Posted by
Kousalya Raj
comments (18)
இருட்டடிப்பு செய்யப்பட்ட
பக்கங்களில் தவறியும்
தோல்விகள்
பதிவு செய்யபடுவதில்லை
வெறும் எழுத்துக்கள்
வலியின் கனத்தை
முழுமையாய்
உணர்த்தாத போது!?
புதுவிடியலில்
முழுமையாய்
உணர்த்தாத போது!?
புதுவிடியலில்
முதல்நாளின் விடியல்
ஏனோ காணாமல்
போய்விடுகிறது !
காய்ந்த இலைகளை
உதிர்த்த மரம்
உயிர்ப்பிலை
உதிர்க்கலாம்
புயல் வீசினால்...
நறுமணம் வீசிய
கடந்த காலம்...
வாசமற்ற
நிகழ்காலம்...
எதிர்பார்ப்பில்
ஏனோ காணாமல்
போய்விடுகிறது !
காய்ந்த இலைகளை
உதிர்த்த மரம்
உயிர்ப்பிலை
உதிர்க்கலாம்
புயல் வீசினால்...
நறுமணம் வீசிய
கடந்த காலம்...
வாசமற்ற
நிகழ்காலம்...
எதிர்பார்ப்பில்
எதிர்காலம்!?
மறந்தே போனது
இறந்த காலத்திய
நினைவுகள்...
தற்கால நிகழ்வுகள்
நினைவுகள்...
தற்கால நிகழ்வுகள்
கிழித்து போட்டு விட்டதால்...
முடிவுறா முடிவுகள்
முன்னறிவிப்பின்றி
முடிக்கப்பட்டே
முடிவுறும்...
முடிக்கப்பட்டே
முடிவுறும்...
முற்றுப்புள்ளிகள்
இருக்கின்றனவே...!?
படம் - நன்றி கூகுள்
Posted by
Kousalya Raj
comments (14)
இன்னும் குழந்தையாய் நான் இருக்க
அவனோ நாளும் ஒரு வளர்ச்சி
உடலில் மட்டுமா ? மனதளவிலும் !
'நைட் அம்மா வர லேட் ஆகும்,
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'
செல்பேசியில் நான்.
'பிரட் ரோஸ்ட்,ஆம்லேட்,மில்க்
ரெடி பண்ணி தம்பியும் நானும் சாப்பிட்டாச்சு'
ரெடி பண்ணி தம்பியும் நானும் சாப்பிட்டாச்சு'
பதிலில் மனம் குளிர வைப்பதிலும் !
மாலையில் வரும் என்னை வரவேற்கும்
வாசலில் நீ தெளித்திருக்கும் தண்ணீர்
'நான் வந்து தெளிப்பேனே நீ ஏன்மா பண்ணின ?
'லைட் போடணும் அதான் தெளிச்சேன்மா' என்பதிலும் !
புதிதாய் யாரையும் அறிமுகபடுத்தினால்
உடனே 'நல்லா இருக்கீங்களா' நீ நலம் விசாரிக்க
பையனை 'நல்லா வளர்த்திருக்கீங்க' என
அதை கேட்ட நீ மௌனமாய் சிரிப்பதிலும் !
அதை கேட்ட நீ மௌனமாய் சிரிப்பதிலும் !
என் கையில் ரத்தம் பார்த்து பதறி
தண்ணீர் குடிக்க வைத்து ரத்தம் துடைத்து காயத்திற்கு(?) கட்டு போட்டு விடுவாய்
பள்ளிவிட்டு வந்ததும் 'வலி சரியா போச்சா?'
விசாரிப்பதிலும்
என அத்தனையிலும் தாயாக நீ தானே தெரிகிறாய் !
என அத்தனையிலும் தாயாக நீ தானே தெரிகிறாய் !
இன்று எங்கள் திருமணநாள், உனக்கு எப்படி இதை நினைவு படுத்த
வார்த்தைகளை நான் தேட, கிளம்பி வாசல் வரை சென்ற நீ, திரும்பி பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து, "இரண்டு பேரும் ஏதாவது மூவி போயிட்டு வாங்க...அப்பா, இன்னைக்காவது மறக்காம அம்மாவுக்கு பூ வாங்கி கொடுங்க...நாங்க வந்ததும் ஈவினிங் வெளில போகலாம், ரெஸ்டாரன்ட்ல நைட் டின்னர், ஒ.கே வா ?! சந்தோசமா இருங்க...திருமணநாள் வாழ்த்துகள் !'
வாழ்த்தி விட்டு இதோ கிளம்பிவிட்டாய் பள்ளிக்கு...!
உன்னை பார்த்து பொடியனும் " சரி சரி நல்லா இருங்க...!" என்று ஆசிர்வதிப்பது போல் கைகளை உயர்த்தி சொல்லிவிட்டு கிளம்ப 'இன்று விடுமுறை நாளாய் இருந்தால் நல்லா இருக்குமே' யோசனையில் இருவரும் உள்ளே வர மனமின்றி வாசலில் அமர்ந்துவிட்டோம்.
Labels:
அனுபவம்
,
திருமணநாள்
Posted by
Kousalya Raj
comments (8)
புல்வெளியில்
அமரும்போதெல்லாம்
அனிச்சையாய் விரல்கள்
புல் பிடுங்கி அடி கடிக்க
ருசி ரசிக்கும் மனது !
பேச்சின் ஊடாய்
உன் அழகு சிரிப்பு
அனிச்சையாய் கண்
சேர்த்து அள்ள
ரசித்து ருசிக்கிறது
என் இதயம்
சேர்த்து அள்ள
ரசித்து ருசிக்கிறது
என் இதயம்
சிரிக்க மறக்காதே
அது துடிக்க
மறந்துவிடக்கூடும் !
மறந்துவிடக்கூடும் !
* * * * * * *
உன்னில் என்னை மீட்டெடுக்க
எடுத்த பிரயாசங்கள்
அனைத்தையும் வென்று
இன்னும் ஆழத்தில் புதைத்தே விட்டது
உன் புன்னகை !
தூக்கத்தில் சிரிக்கும்
குழந்தையின்
பரிசுத்தமான பளிங்கு சிரிப்பு
உன் புன்னகை !
எதையும் சொல்லாதது போல்
உன் வார்த்தைகள்
எல்லாவற்றையும் சொன்னது போல்
உன் புன்னகை !
மௌனம், கோபம், சண்டை
எல்லாம் நொடியில் தூக்கி போட்டு
என் தலையில் தட்டி பரிகசிக்கும்
கர்வகிரீடம் உன் புன்னகை !
Posted by
Kousalya Raj
comments (22)
சில புரிதலற்ற
கோபக்கனல்கள்
கோபக்கனல்கள்
சுட்டெரித்து சாம்பலாக்கிவிட
மிகச் சரியாக அந்த வினாடி
வீறு கொண்டெழுகின்றன
உன் முன் மண்டியிட்டு கிடக்கும்
என் கர்வங்கள் !
இருபுறமும் மோதி
இருபுறமும் மோதி
கீழே வீழ்ந்து துடிக்கிறது
ஏதும் அறியா ஒரு நேசம்...
வார்த்தைகளின் கனம்
தாளாமல் சிதைந்தது
மாசற்ற அன்பு...
மௌனமாய் கதறுகிறது
என்றோ எனக்குள்
ஒளித்திருந்த காதல் !
ஒரு கட்டத்தில்
இரு கர்வங்கள்
போராடி
களைத்து போய்விட
மௌன வெளியில்
சிறகடித்து பறந்து
சென்றே விட்டது
வெண்புறா ஒன்று !
அதன் பின்னான
ஏதும் அறியா ஒரு நேசம்...
வார்த்தைகளின் கனம்
தாளாமல் சிதைந்தது
மாசற்ற அன்பு...
மௌனமாய் கதறுகிறது
என்றோ எனக்குள்
ஒளித்திருந்த காதல் !
ஒரு கட்டத்தில்
இரு கர்வங்கள்
போராடி
களைத்து போய்விட
மௌன வெளியில்
சிறகடித்து பறந்து
சென்றே விட்டது
வெண்புறா ஒன்று !
அதன் பின்னான
உன் இதழோரப் புன்னகை
களிம்பை பூச மறந்து
ஏனோ
காயத்தை கீறி விட்டு
செல்கிறது!?
இம்முறையும்
உன் கோபாக்கினையில்
தப்பி பிழைத்த
ஒற்றை கொள்ளியாய் நான் !
ஏனோ
காயத்தை கீறி விட்டு
செல்கிறது!?
இம்முறையும்
உன் கோபாக்கினையில்
தப்பி பிழைத்த
ஒற்றை கொள்ளியாய் நான் !