Posted by
Kousalya Raj
comments (18)
புகைப்படத்தில் வசீகரித்த
மர்ம புன்னகை !
என்னை கட்டி போட்ட
புயல் வேக பேச்சுக்கள் !
வார்த்தைகளின் ஊடே
மிரட்டும் சிரிப்புகள் !
பரிமாறிய மின் அஞ்சல்கள்,
குறுந்தகவல்கள் !
செல்ல சண்டைகள்,
சமாதானங்கள் !
செல்பேசி சிணுங்கலுக்கான
காத்திருப்புகள் !
ஓவியமாக தெரிந்த
உன் கையெழுத்து !
காதலை கொட்டி
எழுதிய கவிதைகள் !
ஏதாவது ஒரு தருணத்தில்
உண்மையை சொல்லி இருக்கலாம்
......
நான் விரும்பிய உன்னில்
என்னை நிரந்தரமாக
இருத்திக்கொள்ள
விரும்புகிறேன் என்று !!
படம் - நன்றி கூகுள்
Posted by
Kousalya Raj
comments (25)
நீ உதிர்க்கும் வார்த்தைகளை
பொத்தி பாதுகாத்து...
தனிமையில்
அதன் வெளிபூச்சு கலைத்து
என் மனதுடன்
பொருத்துகின்றேன் !
பொருந்திப் போகிறது
வார்த்தைகளும், அர்த்தங்களும் !
இருந்தும்...
திருப்தி இன்றி அலைகிறது
கடிவாளம் போட்டும்
அடங்காத குதிரை மனது !
எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!
Posted by
Kousalya Raj
comments (35)
வசியம் செய்த பேச்சுக்கள்
வசை மொழியாய் மாறியதென்ன !
என்னை கொஞ்சி அழைத்த குரல்
எடுத்தெறிந்து பேசும் விந்தையென்ன !
கொள்ளை அடித்த உன் புன்னகை
கொள்கை மாறிய அவலமென்ன !
கவிதை பாடிய விழிகளில்
கள்ளத்தனம் தெரிவதென்ன !
பொய்மை அறியா இதழ்களாம்
பொருத்தமாய் பொய் புனையும் ஜாலமென்ன !
அன்பிற்கு அர்த்தம் தெரியாத உன்னிடம்
அன்பை யாசித்து நின்ற என்னை
அர்த்தம் இல்லாதவளாகி விட்டாய் !
பயணப்படுகிறது தோல்வி நோக்கி
பக்குவமற்ற பருவக் காதல் !!
*************************************************
இனி என் காதல் செடிக்கு
தினம் லட்சார்ச்சனை
கண்ணீரால் !!
என் தலையணையும்
தினம் குளிக்கிறது
கண்ணீரால் !!
கண்ணீரால் !!
என் தலையணையும்
தினம் குளிக்கிறது
கண்ணீரால் !!
வாழ இயலாது நீ இன்றி
வாழ தெரியாது
நீ இருந்தும் இல்லாமல் !!
Posted by
Kousalya Raj
comments (31)
நாம் பிரிந்திருக்கிறோம் என்று !!?
உன் நினைவுகளின் தாலாட்டில்
நிம்மதியாய் உறங்குகிறேன் !
உறக்கம் கலைக்காமல்
கனவில் வந்து செல்கிறாய் !
உன்னை ரசித்து மெல்ல
என்னையும் பருகச் செய்கிறாய் !
கை பிடித்து அமர்ந்தே
கதைகள் பல பேசி பாடம் கற்று தருகிறாய் !
உன் கொஞ்சு மொழியால்
சொக்கி கிடக்கும் என் தலை கோதி
விடிந்துவிட்டது என்கிறாய் !
கண்ணுக்குள் நீ
இமை திறக்க மனமின்றி நான் !
விழித்தாலும் கண் முன் நான் தானே
மர்மமாய் புன்னகைக்கிறாய் !
தூரத்தில் இருந்தும் நினைவால் தீண்டி
வாழ வைக்கிறாய் என்னை !!
இன்னும் அதிகமாய்
இன்னும் ஆர்வமாய்
இன்னும் பிடிவாதமாய்
உன்னை காதலிக்கிறேன் நானடா !
மரித்த பின்னும்
உயிர்ப்பித்து இருப்பேன்
அன்பே
உன் நினைவுகளால் !!
Posted by
Kousalya Raj
comments (37)
நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லிய அன்றே மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....!
சென்னையின் சந்தடி மிகுந்த பகுதிகளில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் ஒரு ஏரியா ஒன்றில் தான் நாங்கள் அப்போது குடியிருந்தோம். தனி தனி காம்பவுண்ட் வீடுகள் வரிசையாய் அணிவகுத்து ஒரு ஒழுங்கில் இருக்கும். தெருவின் இரு மருங்கிலும் குல்மோகர் மரங்களும், கொன்றை மரங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து நிற்கும் அழகே அழகு.
வசந்த காலத்தில் மரங்களில் சரம் சரமாக தொங்கும் கொன்றை மலர்களும், சிகப்பு நிற குல்மோகர் பூக்களும் மலர்ந்து மணம் வீசி அந்த ஏரியா முழுவதையும் ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடும். காலையில் வாக்கின் செல்பவர்கள் தரையில் படர்ந்திருக்கும் பூக்களின் மேல் தங்கள் கால்கள் படாதவாறு தட்டு தடுமாறி செல்வதை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும்.
'காதல்' நேசிக்க மறந்தவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.
- ஷேக்ஸ்பியர்
சென்னையின் சந்தடி மிகுந்த பகுதிகளில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் ஒரு ஏரியா ஒன்றில் தான் நாங்கள் அப்போது குடியிருந்தோம். தனி தனி காம்பவுண்ட் வீடுகள் வரிசையாய் அணிவகுத்து ஒரு ஒழுங்கில் இருக்கும். தெருவின் இரு மருங்கிலும் குல்மோகர் மரங்களும், கொன்றை மரங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து நிற்கும் அழகே அழகு.
வசந்த காலத்தில் மரங்களில் சரம் சரமாக தொங்கும் கொன்றை மலர்களும், சிகப்பு நிற குல்மோகர் பூக்களும் மலர்ந்து மணம் வீசி அந்த ஏரியா முழுவதையும் ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடும். காலையில் வாக்கின் செல்பவர்கள் தரையில் படர்ந்திருக்கும் பூக்களின் மேல் தங்கள் கால்கள் படாதவாறு தட்டு தடுமாறி செல்வதை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும்.
"திங்கள் கிழமை வந்தாலே இப்படித்தான், முதல் நாள் லீவ் நினைப்புலேயே ரொம்ப நேரம் தூங்கிறது...நேரம் ஆச்சு எழுந்திரு, காலேஜ் போற வழிய பாரு "
ச்சே நல்ல கனவை இந்த அம்மா கெடுத்திட்டாங்களே , இத்தனை நாளா முகம் காட்டாமல் பேசிட்டு மட்டும் போன என் கனவுக்காதலன் , இன்று தான் மெதுவா என் பக்கம் திரும்பினான், நல்லா முகத்தை பார்க்கலாம்னா இந்த அம்மாவால அதுவும் போச்சு....?!!
"இன்னும் என்னடி பண்ற ?" "இதோ வந்திட்டேன்மா" மிச்ச தூக்கத்தை போர்வையுடன் மடித்து கட்டிலில் ஓரமாய்ப் போட்டுவிட்டு எழுந்தேன்.
முகம் வரை இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருந்த என் தம்பியின் மேல ஜக்கில் இருந்த தண்ணிய ஊத்திட்டு, அவன் எழுந்து என்னை அடிக்க வருவதுக்குள் அங்கே இருந்து ஒரே ஓட்டம். எனக்கு என்னவோ இன்றைய விடியல் எனக்காத்தான் என்பது போல மனசு பூரா உற்சாகமாக இருந்தது.
ச்சே நல்ல கனவை இந்த அம்மா கெடுத்திட்டாங்களே , இத்தனை நாளா முகம் காட்டாமல் பேசிட்டு மட்டும் போன என் கனவுக்காதலன் , இன்று தான் மெதுவா என் பக்கம் திரும்பினான், நல்லா முகத்தை பார்க்கலாம்னா இந்த அம்மாவால அதுவும் போச்சு....?!!
"இன்னும் என்னடி பண்ற ?" "இதோ வந்திட்டேன்மா" மிச்ச தூக்கத்தை போர்வையுடன் மடித்து கட்டிலில் ஓரமாய்ப் போட்டுவிட்டு எழுந்தேன்.
முகம் வரை இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருந்த என் தம்பியின் மேல ஜக்கில் இருந்த தண்ணிய ஊத்திட்டு, அவன் எழுந்து என்னை அடிக்க வருவதுக்குள் அங்கே இருந்து ஒரே ஓட்டம். எனக்கு என்னவோ இன்றைய விடியல் எனக்காத்தான் என்பது போல மனசு பூரா உற்சாகமாக இருந்தது.
ஜன்னலை திறந்து சூரிய நண்பனுக்கு ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு வாசல் தெளிக்க பக்கெட் தண்ணியுடன் வெளியில் வந்தேன். பக்கத்து காம்பௌண்டில் ஒரே சத்தமாக கேட்டது...ரொம்ப நாளா பூட்டி இருந்த வீட்டில் இப்ப என்ன சத்தம் என்று மெதுவா வாசல் தெளிச்சிட்டே எட்டி பார்த்தேன்...புதுசா குடி வந்திருக்காங்க போல...அடடா இது என்னடா என் தனிமைக்கு வந்த சோதனை...?!! பக்கத்தில் யாரும் இல்லாத தைரியத்தில் எப்பவும் மொட்டை மாடியே கதின்னு இருப்பேன்...நானும் நிலாவும் தனியா பேசிட்டு பல நாள் இருந்திருக்கோம்...இனி அப்படி முடியாதேனு இருந்த உற்சாகம் எல்லாம் அப்படியே வடிந்துவிட்டது.
"கோலம் போட போனா அதை பண்ணாம என்ன யோசனை" உள்ளே இருந்து குரல் வர, வேகமா ஏதோ ஒரு கோலத்தை போட்டுட்டு வந்திட்டேன்.
வெளியில் வந்த என் அம்மா "என்னடி welcome கோலம் போட்டுட்டு வந்திருக்க , யாரை வரவேற்க போற" னு கேட்க,
எனக்கு ஒண்ணும் புரியல, வேற ஒரு கோலத்திற்கு தானே புள்ளி வச்சேன், எப்படி மாறியது !??
"சரி விடுமா, இதும் கோலம் தானே !" என்று சமாளிச்சிட்டு காலேஜ் கிளம்ப ரெடியானேன்.
வெளியில் வந்த என் அம்மா "என்னடி welcome கோலம் போட்டுட்டு வந்திருக்க , யாரை வரவேற்க போற" னு கேட்க,
எனக்கு ஒண்ணும் புரியல, வேற ஒரு கோலத்திற்கு தானே புள்ளி வச்சேன், எப்படி மாறியது !??
"சரி விடுமா, இதும் கோலம் தானே !" என்று சமாளிச்சிட்டு காலேஜ் கிளம்ப ரெடியானேன்.
காலேஜில் எனக்கு இது முதல் வருடம். எனக்கு பிடிச்ச மேஜர் பிசிக்ஸ்...அதனால அந்த சப்ஜெட் மட்டும் ஒழுங்கா படிச்சிடுவேன், மத்ததெல்லாம் ஏனோ தானோ தான்...! குளிச்சி ரெடி ஆகி எனக்கு ரொம்ப பிடிச்ச நீல கலரில் வெள்ளை பூக்கள் இறைத்த சுடிதார் அணிந்து துப்பட்டாவை வேகமா பின் குத்தினேன், ஆ பின் விரலில் குத்தி ஒரு துளி ரத்தம் வெளியில் ஹாய் சொல்லுது. ஸ் என்னாச்சு இன்னைக்கு எல்லாம் ஒரே ஏடாகூடமா இருக்கேன்னு யோசிச்சிட்டே அம்மா கொடுத்த இரண்டு இட்லியை நின்னுட்டே உள்ளே தள்ளிட்டு இருந்தேன்.
காலிங்பெல் குக்கூ னு கூப்பிட, இதோ வரேன்னு சொல்லிட்டே கதவை திறந்தேன்... இந்த ஏரியாவில் இதுவரை பார்க்காத இரு புது முகங்கள், இளைஞன் ஒருவனும் , நடுத்தர வயதில் ஒரு பெண்ணும் நின்றுகொண்டிருந்தார்கள். (நமக்கு தான் ஒரு நிமிஷம் போதுமே அவங்களை ஸ்கேன் பண்ண.....!)
அந்த பெண்ணிற்கு ஒரு 30 வயது இருக்கும் அழகா அம்சமா இருந்தாங்க. அந்த பையனுக்கு அக்காவோ, அண்ணியாகவோ இருக்கலாம், அப்புறம் அந்த பையன், வயசு என்ன ஒரு 20 , 21 இருக்கும்... அந்த கலரில் ஒரு பெண் என்றால் சூப்பர் பிகரா இருப்பா...ஆனா இப்படியா கோதுமை கலரில் பையன் இருக்கிறது...சுத்தமா நல்லா இல்லை...(பசங்க கொஞ்சம் மாநிறமா, லேசா கருப்பா இருந்தா ஓ.கே, ஆனா இது ஒரு தேறாத கேஸ்...!)
அந்த பெண் சிரிச்சிட்டே என் அம்மாவிடம், "வணக்கம். இந்தாங்க, குங்குமம் எடுத்துகோங்க... நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம் " (என் சுதந்திரத்தை கெடுத்திட்டு குங்குமம் வேற தரீங்களா...?!) நானும் வாங்கனு ஒரு வணக்கம் சொல்லி அந்த குங்கும சிமில்ல இருந்து கொஞ்சம் தொட்டு நெத்தில வச்சிட்டு "சரிம்மா நீங்க பேசுங்க, எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்" னு பேக் எடுத்து மாட்டிட்டு வெளியில் வந்துவிட்டேன்.
அந்த பெண்ணிற்கு ஒரு 30 வயது இருக்கும் அழகா அம்சமா இருந்தாங்க. அந்த பையனுக்கு அக்காவோ, அண்ணியாகவோ இருக்கலாம், அப்புறம் அந்த பையன், வயசு என்ன ஒரு 20 , 21 இருக்கும்... அந்த கலரில் ஒரு பெண் என்றால் சூப்பர் பிகரா இருப்பா...ஆனா இப்படியா கோதுமை கலரில் பையன் இருக்கிறது...சுத்தமா நல்லா இல்லை...(பசங்க கொஞ்சம் மாநிறமா, லேசா கருப்பா இருந்தா ஓ.கே, ஆனா இது ஒரு தேறாத கேஸ்...!)
அந்த பெண் சிரிச்சிட்டே என் அம்மாவிடம், "வணக்கம். இந்தாங்க, குங்குமம் எடுத்துகோங்க... நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம் " (என் சுதந்திரத்தை கெடுத்திட்டு குங்குமம் வேற தரீங்களா...?!) நானும் வாங்கனு ஒரு வணக்கம் சொல்லி அந்த குங்கும சிமில்ல இருந்து கொஞ்சம் தொட்டு நெத்தில வச்சிட்டு "சரிம்மா நீங்க பேசுங்க, எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்" னு பேக் எடுத்து மாட்டிட்டு வெளியில் வந்துவிட்டேன்.
வெளி கேட்டை திறக்கும் போது அந்த இளைஞன் பக்கம் பார்த்தேன் , இரண்டு பெண்கள் பேசும் போது நாம என்ன செய்யனு வாசலில் தொங்கிட்டு இருந்த மணி பிளானட் செடியை ஆராய்ச்சி செய்றார் போல...?!! சரியான அம்மாஞ்சி போலன்னு நினைச்சிட்டு ஒரு முறை சத்தமா "போயிட்டு வரேன்" னு கத்தினேன். "ஏண்டி இப்படி கத்துற, சரி பார்த்து போயிட்டு வா" அம்மா.
இந்த சத்தம் கூட காதில் விழாத மாதிரி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. என்ன ஜென்மமோ, இப்படி ஒரு வயசு பொண்ணு பக்கத்தில் இருக்கிறதை கூட கண்டுக்காம, பெரிய திமிர் பிடிச்சவனா இருப்பான் போல...!? சரி நமக்கென்ன வந்தது ? வாசல் கேட்டை இழுத்து அடைச்சிட்டு தெருவில் இறங்கி நடக்க தொடங்கினேன். வழி முழுவதும் எதையோ மறந்து விட்டுட்டு வந்ததை போலவே தோன்றியது.....?!!
அவஸ்தைகள் தொடரும்......
பின்குறிப்பு
(முதல் முறையாக ஒரு கதை (?) மாதிரி எழுத முயற்சி பண்ணி இருக்கிறேன்...குறை இருந்தால் தயங்காம சொல்லிடுங்க...இத்தோட இப்படி எழுதுறதை நிறுத்திக்கிறேன் ...!!?)
அவஸ்தைகள் தொடரும்......
பின்குறிப்பு
(முதல் முறையாக ஒரு கதை (?) மாதிரி எழுத முயற்சி பண்ணி இருக்கிறேன்...குறை இருந்தால் தயங்காம சொல்லிடுங்க...இத்தோட இப்படி எழுதுறதை நிறுத்திக்கிறேன் ...!!?)
பிரியங்களுடன் கௌசல்யா
Labels:
இனியது காதல்
,
காதல் தொடர்
Posted by
Kousalya Raj
comments (15)
வாசலில் பல வண்ண கோலமாம்
நடுவில் பூசணி பூ அலங்காரமாம்
மாவிலை தோரணமாம்
மஞ்சள் கிழங்கு அழகியும்
கருப்பு கட்டழகன் கரும்பும்
அருகருகே அமர்ந்திருக்க !
மண் அடுப்பில் வட்ட புது பானை
அதன் உள்ளே பச்சரிசி காதலியும்
மஞ்சள் நிறத்தான் வெல்ல காதலனும்
குதூகல கும்மாளம் அடிக்க
மெல்ல ஏலக்காயும் எட்டிபார்த்து
உற்சாகமாய் உள்ளே குதிக்க !
நெய்யுடன் முந்திரி பருப்பும்
விருப்பமாய் ஒன்று கலக்க
எல்லாம் சேர்ந்த பெருமிதத்தில்
ஆனந்த பொங்கலாம் பொங்க
சுற்றி நின்ற பாசக்கார உறவு கூட்டம்
ஆர்ப்பரித்து குலவை இட !
சிறுசுகள் "பொங்கலோ பொங்கல் "
கோஷமிட, கதிரவன் இந்த சத்தம்
கேட்டு வேகமாய் மேலெழும்ப
அதை பார்த்த மகிழ்ச்சியில்
எங்கள் கூச்சல் இன்னும் அதிகரிக்க
இதோ என் சொந்த மண்ணில்
சொந்தங்களுடன் அட்டகாசமாய்
நிறைவான மனதுடன்
பொங்கல் கொண்டாட்டம் !!
"இந்த நாளில் தூரமான உறவுகளுடன்
அன்பால் 'தை'த்து பின்னி பிணைந்து
கலந்து இருக்கவேண்டும் என்று தான்
நம் முன்னோர்கள் 'தை' என்று பெயரிட்டனரோ !?"
எல்லா வளங்களும் எல்லா இன்பங்களும் என் தமிழ் மக்களுக்கு இந்த தை திருநாளில் வந்து சேர வேண்டும் என்று மிகுந்த அன்புடன் இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
Labels:
கவிதை
,
பொங்கல் வாழ்த்து
Posted by
Kousalya Raj
comments (23)
விடியலை பனிமூட்டங்களின் நடுவே
தேட வேண்டியதாய் இருக்கிறது
விடியலாய் நீ !
பனிமூட்டங்கலாய் என் நேசம் !!
கர்வம் செதுக்கிய சிலை நீ
வானவில் வரைந்த ஓவியம் நீ
விழிகள் பேசும் மொழி நீ
மூங்கிலுக்குள் நுழையும் காற்று நீ
அதில் வெளி வரும் இசையும் நீ
பூமி நனைக்கும் மழை நீ
அதில் எழும் மண் வாசம் நீ
மலையில் பெருக்கெடுத்தோடும் ஆறாய்
பொங்கி வழியும் அருவியாய்
அது சென்று சேரும் கடலாய்
என்னிடம் வந்து சேர்ந்த உன்னை
நீயே தேடினாலும் காணமாட்டாய் !!
தேவதைகள் பொய் சொல்கிறது
உன்னை விட அவை அழகாம் !
மிகுந்த கோபம் தேவதைகளின் மேல்
உன் அழகை குறை சொன்னதிற்காக அல்ல
உன்னை ரசித்ததிற்காக !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (30)
என் மௌனம் எனக்காய்
உன்னிடம் சண்டை பிடிக்கிறது
மௌனமே பதிலாய் வரும்
என்பதை அறியாமல் !!
உன் கை பிடித்து மழையில் நடக்க
கனா நிதம் கண்டும்
மழை வந்துவிட்டது
நீ....!!?
உன் நினைவுகள் எப்போதும்
எனக்கு !
என்னை தவிர
அனைத்தும்
நினைவாய் உனக்கு !?
தீபம் நீ !
உன்னில்
எரிந்து போகும்
விட்டில் பூச்சியாகி
போனேன் நான் !!
இறுதிவரை உறுதியாய்
இருப்பேன் என்றாய் - யார்
இறுதி வரை என்று - என்
இறுதி யாத்திரையில்
தெரிந்துவிட்டது !!?
எழுதப்படாத காகிதமாய்
பிரிக்கப்படாத புத்தகமாய்
வாசிக்கப்படாத கவிதையாய்
வெறுமையாய்,
செல்லரித்துப் போன என் காதல் !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (38)
கருத்தை கருத்தாய் கவர்ந்தவனே !
கவிதையாய் வலம் வருபவனே !
கள்குடித்த வண்டாய்
என் மனதை மாற்றியவனே !
மனதில் எழுதி வைத்த அவன் பெயரை
ரகசியமாய் தனிமையில்
உச்சரிப்பதை கண்டு மொட்டை மாடி
சுவர்களும் சிரிக்கிறதே
நான் ஒரு கோழை என்று !!
மலர்ந்த ரோஜா இதழ் தொட்டு
அவன் ஸ்பரிசம்
உணர்ந்து ரசிப்பதை பார்த்த
ரோஜாவும் பரிகசிக்கிறதே
நான் ஒரு பேதை என்று !!
ஒன்றும் ஒன்றும் இரண்டாம்
உன்னை கண்டதும் ஒன்றே என்றேன்
உன்னை கண்டதும் ஒன்றே என்றேன்
எதிர் வீட்டு சுட்டி குழந்தை
சத்தமாக சொல்கிறது
நான் ஒரு முட்டாள் என்று !
பரவாயில்லை
சொல்லிவிட்டு போகட்டும் !
எல்லா வருத்தமும்
தொலைந்து தான் போகிறது
தொலைந்து தான் போகிறது
நீ என் பெயர் சொல்லி
அழைக்கும் போது !!
அழைக்கும் போது !!
*****************
உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !!
*****************
Labels:
காதல் கவிதைகள்