் சுதந்திரம்
ஆம் வேண்டும் 2 வது சுதந்திரம் !
எங்கள் இளைஞர்களே...
தலைமீது கைவைக்க
காத்திருக்கிறது அமெரிக்கா
கை வெட்ட
நேரம் பார்க்கிறது சீனா
வேடிக்கை பார்க்க
காத்திருக்கிறது மற்றவை !
இனி அலறவேண்டும் அத்தனையும்...
இங்கே மூடப்பட்ட
ஜன்னல்களை திறவுங்கள்
தேச மூலையில்
ஆங்காங்கே கொட்டி கிடக்கிற
நேர்மையை, உழைப்பை, ஞானத்தை
சேர்த்தள்ளி எடுங்கள் !
அவை கொண்டு
புரையோடி போய் கிடக்கிற
சமூக பள்ளங்களில் இட்டு நிரப்புங்கள்
வெற்று மனங்களை இணையுங்கள் !
உள்ளுக்குள் இருக்கும் நெருப்பை
வெளி அள்ளித் தெளியுங்கள்
எரிந்து சாம்பலாகட்டும்
அநீதிகளும்
அவசர கோலங்களும் !
இரண்டாம் சுதந்திரம் பெற்று தாருங்கள்
ஆண்டுகள் பல ஆயினும்
நான் இன்னும் சுவாசிக்கவில்லை
ஜீவனுள்ள சுதந்திரக்காற்று !!
Labels:
சுதந்திரதினக் கவிதை
,
தேசம்
Posted by
Kousalya Raj
comments (23)
'ம்' என்ற உன் ஒற்றைச்சொல்
சிறிதும் தயக்கமின்றி
என் உயிரை குடித்து
சற்று நேரம் கழித்து வெளியே துப்பும்
விந்தை நீ அறிய வாய்ப்பில்லை !
உன் வார்த்தைகளின் பிரமாண்டம்
அண்ணாந்து பார்த்து
மலைக்கிறேன் - அதிசயமென
வியக்கிறேன் - அதன்முன்
சிறு புள்ளியாய் தெரிகிறேன் - அதில்
விழுந்து திக்கெங்கும் தெறிக்கிறேன் !
உன் வார்த்தைக்குள் கரைகிறேன் - பின்
மெல்ல தெளிகிறேன் - அதை
தெளிக்கிறேன் மனவாசலில் - நான்
கலைக்கிறேன் அதை
மீண்டும் உன் வார்த்தை கோலமிட !
சுகிக்கிறேன் சுகமென - அனலாய்
தகிக்கிறேன் தவமென - அதை
மறைக்கிறேன் எதுவென - நான்
இருக்கிறேன் உனக்கென - நீ
இன்றி ஏதுமில்லை இனி
இன்றி ஏதுமில்லை இனி
வாழ்வில் எனக்கென !!
சமயத்தில்
கோபத்தில் சிதறும்
உன் வார்த்தைகள்
வரவழைக்கும் விழிநீரை
சுண்டி எறியும்
தொடர்ந்து வரும்
வார்த்தைகள் !
செந்தணலையும்
நீராய் மாற்றும்
வார்த்தைகள்
உனதல்லவா ?!
இப்போதும்
என் இதயம்
குளிர்ந்து துடிக்கிறது
நீ வார்த்தை மழை பெய்வித்து
கொண்டிருக்கிறாய் !
Labels:
காதல்