Posted by
Kousalya Raj
comments (19)
தகிக்கும் என்
தனிமைக்கு
தீர்வு கேட்டேன் உன்னிடம்
வருந்தாதே பேசுகிறேன்
என தொலைபேசி, எதிர்பாரா பொழுதில்
என் உயிர் கொய்து
சிரித்து கொண்டே செல்கிறாய் !
மீண்டும்
உன் மன கருவறையில் ஜனித்து
உன் விழி பார்வையால் பிறக்கின்றேன்
மரிக்கிறேன் பின் பிறக்கிறேன்
உன்னால் எனக்குள்
எத்தனை இறப்புகள் ?
எத்தனை பிறப்புகள் ?
உன் நினைவு பூக்களின் வாசம்
என் சுவாசம் !
எத்தனை இறப்புகள் ?
எத்தனை பிறப்புகள் ?
உன் நினைவு பூக்களின் வாசம்
என் சுவாசம் !
நான் உலகை நீங்கிய பின்னும்
என் காதலை
கவிதையில் வாழவைக்கும்
இணையம்
குலதெய்வமாகி போனதே !!
என் காதலை
கவிதையில் வாழவைக்கும்
இணையம்
குலதெய்வமாகி போனதே !!
*************
காதல்
பலரை சிதைக்கும்
என்னை செதுக்குகிறது
காதலன் நீ என்பதால் !!
*************
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (23)
வார்த்தைகளற்ற வெற்றிடத்தை
உன் நினைவுகள் இட்டு
நிரப்புகின்றேன் !
அந்நினைவுகள் கொன்று
மௌனவலிக்கு மருந்திட்டு
ஆற்றுகிறேன் !
நம் புரிதல் பெரிது
என் இறுமாப்பை உடைத்தெறிந்தது
இப்போது விழுந்த மெல்லிய திரை
திரை கிழித்தெறிய
உரிமையில்லை எனக்கு
மனமில்லை உனக்கு !
எனக்கு பிடிக்காத மௌனம்
உனக்கு பிடிப்பதால்
ஏற்று கொள்கிறேன்
உயிர் வதைக்கும் வலியை !
என்னிடம் இருக்கட்டும்
உன்னை பற்றிய கற்பனைகள்
அழிக்க சொல்லிவிடாதே
அதையும் !
எனது உயிர் இயக்கம்
நடந்தாக வேண்டும்
என்னிதயம் சுற்றுகிறது
உன்னை !
சிற்பி நீ தரும்
மௌன வலி பொறுத்து
சிலை ஆவேனே தவிர
வலி பொறுக்காமல்
மிதிபடும் வாயிற்படி
கல்லாக மாட்டேன் நான் !
மன்னித்துவிடு
நாம் பேசாத போது
என் பேனா பெரும்பாலும்
இப்படிதான் எழுதுகிறது !
**************
Labels:
கவிதை காதல்
Posted by
Kousalya Raj
comments (18)
எங்கிருந்தோ வந்து
இதோ இருக்கிறேன் என்றாய்
அன்பை வாரி இறைத்து
என் இதயம் கவர்ந்தாய்
பேசாத நாட்களிலும்
மயிலிறகாய் என் இதயம்
தொட்டு செல்வாய் !
முதல் முறை
உன் குரல் கேட்டு
மிக வியந்தேன்
என் இரு
காதில் ஒலித்தது
வீணையின் நாதமா
காயத்ரி மந்திரமா
குழந்தையாய் நீ
சிணுங்கும் சிணுங்களில்
அள்ளி கொஞ்ச தோன்றுமடி
என் செல்லமே !
உனக்கு பிறந்தநாளாம்
ஆனந்தத்தில் வாழ்த்த
வார்த்தை வரவில்லையடி
அழகு தேவதையே !
உன் தாயை
வாழ்த்துகிறேன்
நான் கேளாமல்
தங்கை என்ற பொக்கிஷத்தை
அள்ளி தந்தவள் அல்லவா !
நம்மை இணைத்தது
இணையமா
இதயமா ?!
இன்று உனக்கு பிறந்த நாள்
உன்னை வாழ்த்தவா
இந்த நாளை வாழ்த்தவா
நீ மட்டுமா பிறந்தாய்
உன்னுடன் கவிதையும் !
இல்லை நீயே கவிதை
உயிருள்ள கவிதை நீ !!
இன்று பிறந்த நாள் காணும் என் அருமை தங்கை காயத்ரியை (கவிநா) வாழ்த்துகிறேன். வாழ்வில் பல செல்வங்களை குறைவின்றி பெற்று நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
Labels:
வாழ்த்து கவிதை
Posted by
Kousalya Raj
comments (16)
காலை விழித்ததும்
முதலில் உன் விழி பார்க்கும்
உள்ளங்கை ரேகையாய் !
குளியலில்
உன் இதயம் தொட்டு
வழிந்தோடும் நீராய் !
அலைபாயும்
உன் அழகு தலை முடி
கோதும் சீப்பின் விரலாய் !
அணியும் உடையின்
இணைப்பில் பிரிந்திருக்கும்
சிறு நூல் இழையாய் !
அவசரமாய் உண்ணும்
காலை உணவின்
ஒரு துளி உப்பாய் !
பயண வழி நெடுகிலும்
பயண வழி நெடுகிலும்
உன்னை தழுவி செல்லும்
குளிர்காற்றாய் !
இன்னும் எதிர்படும்
யாவுமாய் நான் மாற
யாவுமாய் நான் மாற
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (41)
சொற்கள் கூடிக் களித்தே
பிரசவிக்கின்றன
கவிதைகள்...
கவிதைகள்
கொஞ்சிப் பேசி வளர்த்தன
காதல்...
காதல்
ரசித்து கொண்டாடின
இரு உள்ளங்கள்...
இரு உள்ளங்கள்
கூடிக் களித்து பிரசவிக்கின்றன
கவிதைகள்...
மீண்டும்.....தொடருகின்றன
கவிதைகளும் காதலும் !!
************
கார் கதவில்
படிந்த தூசி
பிடித்திருக்கிறது
உன் பெயர் எழுதி
தூசி விலக்கி
பதிந்து கொண்டேன்
உன்னை !
காசோலையில்
கையெழுத்திடும் முன்
மிக யோசிக்கிறேன்
எனது பெயர் என்ன !?
************
சகிக்கிறேன்
பிறர் மீதான உன் அன்பை !
மறைக்கின்றேன்
அதன் மீதான கோபத்தை !
************
உனக்கு
************
உனக்கு
எல்லோரும் தேவை
எனக்கு நீ மட்டும்
பொதுநலம் நீ
சுயநலம் நான் !
படம் - நன்றி கூகுள்
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (12)
ஆசையாய் அள்ளி பருகுவேன்
அது தந்த மயக்கத்தில்
வரும் என் உளறல்கள்
உன் செவி சென்று சேருமோ
வழியில் மதிமயங்கி
கிடக்குமோ !
நேசத்தால்
தொட்டில் கட்டி
என்னை
குழந்தையாக்கி
குழந்தையாக்கி
உறங்கவைத்து
நீ விழித்திருக்கிறாய்
இன்னொரு விடியலாய் !
என் சிறுபிள்ளை
பேச்சை
பொறுமையாய்
உள்வாங்கும் உன் முன்
மண்டியிட
தோன்றுகிறதே என் அன்பே.....
விஸ்வரூபமெடுத்து
நிற்கும் உன்முன்
சிறகுகள் வேண்டி காத்திருந்தேன்
பிறிதொரு சந்தர்ப்பத்தில்
நெடுந் தவத்தின் முடிவில்
சிறகுகள் பூட்டிவிட்டாய்
எனக்கான வெளி
கண் முன் விரிய
கண் முன் விரிய
மூடியிருந்த கட்டுகள் உடைத்து
தழுவியிருந்த வாதைகள் உதறி
உற்சாகமாய்
பறக்கத் துடித்தேன்
இருந்தும் இயலவில்லை
விட்டுவிடேன்...
நீ பிடித்து
வைத்திருக்கும்
என் மனதை !
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (18)
பிறந்தாள் ஒரு குட்டி தேவதை
பெருமூச்செறிந்து
பிறவி பயன் அடைந்தாள் தாய் !
கையில் ஏந்திய அக்கணமே
தந்தைக்கு தாயான மகளே...!
மூடிய இமைக்குள்
அலையும் விழிகள்
யார் முகம் காண...
உன் பிஞ்சு விரல் நீவி
பேரின்பம் பெற்றது
பெற்றவளா ?பெற்றவரா ?
யார் முதலில்...?!
இனி உன்னை சுற்றியே சுழலும்
அவர்கள் உலகம்...
இனி உன் சொல் கேட்டு நடக்கும்
அவர்கள் காலம்...
இனி உன் கொஞ்சு மொழியே
அவர்கள் கீதம்...
இனி உன் அழகையே பாடக்கூடும்
அவர்கள் தமிழ்...
அன்னையின் சாயலை
உன்னிடம் தேடியவர் புரிந்திருப்பார்
நிழலாய் வலம் வந்த அன்னை
நிஜமாய் அவர் முன்னே !
தாயவள் நீவளர தருவாள் தாய்பால்
தந்தையவன் நீஉயர ஈவான் தமிழ்பால்
இருபாலும் உண்டு சீருடனே
பேறு பல பெறுவாய் !
வாழிய மகளே !
வாழிய பைந்தமிழாய் !
நேற்று நண்பர் ஜாக்கி சேகர் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.....அந்த குட்டி குழந்தையை வாழ்த்தியே எனது இந்த எளிய கவிதை.....
வாருங்கள் வாழ்த்துவோம் ! மகிழ்ந்து சிரிக்கட்டும் தேவதை !!
Labels:
வாழ்த்துக்கவிதை
Posted by
Kousalya Raj
comments (13)
ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு இருப்பதால் தான் இந்த மானுடம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அன்பிற்கு பல அர்த்தங்கள், அதில் ஒன்று காதல். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குள் இருக்கும் காதல் தினம் புதிதாய் என்னை பூக்கவைத்து பார்த்து ரசித்து கொண்டாடுகிறது...!
சில சமயம்,
ஒரு கவிதையில்
அடைத்துவிட முடிவதில்லை
என் காதலை !
தவிரவும் எந்த ஒரு கவிதையும்
முழுமையாய்
சொன்னதும் இல்லை
என் காதலை !!
வெறும் மாம்சங்கள் மீதான காதல் அல்ல, இரு ஆன்மாவிற்கும் இடையேயான உறவு அல்லவா ?!
பிறர் நம்மை நேசிப்பதில் மட்டும் நேசம் இல்லை
நாமும் நேசிப்பதில் இருக்கிறது.....! அன்பை கொடுக்கவும், எடுக்கவும் எனக்கு இருக்கும் உரிமை பறிபோகாதவரை நான் நேசிப்பேன் என்பது ஒரு விதம், உரிமை இல்லாமல் போனாலும் நேசிப்பேன் இது என் நேசம்.....!
நேசிப்பதற்கும், நேசிக்கபடுவதிற்க்கும் பெரிய தேவைகள், எதிர்பார்ப்புகள் வேண்டியதில்லை, தூய்மையான அன்பு இருந்தால் போதும்.
எனக்கு பிடித்த இசையாய், பாடலாய் எனக்குள்ளே தாலாட்டி என்னை உறங்க வைக்கிறது என் காதல் ......ஒரு தாய் போல் தேற்றுகிறது.....சில நேரம் அழவும் வைக்கும், பின் பிறர் அறியா வண்ணம் வந்து கண்ணீரை துடைத்து விட்டும் செல்லும்...!?
வருடம் ஒன்று கூடினாலும் வயதை குறைக்கிறது என் காதல் !!
வருடம் ஒன்று கூடினாலும் வயதை குறைக்கிறது என் காதல் !!
காதலில் தோல்வி
சாத்தியம் இல்லை
ஒரு முறை
பெற்ற வெற்றிக்கு
தெரியாது
தோல்விக்கு அர்த்தம் !
பறக்க தெரியும்
திசை தெரியாது
இலவம் பஞ்சாம்
என் காதல் !!
எனை ஆளும் திமிரே ! வசந்தத்தை அறிமுகம் செய்தாய் என்றே இருந்தேன் வசந்தமே நீ என்பதை உணராமல்...!
நேசம் என்ற பெயரில் எப்போது விழுந்தாய் என்னுள் !?
சரியாய் அந்நேரம் நான் பிறந்திருப்பேனோ !?
காதலுக்கு புது அர்த்தம் சொல்றோம்...நம் நேசம் காதலின் வரையறைக்குள் அடங்காது எனினும் இதன் எல்லைகளை நாமே வரையறுத்தோம் ....சராசரி காதலின் விதிகளுக்கு முரண் பட்டதாலேயே இது கண்ணிய காதலாக இருக்கிறது !
சராசரி காதலர்கள் அல்ல
காதலும் சராசரி அல்ல
எது சரி
கேள்வி எழவில்லை
எல்லாம் சரி என்கிறது என் காதல் !!
அடங்க மறு அத்து மீறு
என்கிறது கம்யூனிசம் !
அத்து மீறாமல் அடங்கி போ
என்கிறது என் நேசம் !!
தோற்க பிடிக்கிறது
உன்னிடம் மட்டும்
உன் வெற்றி ரசிக்க !
சரணடைய பிடிக்கிறது
சமாதானத்திற்கு அல்ல
மறுபடி
செல்லச்சண்டை போட !
விலகி இருக்க
எண்ணம் வந்த
மறுநொடி
அதிகமாய்
நெருங்குவேன் உன்னை !!
பல கவிதைகளில் நான் அள்ளி இறைத்த காதலை, மௌனமாய் உள் வாங்குவாய் ஒரு ஓரமாய் நின்று, தவறியும் உன் இதழ் உச்சரித்ததில்லை 'நேசிக்கிறேன் உன்னை' என்று !
நான் புரிந்து கொள்வேன், அழுத்தமாய் என் பெயர் சொல்லி அழைக்கும் போது அதை தான் நீ சொல்கிறாய் என்று !!
இரு
தீக்கடைக்கோல்
உரசி
பனி மழை
பொழிகிறது !?
மீண்டும் மற்றொரு கவிதையில் சந்திப்போம்.....
Labels:
கவிதை மாதிரி
,
காதல்