Posted by
Kousalya Raj
comments (12)
ஊர் மாற்றலாகி
என் வகுப்பில் வந்து சேர்ந்தாய்
படிப்பில் இருவருக்கும்
சரிக்கு சரி போட்டி
தேர்வில் நீ வெற்றி பெற
முதல் இடம் போனதில்
முழுநாள் பட்டினி
எப்படியோ தெரிந்து
வந்து பேச்சு கொடுத்தாய் !
அதன் பின்...
படிப்பில் இருவருக்கும்
சரிக்கு சரி போட்டி
தேர்வில் நீ வெற்றி பெற
முதல் இடம் போனதில்
முழுநாள் பட்டினி
எப்படியோ தெரிந்து
வந்து பேச்சு கொடுத்தாய் !
அதன் பின்...
வகுப்பு தலைவன் தேர்தல்
என் தோழியரை கெஞ்சி
ஓட்டுபோட வைத்தேன் !
வெற்றி கிடைத்தது
வெற்றி கிடைத்தது
தோழிகளுக்கு நன்றி சொல்லி
என் நெஞ்சில் நெருப்பை வார்த்தாய் !
மதிய இடைவேளை
என் டிபன் பாக்ஸ்
ஒளித்து உன் உணவை
சாப்பிட வைக்கும் மர்மம்
அறிந்தும் அறியாதவளாய்
அறிந்தும் அறியாதவளாய்
மிச்சம் இன்றி காலி செய்வேன் !
பிறந்த நாளுக்கு
எனக்கு பிடித்த
கண்ணாடி வளையல்
எனக்கு பிடித்த
கண்ணாடி வளையல்
வாங்கித் தந்து
ஒரு சந்தர்ப்பத்தில்
ஒரு சந்தர்ப்பத்தில்
நீயே உடைத்து அழவைத்தாய் !
ஒருநாள் பென்சில் தேடி
உன் பிளாஸ்டிக் பாக்ஸ் திறக்க
சிரித்தன உடைந்த
வளையல் துண்டுகள் !
வளையல் துண்டுகள் !
தேர்வில் ஒரு பாடத்தில்
குறைந்த மதிப்பெண்கள்
வாத்தியாருடன் நீ வாதம்
நான் சரியாக எழுதவில்லை
அவர் என்ன செய்வார்
புரியாது உனக்கு
நேசம் வைத்து
முட்டாள் ஆனவன் நீ !
வீட்டிற்கு வரும் வழியில்
நேசம் வைத்து
முட்டாள் ஆனவன் நீ !
வீட்டிற்கு வரும் வழியில்
கல் தடுக்கி என் காலில் ரத்தம்
நீ துடித்த துடிப்பு
பசுமையாய் இன்றும்
அடி படும் போதெல்லாம் !!
பசுமையாய் இன்றும்
அடி படும் போதெல்லாம் !!
நேற்று
ஷாப்பிங் மாலில்
என் மகனுடன் நான்
முதுகில்
குறுகுறுக்கும் பார்வை
திரும்பிய திசையில்
குறுகுறுக்கும் பார்வை
திரும்பிய திசையில்
மகள் மனைவியுடன் நீ !
உறைந்து நின்ற
என் அருகே வந்தாய்
என் அருகே வந்தாய்
இருவர் விழிகளும் மிக சரியாக
வாங்கி கொண்டன அடுத்தவரை !
மகள் பெயர் என்ன
என் மன வரி எப்படி படித்தாய்
'பொண்ணு பெயர் வர்ஷா'
என்றாய் !
சிறு ஏமாற்றம் எனக்கு
பின் யதார்த்தம் உணர்ந்து
மௌனமாய்
நொடிகள் கரைய
சட்டென்று
என் விழி ஆழமாய் பார்த்து
'இவள் என் மனைவி'
என்றாய் !
சிறு ஏமாற்றம் எனக்கு
பின் யதார்த்தம் உணர்ந்து
மௌனமாய்
நொடிகள் கரைய
சட்டென்று
என் விழி ஆழமாய் பார்த்து
'இவள் என் மனைவி'
என் பெயர் சொல்லி
உன் மனைவியை
அறிமுகம் செய்கிறாய் !
உன் மனைவியை
அறிமுகம் செய்கிறாய் !
**********
Labels:
கவிதை மாதிரி
,
முதல் காதல்
Posted by
Kousalya Raj
comments (21)
கடும் வெயில்...
என் மீது மழை பொழிந்தது !
இலையுதிர்காலம்...
என் தோட்ட
கொன்றை மரம் பூத்தது !
அப்போது
என் வாழ்வில் நீ வந்தாய் !!
என் வாழ்வில் நீ வந்தாய் !!
பேருந்து
ஜன்னலோர தனி பயணம்
மிக பிடித்ததாயிற்று
எல்லா பயணமும்
உன்னை நெருங்க எடுக்கும்
பிரயத்தனம் என்பதால்!
பயண வழியெங்கும்
உன் முகம் தோன்ற
ரசித்து ரசித்து வலிக்கும்
மனகண்ணுக்கு களிம்பு பூசட்டும்
சிறு புன்னகை சிந்தேன் !
நீ அழைக்கும் போதெல்லாம்
செல்பேசியுடன் மொட்டை மாடி
விரைந்து ஓடுவேன்
குரலுடன்
உன்னை சுவாசிக்க !
உன்னை சுவாசிக்க !
இரவில் நீ
பேசும் பேச்சுக்கள் தானே
மறுநாள் பகலில்
என்னை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது !
எரிமலை வெடித்து
நதி பெருக்கெடுக்கும் !
பாலையில்
நீரூற்று புறப்படும் !
எதுவும் மாறும்
என்னை தவிர...
அப்போதும்
உன்னை காதலிப்பேன் !
...
...
...
உன்னை எனக்கு மிக பிடிக்கும் !!
மறுநாள் பகலில்
என்னை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது !
எரிமலை வெடித்து
நதி பெருக்கெடுக்கும் !
பாலையில்
நீரூற்று புறப்படும் !
எதுவும் மாறும்
என்னை தவிர...
ஒருநாள் உனக்கு
என்னை பிடிக்காமல் போகும் அப்போதும்
உன்னை காதலிப்பேன் !
...
...
...
உன்னை எனக்கு மிக பிடிக்கும் !!
படங்கள் -கூகுள்
Labels:
காதல்
Posted by
Kousalya Raj
comments (19)
தெரிந்திருந்தால்
நெருப்பில் வேகவைத்து
பரிமாறியிருப்பேன் மனதை !
நம்பிக்கையற்று போவாய்
தெரிந்திருந்தால்
தீயில் குளிக்க வைத்து
உடுத்தி இருப்பேன் காதலை !
உன் பாதை எங்கும்
பூத்தூவி பார்த்துக்கொண்ட நான்
உன் மனதை கறை படியாமல்
கவனிக்க தவறிவிட்டேன் !
நீ தூங்கும் அழகை
மனக்கண்ணால் கண்டு
இமைகளால் தாலாட்டுவேன்
ஒரே சொல்லில் என்
விழிகளை பிடுங்கி எறிந்துவிட்டாய் !
விரும்பி உன்னில் தோற்று போனேன்
விருப்பமின்றி விலகி போகிறேன்
ஒருவருக்காக ஒருவர் மறந்துவிடுவோம்
நம் காதல் தானாகவே இறந்துவிட கூடும் !
செல்லரிக்காத காதல் என்றாய்
சொல்லடித்து செத்துப்போன காதலை
என்றாவது ஒருநாள்
மயானத்தில் தேடுவோம் !
கண்டுபிடித்தால் மீண்டும்
குழிதோண்டி புதைத்துவிடுவோம்
வேண்டாம் எரித்துவிடுவோம்
தற்கொலை செய்த காதல்
ஆவியாய் அலைய கூடும் !!
Labels:
கவிதை
Posted by
Kousalya Raj
comments (16)
நேற்று
நீ பேசுகிறாய்
ரசிக்கிறேன்
நீ சிரிக்கிறாய்
மிதக்கிறேன்
நீ அழைக்கிறாய்
கிறங்குகிறேன்
நீ சிணுங்குகிறாய்
உளறுகிறேன்
நீ ரசிக்கிறாய்
சிலிர்க்கிறேன்
இன்று
நீ யோசிக்கிறாய்
யாசிக்கிறேன்
நீ மறுக்கிறாய்
துடிக்கிறேன்
நீ மௌனிக்கிறாய்
தவிக்கிறேன்
நீ எழுதுகிறாய் யாருக்கோ
படிக்கிறேன் விழி நீரை மறைத்தபடிஉன்னால் கொல்லப்பட்டும்
உன் நினைவுகளினால்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !!
படம் : நன்றி கூகுள்
Posted by
Kousalya Raj
comments (11)
காயும் நிலவு, சுழன்றடிக்கும் புயல்
எதிலும் பெண் வடிவம் கண்டு மகிழ்ந்தவன்
பின் தன்தன் மனை மதியாமல் போனானே !
கல்வி கற்ற கலைமகளை விட
கை நிறைய பொருள் கொணரும்
திருமகள் தேவை என தேடியவன்
அதிலும் திருப்தி அடையாமல் போனானே !
தேவதை போலொரு மனைவி
அடைந்தால் சுவர்க்கம் வேறில்லை
தலையில் வைத்து கூத்தாடியவன்
பின் சந்தேகக்கண் கொண்டு எரித்தானே !
அன்புக் கடங்குவதிலும்,
துன்பத்தில் இன்பம் கண்டவள்
இவள் போல் யார் என்றவன்
அதிலும் பெண்மை உணராமல் போனானே !
இதுவே பெண்மையின் விதி
தலை கவிழ்ந்தது முடியுங்காலம்
வந்ததம்மா - 'வென்றிடும் பெண்மை'
எங்கோ தூரத்தில் ஒரு குரல்.....
ஏனோ எனக்கு மட்டும் கேட்கிறது !!
ஏனோ எனக்கு மட்டும் கேட்கிறது !!
படம்- கூகுள்
Posted by
Kousalya Raj
comments (10)
அழைக்கிறார்கள்
உன்னை உரிமையாக !
யாரோ
உறவாடுகிறார்கள்
உன்னுடன் அன்பாக !
யாரோ
விசும்புகிறார்கள்
நீ பேசவில்லை என !
யாரோ
மௌனிக்கிறார்கள்
நீ கடிந்துக் கொண்டதால் !
யாரோ
எனதென்கிறார்கள்
உன் உடமைகளை !
யாரோ
சண்டையிடுகிறார்கள்
உனக்கு பரிந்து கொண்டு !
சகித்துக்கொண்டு
உன் தோள் சாய்ந்தேன்
மௌனமாக !
இன்று என்னை யார்
என்கிறார்கள் !?
என்கிறார்கள் !?
அறிவார்களா
உன் உயிரின் ஓரம் நான் என்பதை !!
உன் உயிரின் ஓரம் நான் என்பதை !!
படம் - கூகுள்
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (14)
புது மணம் முகர்ந்து
முகத்தோடு ஒற்றி மகிழ்ந்தேன் !
பளபள மேனி அழகு வியந்து
பிடித்த இடத்தில் அமர வைத்தேன் !
மெல்ல என் விரலால்
தொட்டு வருடி ரசித்தேன் !
புரட்டி பார்க்க
ஆவலாய் காத்திருந்தேன் !இன்றோ
திட்டித் தீர்க்கின்றன.....
இன்னும்
திறக்கப் படாத புத்தகங்கள் !?
திறக்கப் படாத புத்தகங்கள் !?
உன்னை படித்து கொண்டிருக்கிறேன் நான் !
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (14)
இது சரியில்லை
அது சரியில்லை
இவன் எதுக்கும் லாயக்கில்லை
அவன் ஒரு உதவாக்கரை
இரவு பகல்
ஓய்வின்றி
சலிப்பின்றி சொன்னேன்
அலுக்கவில்லை எனக்கு !
..............
நான்
கொஞ்சம் மாறியிருக்கலாம்
தவறில்லை
தாமதமாக புரிகிறது
மரணபடுக்கையில் !!
**************
லட்சத்தில் ஒரு துளி
போகட்டும்
விட்டுவிட மனமின்றி
எழும்முன் விரைந்து
அடித்து கொன்று
சிரிக்கிறது மிருகம் !
செத்துக்கிடக்கிறது
கடித்த கொசு !!
Labels:
கவிதை மாதிரி
,
மனிதம்
Posted by
Kousalya Raj
comments (11)
நம்பிக்கையற்ற தீயில்
பொசுங்கிப்போன
மென் உணர்வுகளில் !
நிராகரிக்கப்பட்டு
திரும்பிய நேசம் பிளந்த
வெடிப்பில் !
இன்பச்சுமை நீயென
சுமந்து தீர்த்து வலிகண்ட
உயிர்கூட்டில் !
உன்னை விடுத்து வேறெதையும்
சுவாசித்தறியா நாசியின்
வெம்மையில் !
வேடந்தரித்து
பேசத்தெரியா இயல்பின்
கோபக் கதிர்வீச்சில் !
.............
மரணித்துவிடுகிறது
'காதல்' எனும் மாயை !!
Labels:
காதல் கவிதைகள்
,
மாயை